Google search engine
ஆந்திர மாநிலம் ராஜ​முந்​திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்​காரரிடம் பால் வாங்​கிய பலருக்கு வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, மயக்​கம் ஏற்​பட்டு அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்​காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தற்​போது தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து பால்காரரை கைது...
குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் மூதறிஞர் ராஜாஜியின் மார்​பளவு சிலையை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று திறந்து வைத்​தார். சுதந்​திர இந்​தி​யா​வின் முதல் மற்​றும் ஒரே கவர்​னர் ஜெனரலான ஸ்ரீ சக்​ர​வர்த்தி ராஜகோ​பாலாச்​சா​ரி​யாரை கவுரவிக்​கும் வகையில் குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் ராஜாஜி விழா நேற்று தொடங்​கியது. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே அசோக மண்​டபம் அமைந்துள்ளது. இதற்கு அரு​கில் உள்ள பிரம்​மாண்ட திறந்த படிக்கட்​டில், எட்​வின்...
பஞ்​சாப் மாநிலம், அமிர்​தசரஸில் சீக்கியர்களின் பொற்​கோ​யில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் தின​மும் சுமார் 1 லட்​சம் பேர் தரிசனம் செய்​கின்​றனர். இங்கு மத நம்​பிக்கை கடுமை​யாக பின்​பற்​றப்​படு​கிறது. இந்நிலையில், பொற்கோ​யிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அறிக்கை தர ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு நாயுடு ஒரு குழு அமைத்து உத்​தர​விட்​டார். அந்த அறிக்கையின் அடிப்படையில் திரு​மலை​யிலும் இந்​துக்​கள் அல்லாதவர்​கள் ஏழுமலையானை தரிசிக்க புதிய சட்​டதிட்டங்கள் தீவிர​மாக அமல் படுத்​தப்​பட உள்​ளன.
ஜம்​மு​வின் கீஷ்த்​வார் பகு​தி​யில் நேற்று முன்​தினம், மத்​தி​யப் பாது​காப்​புப் படை​யினர் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது அவர்​களு​டன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவா​தி​களின் இருப்​பிடத்தை நோக்கி குரைத்​துள்​ளது. இதையடுத்​து, டைசனை தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்​தம் கொட்​டிய​போதும் டைசன் தொடர்ந்து குரைத்​துள்​ளது. இதையடுத்து பாதுகாப்புப்படை​யினர் தொடங்​கிய நடவடிக்​கை​யில் 3 தீவிரவாதி​களும் சுட்டு வீழ்த்​தப்​பட்​டனர். தீவிர​வா​தி​களின் மறை​விடத்​தைக் கண்​டு​பிடித்த ஜெர்​மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த...
மத்​திய உள்​துறை சார்​பில் தேசிய தீவிர​வாத எதிர்ப்பு கொள்கை வெளி​யிடப்​பட்டு உள்​ளது. மத்​திய உள்​துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சில அண்டை நாடு​கள் தீவிர​வாதத்தை நாட்​டின் கொள்​கை​யாக கடைப்​பிடித்து வரு​கின்​றன. இதனால் இந்​தியா பாதிக்கப்படுகிறது. எனினும் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக மத்​திய அரசு உறுதியுடன் செயல்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக பிரஹார் (PRAHAAR) என்ற தேசிய தீவிர​வாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்படு​கிறது. இதன்​படி தீவிர​வாத...
மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்​தின் திருச்​சூர் மாவட்டத்​தில் உள்ள ஒரு கிராமத்​தில் ஒரே ஒரு வயலில் மட்​டும் 570 வகை​யான நெற்​ப​யிர்​கள் சாகுபடி செய்​யப்​படுகிறது. இது விதைகளின் மரபைப் பாது​காக்​கும் பேரியக்​கம் ஆகும். உலகின் மிகப்​பெரிய அரிசி உற்​பத்​தி​யாள​ராக இந்​தியா உருவெடுத்திருக்கிறது. 15 கோடி டன்​களுக்​கும் மேலாக அரிசி உற்​பத்தி செய்​வது சாதாரண...
சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் நேற்று கூறியதாவது: மாற்று மதத்தினர் மற்றும் சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படமெடுக்கும் மும்பை தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று கர்ணி சேனா தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். விரைவில் வெளியாக இருக்கும் "யாதவ் ஜி கி லவ் ஸ்டோரி" மற்றும் "கூஸ்கோர் பண்டட்" ஆகிய திரைப்படங்கள் மாற்று சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் உள்ளது. சத்ரிய, பிராமண சமூகங்களைக் குறிவைத்த...
மாவோயிஸ்டு இயக்​கத்​தின் கமாண்டர் தேவுஜி மற்​றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீ​ஸில் சரணடைந்​த​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. நாட்​டில் மாவோ​யிஸ்​டு, நக்​சல்​களின் வன்​முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்​குள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படும் என்று மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக கூறியுள்ளார். அதன்​படி, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் போன்ற மாநிலங்​களில் மாவோ​யிஸ்​டு​களுக்கு எதிரான என்​க​வுன்ட்​டர்​கள் அவ்​வப்​போது நடை​பெற்று வருகின்றன. இதில் பலர் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏராள​மானோர்...
நமோ பாரத் அதிவேக ரயில் வழித்​தடம், அதிவேக மீரட் மெட்ரோ மற்​றும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பின்​னர் மெட்ரோ ரயி​லில் பயணம் செய்​தார். நாட்​டின் முதல் பிராந்​திய அதிவேக போக்​கு​வரத்து அமைப்​பின் (RRTS), டெல்​லி - மீரட் இடையி​லான நமோ பாரத் வழித்​தடத்​தின் பெரும்​பகுதி ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்​ளது. இந்​நிலை​யில் கட்​டு​மானப் பணி​கள் முடிவடைந்த மீத​முள்ள பகு​தி​களை பிரதமர் நரேந்​திர...
பாஜக மூத்த தலை​வர் நிஷி​காந்த் துபே தனது எக்ஸ் பக்​கத்​தில் ஒரு புகைப்​படத்தை பதிவேற்​றம் செய்​துள்​ளார். அதனுடன் வெளி​யிட்டுள்ள பதி​வில், “காங்​கிரஸ் பிரதமர் நேரு உலகத்​துக்கு நாகின் டான்ஸ் (பாம்பு நடனம்) காட்​டி​னார், பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி உலகத்​துக்கு தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை எடுத்​துக் காட்டுகிறார். கோபம் வரத்​தானே செய்​யும்? இந்​தப் படம் 1962ல் அப்​போதைய அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்​குலினை நேரு வரவேற்​ற​போது எடுத்​தது”...