ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்காரரிடம் பால் வாங்கிய பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் தற்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து பால்காரரை கைது...
குடியரசு தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜி விழா: மார்பளவு சிலையை திரவுபதி முர்மு திறந்து வைத்தார்
admin - 0
குடியரசுத் தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜியின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரலான ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி விழா நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே அசோக மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள பிரம்மாண்ட திறந்த படிக்கட்டில், எட்வின்...
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர்.
இங்கு மத நம்பிக்கை கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், பொற்கோயிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அறிக்கை தர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு குழு அமைத்து உத்தரவிட்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் திருமலையிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் ஏழுமலையானை தரிசிக்க புதிய சட்டதிட்டங்கள் தீவிரமாக அமல் படுத்தப்பட உள்ளன.
ஜம்முவின் கீஷ்த்வார் பகுதியில் நேற்று முன்தினம், மத்தியப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுடன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை நோக்கி குரைத்துள்ளது. இதையடுத்து, டைசனை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்தம் கொட்டியபோதும் டைசன் தொடர்ந்து குரைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் தொடங்கிய நடவடிக்கையில் 3 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த...
மத்திய உள்துறை சார்பில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையில் கூறியிருப்பதாவது: சில அண்டை நாடுகள் தீவிரவாதத்தை நாட்டின் கொள்கையாக கடைப்பிடித்து வருகின்றன. இதனால் இந்தியா பாதிக்கப்படுகிறது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரஹார் (PRAHAAR) என்ற தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்படுகிறது.
இதன்படி தீவிரவாத...
மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வயலில் மட்டும் 570 வகையான நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது விதைகளின் மரபைப் பாதுகாக்கும் பேரியக்கம் ஆகும். உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்திருக்கிறது.
15 கோடி டன்களுக்கும் மேலாக அரிசி உற்பத்தி செய்வது சாதாரண...
சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் நேற்று கூறியதாவது: மாற்று மதத்தினர் மற்றும் சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படமெடுக்கும் மும்பை தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று கர்ணி சேனா தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
விரைவில் வெளியாக இருக்கும் "யாதவ் ஜி கி லவ் ஸ்டோரி" மற்றும் "கூஸ்கோர் பண்டட்" ஆகிய திரைப்படங்கள் மாற்று சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் உள்ளது. சத்ரிய, பிராமண சமூகங்களைக் குறிவைத்த...
மாவோயிஸ்டு இயக்கத்தின் கமாண்டர் தேவுஜி மற்றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீஸில் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் மாவோயிஸ்டு, நக்சல்களின் வன்முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். அதன்படி, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான என்கவுன்ட்டர்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர்...
நமோ பாரத் அதிவேக ரயில் வழித்தடம், அதிவேக மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
நாட்டின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பின் (RRTS), டெல்லி - மீரட் இடையிலான நமோ பாரத் வழித்தடத்தின் பெரும்பகுதி ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த மீதமுள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர...
பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதனுடன் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் பிரதமர் நேரு உலகத்துக்கு நாகின் டான்ஸ் (பாம்பு நடனம்) காட்டினார், பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி உலகத்துக்கு தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை எடுத்துக் காட்டுகிறார்.
கோபம் வரத்தானே செய்யும்? இந்தப் படம் 1962ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்குலினை நேரு வரவேற்றபோது எடுத்தது”...










