Google search engine
மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற WWE வீரர் ஹல்க் ஹோகன், “என்னுடைய ஹீரோ, கிளாடியேட்டர் ட்ரம்ப் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம். அவர் ஒரு உண்மையான அமெரிக்கர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. காதில் காயத்துடன் தப்பித்த அவர், அதன் பிறகு முதல்முறையாக மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில்...
ஐ.நா. மனித உரிமை கவுன்​சிலின் 61-வது கூட்டத்​தில் காஷ்மீர் விவ​காரம் குறித்து பேசிய பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து தவறான தகவல்​களை கூறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகை​யில் இந்​திய பிர​தி​நிதி அனுபமா சிங் பேசி​ய​தாவது: காஷ்மீரில் கடந்​தாண்டு திறக்​கப்​பட்ட உலகின் மிக உயர​மான ரயில் பாலம் போலி என்​றால், பாகிஸ்​தான் மாயா ஜால உலகில் இருப்​பது போல் உள்​ளது. பொறாமை காரண​மாக பாகிஸ்​தான் தொடர்ச்​சி​யாக பொய் தகவல்​களை...
சிரிய கிளர்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸ் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரங்களில் இயங்கிவரும் இந்திய துணை தூதரகத்தின் முயற்சியின் மூலம் 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக லெபனான் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று...
பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர். இந்​நிலை​யல் பிஎல்ஏ செய்​தித் தொடர்​பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகை​யில், ‘‘இந்​தியா - பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் உச்​சத்​தில் இருந்​த​போது ஆக்​கிரமிப்பு பலுசிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புக்கு எதி​ராக 71 ஒருங்​கிணைந்த தாக்​குதல்​களை பிஎல்ஏ நடத்​தி​யது. சமீபத்​திய...
வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. இதில் அந்த நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அதற்கு...
ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை மீறி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முயன்றதால் அவற்​றின் மீது அமெரிக்​கப்​படை தாக்​குதல் நடத்தி முடக்​கியது. இதில் ஒரு கப்​பலில் 3 இந்​திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்​நிலை​யில் ஓமன் கடல் பகு​தி​யில் இருந்து 80 நாட்​டிக்​கல் மைல் தொலை​வில் எம்​எஸ்வி விராட் 1 என்ற இந்​திய கப்​பலில் இன்​ஜின் பழுதடைந்​து...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்புக் குழுக்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார். கராச்சியில் கடந்த சனிக்கிழமை ( ஜன.17) இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிக...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்த விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அந்த ஒப்பந்தத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப்...
மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு பேருந்துகளிலும் 63...
ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச்...