முழு பயிர்கடன் தள்ளுபடி கோரி கோணிப் பைகளை அணிந்து விவசாயிகள் தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட...
“யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. இதில் திமுக பங்கேற்காது” என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி,...
பழநி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய நபரான வழக்கறிஞர் அன்வர்தீனின் திடீர் உயிரிழப்பால் சிபிசிஐடி போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரப் பகுதியில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்தது தொடர்பாக, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை...
“சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு எஃப்சிஆர்ஏ (FCRA ) மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்பப்பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்ற, கழக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், 6.8.2026...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நீதிபதிகளாகவும், கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இந்திய குடியரசுத் தலைவரால் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும்
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவிக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன்,...
முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரியை வழக்கை, அவரது மனைவி சங்கீதா திரும்பப் பெற்றார். இதனால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தெரிவித்தார்.
விவாகரத்து...
“நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கருணாநிதி” – 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்டாலின் புகழாரம்
admin - 0
“அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி” என தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர். ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர். 13 முறை சட்டமன்ற உறுப்பினர். தமிழகத்தின்...
“இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு பாசனத்தை நம்பி 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அதில் ஒரு லட்சம் ஏக்கர் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாதிக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு சேதமடைந்த பயிர்களுக்கு, உரிய அதிகாரிகளை அனுப்பி கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் தண்ணீர் இன்றி...
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இளைய தலைமுறையின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த தவெக ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கும்; அரசு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் எதிராக அரசின் பல்வேறு சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன....
"ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது. வெற்றி 150 நாள் திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசிடம், தவெக அரசு சரணடைந்து விட்டது. எப்படி தேர்தலில் சத்தமே இல்லாமல் வந்தீர்களோ, அது போல சத்தமே இல்லாமல் மத்திய அரசிடம் சரண்டர் ஆகிவிட்டீர்கள்" என திமுக எம்.எல்.ஏ ரகுபதி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, “நிதிநிலை அறிக்கையில்...










