பாலஸ்தீனத்தில் 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு: 2023-ல் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்
admin - 0
கடந்த 2023, நவம்பர் 22-ம் தேதி அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. இதையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களில் சுமார்...
எங்கள் ஆட்சிக்கு எதிரான சதி தான் வங்கதேசத்தில் கடந்த 2024-ல் நடைபெற்ற மாணவர் போராட்டம் என்று ஷேக் ஹசினா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சங்க நிகழ்வில் ஒலி வடிவில் தனது கருத்துகளை ஷேக் ஹசினா பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த 2024-ல் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. அது எங்கள் ஆட்சிக்கு எதிரான சதி தான். அது திட்டமிடப்பட்டது. ஜனநாயக முறையை கடந்து புதிய ஆட்சியை அமைக்க...
ஈரான் உடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் ஈரானுக்கு அருகிலுள்ள வடக்குக் கடல் பாதை வழியாகவும், வெளியேறும்...
“மேற்காசியாவில் உள்ள நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது சென்ற வார இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனால் மேற்காசியாவில் மோதல் தீவிரமடையும் சூழல் உருவானது....
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் ‘தேர்தல்கள்’ முழுமையான கேலிக்கூத்து என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 10 என மூன்று கட்டங்களாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் தேர்தல்கள் ஒரு முழுமையான கேலிக்கூத்து. உண்மையில் அங்கு...
இந்தியாவுடனான எல்லையை ஒட்டிய நேபாளத்தில் பல நாட்களாக நீடித்த மதக் கலவரம் கட்டுக்குள் வந்ததால் அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது.
இந்திய எல்லைக்கு அருகே நேபாளத்தின் கோஷி மாகாணம் சுன்சாரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26-ம் தேதி 2 சமூகத்தினர் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
அப்போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது மற்றும் மதக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே மதக் கலவரம் வெடித்து, 3 பேர் உயிரிழந்தனர். கலவரம் பாதித்த...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த மக்கள் கிளர்ச்சி – பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையின் பின்னணி
admin - 0
1990-களில் ஜம்மு - காஷ்மீர் மசூதிகளில் நள்ளிரவுகளில் இமாம்களால் சத்தமிட்ட ஒலிபெருக்கிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இங்கு அல்ல; இப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்தும் அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்று திரளுங்கள் என முசாபராபாத்தைச் சேர்ந்த இமாம்கள் (மத குருமார்கள்) ஒலிபெருக்கியில் மக்களைத் தீவிரமாக அழைக்கிறார்கள்.
கடந்த 1990-களில் இதே மசூதிகளில்தான் இரவு நேரங்களில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும், மதப்பிரச்சாரங்களும், பண்டிட்களுக்கு எதிரான மிரட்டல்களும்...
18 வயதில் உலகின் இளம் பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்களில் உலகின் மிக இளம்வயது பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், 306 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்குமுன், 1717-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் பேராசிரியர் பதவியேற்று ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கோலின் மெக்லாரின் மிக இளம்வயது...
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய வளங்கள் ஆகும்.
எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன்,...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக பேரணி: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு
admin - 0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான பேரணியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, நிர்வாக அலட்சியம், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் பாகுபாடு மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராக, கடந்த மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்குமாறு கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி)...










