Google search engine
கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை ஜேஎஃப்-17 போர் விமானங்கள் எல்எஸ்-6 வகையைச் சேர்ந்த 8 குண்டுகளை வீசித் தாக்கின. இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இதில் பலர் காயமடைந்தனர்....
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்து ஒரு பேரல் விலை 74.5 டாலராக விற்பனையாகி வருகிறது. துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டரம்ப், “என்னை பொறுத்தவரை ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட...
இஸ்ரேல் மீது ‘ஃபதா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேலிலும் உயிரிழப்பு எண்ணிக்கு 25-ஐ தாண்டிவிட்டது,...
கனடாவின் டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே 20 வயது இந்திய முனைவர் பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், தரையில் காயமடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது,...
தவறு செய்த இஸ்ரேல் இப்போது தண்டிக்கப்படுகிறது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு கொமேனி கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப்பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார். தனது பதிவுடன் வான்வழித்தாக்குதல் போல தோற்றமளிக்கும்...
வெனிசுலா​வில் இருந்து அழைத்​துச் செல்​லப்​பட்ட அந்நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ நியூ​யார்க் நகரில் சிறை வைக்​கப்​பட்​டுள்​ளார். அவர் மீது போதைப்​ பொருள் கடத்தியதாகவும், சட்​ட​விரோத​மாக ஆயுதம் வைத்​திருந்​த​தாக​வும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்​புப் படை​யினர் நேற்று முன்​தினம் அதிகாலையில் தாக்​குதல் நடத்​தினர். பின்​னர் அந்​நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ (63) மற்​றும் அவரது மனை​வியை அமெரிக்க படை​யினர் சிறைபிடித்​தனர். பின்​னர்,...
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்...
ஐ.​நா. பாது​காப்பு கவுன்​சிலில் இந்தியா​வுக்கு நிரந்தர இடம் வழங்​கப்பட வேண்​டும் என்று ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலி​யுறுத்தி உள்​ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று முன்​தினம் இரவு ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராடிஸ்லாவா​வுக்கு சென்​றார். அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் இரு​வரும் நிருபர்​களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது: இந்​தி​யா, ஸ்லோவேக்​கியா இடையி​லான வர்த்தக...
ஈரானின் ராணுவ இலக்​கு​களை குறி ​வைத்து அமெரிக்கா சில நாட்​களுக்கு முன்பு தாக்​குதல் நடத்​தி​யது. இந்நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்​கா​வின் எம்​.க்​யூ-9 ரீப்​பர் ரக ட்ரோனை, உள்​நாட்​டில் உருவாக்​கப்​பட்ட ஆராஷ்-இ-கமன்​கீர்’ என்ற வான்​ பாது​காப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது. அமெரிக்க ட்ரோனின் மதிப்பு 30 மில்​லியன் டாலர் என கூறப்படுகிறது. அவற்றை ரேடார்​களின் உதவி​யில்​லாமல், குறைந்த செல​வில் தயாரிக்​கப்​பட்ட வான்​...
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா...