Google search engine
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் நேற்று கூறியதாவது: காபூல் - காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்தும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதுபோல் இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்டன. இவ்விரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள்...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று கூறினார். தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த 30 நிமிட விரிவான தொலைபேசிப் பேட்டியில், "ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது; ஆனால் அதன் விதிமுறைகள் இன்னும்...
அமெரிக்க படைத்​தளம் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்நிலையில், ஈரான் நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள துபாய் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு அருகே உள்ள கட்​டிடம் சேதமடைந்துள்ளது. இதை புகைப்​படம் எடுத்​துப் பகிர்ந்​த​தாக 25 வயதுடைய பிரிட்​டன் விமானப் பணிப்​பெண் துபா​யில் கைது செய்யப்பட்​டுள்​ளார். ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்​தி​யின்​படி, அந்​தப் பெண் ஒரு வாட்​ஸ்​அப் குழு​வில் அந்​தப் புகைப்​படத்​தைப்...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் வியாழக்கிழமை (ஜன.22) அன்று குரோஷியா தலைநகரான ஸாகிரேப்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடந்துள்ளது. சம்பவத்தன்று அத்துமீறி இந்திய தூதரகத்துக்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், அங்கு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த இந்திய...
மாஸ்கோவில் நடைபெற்ற 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 22-வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனதுவீட்டில் சிறப்பு விருந்து அளித்தார். அப்போது அதிபர் புதின் கூறும்போது, “உங்கள் வாழ்க்கையை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள்....
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஆண்டுதோறும் பிப்ரவரி 8 அன்று விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மரபை கைவிட்டுள்ளார். ஈரானில் முன்பு இருந்த மன்னராட்சியை வீழ்த்துவதற்காக 1979, பிப்ரவரி 8-ம் தேதி விமானப்படை அதிகாரிகள் குழு, ரூஹோல்லோ கோமேனிக்கு விசுவாசமாக இருப்பது என சத்தியப் பிரமாணம் எடுத்தனர். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி,...
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிய ஏந்தியபடியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட...
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள் கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை...
உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று (மார்ச் 11) சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக்...
தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்...