அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’
admin - 0
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போரை நிறுத்த ரஷ்யாவுக்கு 50 நாள் காலக்கெடு விதித்தார் ட்ரம்ப். பின்னர் இதை 12 நாட்களாக குறைத்தார். இதுகுறித்து ரஷ்ய முன்னாள் அதிபரும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் எக்ஸ் தளத்தில், “ட்ரம்பின்...
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார்.
இந்த தடுப்பூசியின்...
போப் பிரான்சிஸின் உடல் நாளை (புதன்கிழமை) காலை 9:00 மணிக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் வாடிகன் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 88. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
நேற்று (திங்கட்கிழமை) மாலை...
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தாரை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசுவில் அந்த நாட்டின் ராணுவ தளம் உள்ளது. அங்கு ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து சிராசுவில் உள்ள...
இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இரு நாடுகளும் நேற்று பரிமாறிக் கொண்டன.
அணு மின் நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒருவரின் அணு மின் நிலையங்களை மற்றவர் தாக்கக்கூடாது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இரு நாடுகளும் அணு மின் நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 1992-ம்...
சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா,...
ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்பு மொஜ்தபா காமேனியும் அவருடன்தான் இருந்தார் என்றும், தாக்குதலுக்கு சில நொடிகள் முன்புதான் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கின. முதல் தாக்குதலே, உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியையும், ராணுவத் தளபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் குறிவைத்து...
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு அவமானம். ஓவல் அலுவலகத்தை அடையும்போது இந்த தகவலை அறிந்தோம். கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒன்று நடக்கப்...
பிரதமர் மோடி, கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
admin - 0
அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை...









