முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன், 1979 நவம்பர் 20-ம் தேதி மெக்காவிலுள்ள கிராண்ட் மசூதியை 600 பேர் கொண்ட ஆயுதக் குழுவினர் முற்றுகையிட்ட நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. 1979-ல் காபாவைச் சுற்றி அமைந்துள்ள கிராண்ட் மசூதியான மஸ்ஜித் அல் ஹராமில் விடியற்காலை தொழுகை முடிந்த...
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் திருமணமான 17-வது நாளிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் வசித்து வந்தவர் 28 வயதான முகமது ஜாபர் ஹுசைன். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். 2021-ல் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முகமது ஜாபர், படிப்பை முடித்த பின்னர் அங்கேயே சிவில் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இவருக்கு...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் சுங்க வரி விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிக்கும் ‘லின்ட்சே ஓ கிரகாம் சட்டம் 2026’ மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262 - 159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 7-ம் தேதி இந்த...
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு போன்ற கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அமைச்சரவைப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டது.
உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த விதிகளின்படி, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது....
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 93 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 93 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இந்த ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஆளும் தேசிய கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சியான தொழிலாளர்...
ஈரான் போரால் கடந்த 5 மாதங்களில் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் பாதிப்புகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (சிபிஓ) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் அதிநவீன ஏவுகணைகள், வெடிகுண்டுகளை பயன்படுத்தி உள்ளது.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தாக்குதலுக்கு மட்டும் 50-க்கும் மேற்பட்ட டோமாஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு...
சவுதி அரேபியா, ஹவுதி இடையே போர் தீவிரமடைகிறது: புனித மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
admin - 0
சவுதி அரேபியா, ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படை இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. புனித மெக்கா நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிப் படை நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சிப் படை, பிஎல்சி, எஸ்டிசி ஆகிய 3 குழுக்கள் தனித்தனியாக ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த மூன்று குழுக்களும் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும், பிஎல்சி-க்கு...
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர் டோபன் மாகாணத்தில் எல்-நஹொட் நகருக்கு அருகே அல்-சாரா என்கிற தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் இதன் இடிபாடுகளில்...
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026' என்று அழைக்கப்படும் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கல்...
மேற்காசிய பதற்றம் | ஹவுதி தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: சவுதி அரேபியா எச்சரிக்கை
admin - 0
ஏமனின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுடன் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமனின் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல்...









