மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் காங். வேட்பாளர் விலகல்: போட்டியின்றி தேர்வாகிறார் துணை முதல்வர்
admin - 0
மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) மூத்த தலைவருமாக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விமான விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் கட்சியில் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், ஆட்சியில் என்சிபி கட்சிக்கான முக்கியத்துவம் குறையாமல் இருக்கவும், அஜித் பவாரின் மனைவியும், மாநிலங்களவை எம்.பியுமான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் துணை முதல்வராக பதவியேற்றார். அத்துடன் தேசியவாத...
மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎஃப்) படையினரின் வீரதீர தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
“சிஆர்பிஎஃப் படையினரின் வீரதீர தினத்தை முன்னிட்டு, நமது படையைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீரமிக்க வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், மரியாதைக்குரிய அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிஆர்பிஎஃப் படையினரின் வீரமும் தியாகமும் ஒவ்வொரு நாளும் நமது தேசத்தைப் பாதுகாக்கின்றன.
அதே நேரம், சிஆர்பிஎப் மற்றும் சிஏபிஎஃப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில்...
மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் 15,400 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த கப்பல் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது.
மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. எனினும், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஈரான் அரசு இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பலை விடுவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியக்...
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆர்) உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பிற மாநிலங்களில் இருந்து நீதித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி, மால்டா மாவட்டத்தின் காலியாசக் மற்றும் மோதாபரி பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டிருந்த 7 நீதித்துறை அதிகாரிகளை சமூக விரோத கும்பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்தது. இதில் மூன்று பெண் அதிகாரிகள் மற்றும் 5 வயது குழந்தையும் அடங்குவர். சுமார்...
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறுவதற்கான நடைமுறைகள் பலவீனமாக உள்ளன. இதனால் ஊடுருவல்காரர்கள் எளிதாக ஆதார் எண்ணை பெற்றுவிடுகின்றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு மட்டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்டும். அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்படக்கூடாது.இவ்வாறு மனுவில் கோரப்பட்டு...
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரிக்க தொடங்கியுள்ளது.
2-வது நாளான நேற்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத வழக்கங்கள் மூட நம்பிக்கையா என்பதை நீதிமன்றங்கள்...
நாட்டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நாட்டில் கடல் வழித்தடம் மற்றும் நீர்நிலைகள் அதிகளவில் உள்ளன. விமான நிலையம் அமைக்க முடியாத இடங்களில் கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதியாக கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்த ஸ்கைஹாப் ஏவியேஷன் என்ற நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்நிறுவனத்தின் கடல் விமானம் ரிஷிகேஷில்...
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே...
இந்தியா முழுவதும் பிஹு, விஷு, வைசாகி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் கோலம் பூண்டுள்ள இவ்வேளையில், மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில் புதுப்பித்தல் உணர்வு நம்மை நிரப்புவது போல, இந்திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்றுப் பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டது. குறிப்பாக, ஏப்ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள்...
மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி உண்ணும் பிராமணர்களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இது குறித்து, முதல்வர் மம்தா பிரச்சாரத்தில் பேசுகையில், "பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காள மக்களின் உணவுப் பண்பாடு, குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்தமான மீன்...
அசாமில் மாட்டிறைச்சி உண்பது குறித்த தனது நிலைப்பாட்டை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். என்றாலும் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கி விட்டதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வா சர்மா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். அதற்குத் தடை ஏதும் இல்லை. அசாமில் மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம் சமூகம் பெரிய அளவில் உள்ளது. அவர்களைச் சாப்பிட வேண்டாம்...










