Google search engine
நாட்​டின் 80-வது சுதந்​திர தின பாது​காப்பு ஏற்பாடுகளுக்​காக டெல்லி செங்​கோட்டை நேற்று முன்​தினம் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூடப்​படு​வ​தாக இந்​திய தொல்​பொருள் ஆய்வு துறை வெளியிட்​டுள்ள உத்​தர​வில் தெரிவிக்கப்பட்​டுள்​ளது. நாட்​டின் 80-வது சுதந்​திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்​படு​கிறது. டெல்​லி​யில் உள்ள செங்​கோட்​டை​யில் பிரதமர் மோடி தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து நாட்டு மக்களுக்கு உரை​யாற்​று​வார். இதற்​காக பிரம்​மாண்ட பாது​காப்பு ஏற்​பாடு​கள் இப்​போதே தொடங்​கி​யுள்​ளன. டெல்லி செங்​கோட்டை...
ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்​டரியை கேரள முதல்​வர் வி.டி.சதீசன் நேற்று தொடங்கி வைத்​தார். இது குறித்து முதல்​வர் வி.டி.சதீசன் தனது முகநூல் பதி​வில், “லாட்டரி வரலாற்​றில் மிக அதிக முதல் பரிசு இது​வாகும். இந்த லாட்​டரி சீட்​டு​கள் ஜூலை 20 முதல் விற்​பனைக்கு கிடைக்​கும்" என்று தெரி​வித்​துள்​ளார். கடந்த ஆண்டு ஓணம் பம்​பர் லாட்​டரி​யில் முதல் பரி​சாக ரூ.25 கோடி வழங்​கப்​பட்​டது. இது இந்த ஆண்டு...
அமெரிக்கா​வும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பரஸ்​பரம் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ‘எம்டி அல் பாஹி​யா’, ‘எம்டி மொம்​பா​சா’ ஆகிய 2 கப்​பல்​கள் மீது கடந்த சில தினங்​களுக்கு முன்பு தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்த இரு கப்​பல்​களி​லும் இருந்த 46 பணி​யாளர்​களில் 30 பேர் இந்​திய மாலுமிகள் ஆவர். அவர்களில் ஒருவர் உயி​ரிழந்​தார், மற்​றொரு​வர் காயமடைந்​தார். இந்​நிலை​யில், கடல்​சார் நிர்​வாக பொது இயக்​குநரகம் (டிஜிஎம்ஏ)...
குணப்​படுத்த முடி​யாத நோயால் பாதிக்​கப்​பட்ட கைதிகள் மற்​றும் 70 வயதுக்கு மேற்​பட்ட கைதி​களை மனிதாபிமான அடிப்​படை​யில் முன்​கூட்​டியே விடு​தலை செய்வதற்​கான கொள்​கையை 3 மாதங்​களுக்​குள் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உரு​வாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. குணப்​படுத்த முடி​யாத நோய்​களால் அவதிப்​படும் மற்​றும் 70 வயதுக்கு மேற்​பட்ட வயது முதிர்ந்த கைதி​களை கருணை அடிப்படை​யில் முன்​கூட்​டியே விடு​தலை செய்​வது குறித்து நாடு தழு​விய வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கக்...
 ​நா​டாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடர் அடுத்த வாரம் தொடங்​க​வுள்ள நிலை​யில், பிரதமர் இல்​லத்​தில் பாஜக உயர்​நிலைக் குழு​வின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நடைபெற்றது. இதில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா, பாஜக தலை​வர் நிதின் நவீன் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் கலந்துகொண்​டனர். இக்​கூட்​டத்​தில் என்ன விவா​திக்​கப்​பட்​டது என்​பது குறித்த அதி​காரப்பூர்வ விவரங்கள் வெளி​யாக​வில்​லை. எனினும், பாஜக தேசிய நிர்​வாகி​கள் மற்​றும் மத்​திய அமைச்சரவை​யில் மாற்​றம் செய்​யப்​படலாம் என்ற பேச்சு நில​வும் சூழலில் இக்​கூட்​டம்...
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா செக்​டார் 66-ல் உள்ள 4 மாடி குடி​யிருப்பு ஒன்​றின் தரைத்தளத்தில் மின்​சார வாகன பேட்​டரி சார்ஜ் செய்​யப்பட்டிருந்த​போது மின்​கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அரு​கில் நிறுத்​தப்​பட்​டிருந்த பெட்​ரோல் வாகனங்களுக்கு வேக​மாக பரவி தீப்​பிடித்​துள்​ளது. இதனால் கட்டிடம் முழு​வதும் அடர்ந்த புகை மூட்​டம் சூழ்ந்து தீ மளமளவென பரவியது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்​ததும், 7 தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் ஹைட்​ராலிக் ஏணி​களு​டன் தீயணைப்​புத் துறை​யினரும்,...
“இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்​தி​யா - இங்​கிலாந்து இடையிலான ஒருங்​கிணைந்த பொருளாதார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் கடந்த ஆண்டு கையெழுத்​தானது. இந்த ஒப்பந்தமானது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து பிரதமர்...
மணிப்​பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் காவல் துறையும் அசாம் ரைபில்ஸ் படை​யும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்​டன. இதில் மேற்கு இம்​பால் மாவட்​டம், லோக்​டாக் ஏரிக்கு அரு​கே மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த ஆயுதங்கள், தோட்​டாக்​கள் மீட்​கப்​பட்​டன. இது​போல் சுராசந்த்​பூர் மாவட்​டம் காட்​டுப் பகு​தி​யில் இருந்து ஆயுதக் குவியலை பாது​காப்பு படை​யினர் கைப்​பற்​றினர். இதில் பல்​வேறு ரக துப்​பாக்​கி​கள், தோட்​டாக்​கள், 5 கையெறி குண்​டு​, வாக்​கி- ​டாக்​கி​கள், மார்​புக் கவசப் பைகள், தலைக்​...
உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆ​யுதங்​களை பயன்​படுத்​து​வதைத் தடுத்​த​தில் இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடி மிக முக்​கியப் பங்​காற்​றி​னார் என்ற போலந்து நாட்​டின் வெளி​யுறவுத்​துறை இணை​யமைச்​சர் விளாடிஸ்லா பரபரப்பு தகவல் ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். இதுகுறித்து செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பின்​போது பார்​டோசெவ்​ஸ்கி கூறிய​தாவது: சர்​வ​தேச அளவில் ரஷ்ய அதிபர் புதின் மீது செல்​வாக்கு செலுத்​தக்​கூடிய மிகச் சில உலகத் தலை​வர்​களில் இந்தியப் பிரதமர் மோடி​யும் ஒரு​வர். மோடியின் கருத்​துகளுக்கு...
கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே ரூ.60,000 கோடிசெலவில் சூரியசக்தி அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக இடைக்கால அறிக்கையை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) முதன்மை ஆலோசகராக இருந்த ஸ்ரீதரன் கேரள அரசிடம் அளித்திருந்தார். இது குறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் நேற்று கூறியதாவது: இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் அல்லது நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் தொடங்க வேண்டாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இத்திட்டத்தில்...