டீப்ஃபேக் வீடியோ மூலம் வங்கியில் கடன் பெற்று நூதன மோசடி செய்த நான்கு பேரை அகமதாபாத் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி கவனம் பெற்று என்பது குறித்து பார்ப்போம்.
வழக்கமாக சைபர் மோசடியாளர்கள் ஓடிபி எண்ணை கொண்டு மோசடி செய்வர். அதனால் ஓடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என காவல் துறையினர், வங்கிகள் சொல்வதுண்டு. இந்நிலையில், அந்த ஓடிபி-யை பெற டீப்ஃபேக் வீடியோவை குஜராத்தில்...
தமிழ்ப் புத்தகத் திருவிழா தலைவர் வணங்காமுடி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும், புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. டிசம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிவாஜி நகர் அருகிலுள்ள இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில்...
டெல்லியில் பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் புதிய தலைமையகம் கட்டியுள்ளது. இதனால் அரசு கட்டிடங்களில் உள்ள அக்கட்சிகளின் அலுவலகங்கள் காலி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2012-ல் டெல்லியின் நிலம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புதிய அலுவலகம் கட்ட நிலம் பெற்றன. அப்போது அடுத்த 3 வருடங்களில் அரசு கட்டிடங்களில் செயல்படும் கட்சி...
இஸ்ரேலில் பல்வேறு கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக அந்த அரசின் சார்பில் இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் அரசுகளுக்கு ஆட்களை அனுப்பக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கட்டிடப் பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு பணி வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நாட்டின் பணிகளுக்கு தேவைப்படும் தொழிலாளர்களின் வயது 25 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள், கட்டிட...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்திய போது, திருமணங்களில் வீடியோ எடுக்க பயன்படும் ட்ரோன்கள், பயனற்ற ஆயுதங்கள், திறனற்ற ஏவுகணைகளை இந்தியா மீது பாகிஸ்தான் ஏவியதாக சமூக வலைதளங்களும் உருது நாளிதழ்களும் விமர்சனம் செய்துள்ளன.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய போது, பாகிஸ்தான் பதிலுக்கு ஏவிய திறனற்ற ஏவுகணைகள் இலக்கை தாக்குவதற்கு முன்பாகவே வெடித்து சிதறியுள்ளன. இதுபோல், பயனற்ற ஆயுதங்களை வைத்து இந்தியாவுடன் திறமையாகப் போர் புரிவதாக...
ம.பி.யின் தார் நகரில் உள்ள போஜ்சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ம.பி. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாங்கள் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் முஸ்லிம் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அயோத்தி விவகாரத்துக்கு பிறகு, பிற வழக்குகளிலும் இதேபோன்ற முடிவுகள்எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாட்டில் மசூதி- கோயில் சர்ச்சை தொடர்பாக 10 வழக்குகள் நீதிமன்றங்களில்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த பெண் மந்தீப் கவுர். இவரது கணவர், தங்க நகை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, மந்தீப் கவுர் குழந்தைகளுடன் தனியாக இருந்த சமயத்தில், மூன்று முகமூடிகொள்ளையர்கள் அவரது வீட்டுக்குச் சென்றனர்.
கொள்ளையர்கள் வருவதை அறிந்த மந்தீப் கவுர், வேகமாக ஒடிச் சென்று கதவைத் தாழிடமுயன்றார். மறுபக்கம் கொள்ளையர்கள் கதவைத் தள்ளி வீட்டுக்குள் நுழைய முயன்றனர். எனினும்,தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி...
அவிமுக்தேஷ்வர் மீது போக்ஸோ வழக்கு பதிவு: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல்
admin - 0
உத்தராகண்டின் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த். பிரயாக் ராஜ் மகரமேளா புனித நீராடலின் போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் உ.பி. போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அவரது ஆதரவாளர் படுகாயமடையக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தினார். பலன் இல்லாத நிலையில் மகரமேளாவை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மகரமேளாவில் தனது முகாமில் சீடர்களாக இருந்த சிறுவர்களில் மூவரை...
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு...
டெல்லியில் இணைய குற்ற வழக்கில் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்க துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கியூஆர் குறியீடு மோசடி, பிஷிங், பகுதிநேர வேலை மோசடி போன்ற இணைய குற்றங்கள் குறித்து ஐ4சி மற்றும் நிதி புலனாய்வு பிரிவிடமிருந்து (எப்ஐயு) அமலாக்க இயக்குநரகத்துக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய ஆய்வில், இந்த மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை 15 ஆயிரம் போலி...










