உத்தர பிரதேசத்தில் மோசடி கும்பலிடம் சிக்கியிருந்த 453 நேபாள குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகளில் நேபாள நாட்டினரின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் அந்நாட்டினர் மோசடி செயலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரின் பல இடங்களில் காவல் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இதில் மோசடி கும்பலின் பிடியில் இருந்த 115 பெண்கள் மற்றும் 338 ஆண்கள் உட்பட...
இந்தியாவில் 180 நாட்களுக்கு மேல் தங்கி வசிக்க விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான பதிவு விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 180 நாட்கள் தங்கும் காலம் முடிவடைந்த பிறகு பதிவு செய்வதற்கு பதிலாக, அவர்கள் அதற்கு முன்பே தங்களை பதிவு செய்து கொள்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட விதிகளின்படி, 180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட விசாக்களில் இந்திய வருவோர், அனுமதி காலத்தை நீட்டிக்க விரும்பினால்,...
வரும் 2028ல் நடைபெறும் தேர்தலில் தெலங்கானாவில் ஜனசேனா போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கூறினார்.
தெலங்கானா மாநிலத்தின் 13-வது உதய தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெலங்கானா உதயமான நாளை கொண்டாட ஜனசேனா கட்சி ஹைதராபாத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தெலங்கானா போலீஸார் இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர மனுவாக...
மகாராஷ்டிராவின் துலே நகரில் இருந்து மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று குஜராத் மாநிலம் சூரத் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்தப் பேருந்து சூரத் மாவட்டத்தின் பர்டோலி தாலுகா உவா- மானேக்பூர் கிராமத்துக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு மகாராஷ்டிர அரசுப் பேருந்து மீது...
ஒன்றரை வயது ஆண் குழந்தையை, வளர்ப்பு தந்தை அடித்து கொலை செய்து உள்ளார். அந்த குழந்தையின் உடலில் 51 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. இது தொடர்பாக குழந்தையின் தாயும், வளர்ப்பு தந்தையும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு அருகேயுள்ள பனவூரைச் சேர்ந்தவர் அகிலா (24). இவரது கணவர் அகில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த அகிலா ஒன்றரை...
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 99% நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இரு தரப்புக்கும் இடையே தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் பிறகு நிரந்தர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் இரு நாடுகளும் அறிவித்தன.
இந்நிலையில் இந்தியா...
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தை அந்த கட்சியின் 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த சூழலில் திரிணமூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.
இதன்படி கொல்கத்தாவில்...
தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் கடந்த மே 22, 27-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் -ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர்,...
நீட் மறுதேர்வை கணினி வழி முறையில் நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய சூழலில் தேர்வு முறையை மாற்றுவது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறி நிராகரித்தது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பிஹார், கேரளம்,...
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங் பிரதமர் மோடியைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அதிக ஒத்துழைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களிடம்...










