வார கடைசி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 885 பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகூர்த்த தினமான இன்று (4-ம் தேதி) மற்றும் வார கடைசி நாட்களை முன்னிட்டு (5, 6, 7 தேதிகள்) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும்...
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது பரபரப்புச் செய்தியாக இருக்கும் நிலையில், “அவர் தனிக்கட்சி முடிவில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்போது அவர் அறிவிக்கப் போவதில்லை. புதன் மாலை 7 மணி வரைக்கும் டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்கு அண்ணாமலை ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கவில்லை. அதனால் இன்று அவர் சென்னை வருவதே சந்தேகம் தான்” என்று உறுதிபடச் சொல்கிறார்கள்...
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்துக்கு பிரத்யேக இணையதளம்: அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்
admin - 0
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் கடந்த 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது சென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளர் மேலாண்மையில் பிஏ, எம்ஏ மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2001 முதல் முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி) மேற்கொள்வதற்கான ஆராய்ச்சி நிலையமாகவும்...
எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது, சிலிண்டர் வெடித்து தொழில்நுட்ப கலைஞர் உயிரிழந்தார். திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, 10 வருடங்களுக்கு முன்பு ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அதற்கு பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது, அவர் ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இதில், ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார்.
ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஏஞ்சல் ஸ்டுடியோஸ்...
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்” – முதல்வர் விஜய் வாழ்த்து
admin - 0
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று (ஜூன் 4) திறக்கப்பட்டன. தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கத்தைவிட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம்...
பாலியல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரபு நாடு போல பொது இடத்தில் தண்டனை கொடுக்க வேண்டும்: பிரேமலதா கருத்து
admin - 0
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குடியில் குரு பகவான் சந்நிதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு திருப்தி இல்லை என்பதால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியின் கையை முறுக்கி ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்து விட்டதால் தவெகவினர்...
தமிழக எல்லை மறுவரையறை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மற்றும் எல்லை மறுவரையறை ஆணைய தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்தல், அதன் தொடர்புடைய வார்டு எல்லை மறுவரையறை செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து...
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(37). அதிமுகவில் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளராக இருந்து வந்த இவர், அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதற்குமுன் அவர் பதிவுசெய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியான நிலையில் மற்றொரு வீடியோ தற்போது பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்குத்தான் இந்தப் பதிவு....
“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் இந்தக் கருத்தால் திமுக முகாம் தகித்துக் கொண்டிருக்கிறது.
தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை வைகோ வரவேற்று வழியனுப்பிய உற்சாகத்தைப் பார்த்ததுமே இவர் இனி நம் பக்கம் தங்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, அதற்காக கவலைப்படவும் இல்லை. ஆனால், துரை...
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார்.
அதேபோல் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்து பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி...










