சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
admin - 0
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம்(முடா) அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா...
“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” – அமித் ஷா பெருமிதம்
admin - 0
அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு கூட்டணியில் இருந்து 2 அமைப்புகள் விலகி உள்ளன. இது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு’ என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், பிரிவினைவாத அமைப்புகள் இணைந்தன.
இந்த கூட்டணி காஷ்மீர் முழுவதும்...
மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை ஆகும். எதிர்க்கட்சிகளின் மீது அவர் முழுநம்பிக்கை வைத்தார்.
முதலில் நாடு, அதன்பிறகு மாநிலம், அதற்கு அடுத்து கட்சி, அதன்பிறகே குடும்பம். எந்தவொரு சூழலிலும் நாட்டின்...
ஜம்முவின் கதுவா நகரில் வீட்டில் தீப்பற்றியதில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவதார் கிரிஷன் ரைனா (81). இவர் தனது குடும்பத்துடன் ஜம்மு பிராந்தியம், கதுவா நகரின் ஷிவ் நகர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30...
ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவத்தில் தற்போது 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில் இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த...
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 15 வெளிநாட்டினரை நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: டெல்லியில் மோகன் கார்டன், உத்தம் நகர் பகுதிகளில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் விசா காலத்துக்கு பிறகும் இந்தியாவில் தங்கியிருந்த 15 வெளிநாட்டினர் சிக்கினர்.
இவர்களில் 12 பேர் நைஜீரியாவையும் இருவர் வங்கதேசத்தையும் ஒருவர் ஐவரி கோஸ்ட் நாட்டையும் சேர்ந்தவர்கள்.சரிபார்ப்புக்கு பிறகு இவர்களை நாடு கடத்த வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு...
யங் இந்தியா நிறுவனத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ரூ.3 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளனர் என்று நேஷனல் ஹெரால்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1937-ம் ஆண்டு நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னஸ்ல் லிமிடெட் நிறுவனம் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இந்த பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டில் மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு...
தனது தந்தை குறித்து பாஜக மூத்த தலைவர் அவதூறாக பேசியதாக டெல்லி முதல்வர் ஆதிஷி செய்தியாளர்களுக்கு கண்ணீர்மல்க பேட்டியளித்தார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி, கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி களமிறங்கி உள்ளார். இவர் 3 முறை எம்எல்ஏ ஆகவும் 2 முறை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
ரமேஷ் பிதுரி அண்மையில் பேசும்போது,...
இந்துத்துவா குறித்த சர்ச்சை கருத்து: மெகபூபா மகள் இல்திஜா முப்திக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
admin - 0
'இந்துத்துவா ஒரு நோய்' என்று குறிப்பிட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்திக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இல்திஜா முப்தி கடந்த சனிக்கிழமை, 'ஜெய் ஸ்ரீராம்' என கூறுமாறு 3 முஸ்லிம் சிறுவர்கள் தாக்கப்படும் ஒரு வீடியோவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.
அப்பதிவில் அவர், “இந்துத்துவா என்பது கோடிக்கணக்கான இந்தியர்களை பாதித்து, கடவுளின் பெயரைக் கெடுக்கும் ஒரு நோய்" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அரசியல்...
இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள், காவல் துறை தலைவர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டது.இதை அவர் ஏற்கவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவதளபதிகளுக்கும் காவல் துறைதலைவருக்கும் அவர்...
Latest article
விளவங்கோடு: நள்ளிரவில் 600 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை துரத்தி சென்று திக்குறிச்சி பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து...
கிள்ளியூர்: காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி பிரதநிதிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில்...
‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
கடனை திரும்ப செலுத்தாததால் 'வா வாத்தியார்' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம்...















