தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வங்கதேச இந்து மத குருவுக்கு 5 மணி நேரம் மட்டும் பரோல்
admin - 0
வங்க தேசத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மத குரு சின்மயி கிருஷ்ண தாஸுக்கு, அவரது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக 5 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கப்பட்டது.
வங்கதேச சம்மிலித சனாதனி ஜாகரன் ஜோத் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான சின்மயி கிருஷ்ண தாஸ், 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சின்மயி கிருஷ்ண தாஸின்...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வங்கதேச பிரதமர் பங்கேற்கமாட்டார்: அழைப்பு இல்லை என அமைச்சர் தகவல்
admin - 0
டெல்லியில் செப்டம்பர் 12, 13-ல் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு வங்கதேச பிரதமருக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு வரவில்லை.
பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராகவே அவருக்கு அழைப்பு வந்துள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஹுமாயூன் கபீர் கூறியுள்ளார். இதனால், பிரதமர் தாரிக் ரஹ்மான் இம்மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வேறொரு அரசு பிரதிநிதி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“நமது பிரதமருக்கு நேரடி அழைப்பில்லை. மேலும், அவரது முதல்...
சர்வதேச அரசியல் களத்தில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக ‘இந்தியா’ உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வணிகக் கட்டுப்பாடுகளும், வரி கெடுபிடிகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான வரி கெடுபிடிகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இந்த நிதி நிலையற்ற தன்மையைக் குறைக்க, இந்தியப் பொருளாதாரம் தனது ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிபர் ட்ரம்ப்பின் ‘அமெரிக்க...
செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதனால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாகப் பலவீனமடைந்தன. இதனால், மத்திய கிழக்கில் தன் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவும், அமெரிக்கா...
1937-ல் வரையப்பட்ட ஓவியத்தில் இருப்பது ஸ்மார்ட்போனா? – ‘டைம் டிராவல்’ சர்ச்சையும் பின்னணியும்
admin - 0
89 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட புகழ்பெற்ற ஓவியம் ஒன்றில், நபர் ஒருவர் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு பொருளைக் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தாலிய-அமெரிக்க ஓவியரான உம்பர்ட்டோ ரொமானோ (Umberto Romano) என்பவரால் 1937-ஆம் ஆண்டு வரையப்பட்ட 'மிஸ்டர் பின்சன் அண்ட் தி செட்லிங் ஆஃப் ஸ்பிரிங்ஃபீல்ட்' (Mr Pynchon and the Settling of Springfield) என்ற ம்யூரல் பாணி ஓவியம் தான்...
நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டாலர்: ட்ரம்ப் வாக்குறுதி
admin - 0
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
டல்லாஸ் நகரில் புதனன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், உங்களுக்கும் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்கும். இது ட்ரம்ப்...
“இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் இருக்காது” – அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதி
admin - 0
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தங்கள் நாட்டின் நிலம் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ்நாத் சிங்கிடம் இலங்கை அதிபர் அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். தலைநகர் கொழும்புவில் அவர் இன்று அதிபர் அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில்...
அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம். அவரவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள் என்று பல்வேறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன.
அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கலிபோர்னியா, டெக்சாஸ், நியூஜெர்ஸி, நியூயார்க், புளோரிடா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி பிரம்மாண்டமாக...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால், அது செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் -அமெரிக்கா இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவு பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா...
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடி உயர்த்தப்பட உள்ளது.
சிங்கப்பூர் அரசு, திறமையானவர்களை அரசியலுக்குக் கொண்டு வரவும், நல்ல நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையிலும் அரசியல் தலைவர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இதன்படி, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு ஊதியம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடியாக அதிகரிக்க உள்ளது. ஏற்கெனவே உலகின் அதிக சம்பளம்...









