Google search engine
சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியின் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டார். கிராண்ட் செஸ் டூரின் கடைசி தொடரான சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயினிட் லூயிஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியான இதில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் ஆர்.பிரக்ஞானந்தாவும், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய வின்சென்ட் கீமர், பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். 3-வது சுற்றின் முடிவில்...
நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியின் அணிப் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ருதி ஜோஷி தங்கம் வென்றார். நைஜீரியாவின் லாகோவில் நேற்று நடைபெற்ற மகளிர் அணி சேபர் பிரிவில் இந்திய அணி முதலிடம் பெற்று தங்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியில் ஸ்ருதி ஜோஷியும் இடம்பெற்றிருந்தார். வீராங்கனை ஸ்ருதி ஜோஷி மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) பணியாற்றி வருகிறார். மேலும் இவர், இதே போட்டியின் மகளிர் தனிநபர் சேபர்...
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வானது எனது அமைதிக்குக் கிடைத்த பரிசு என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதுமுக வீரர் சரண்ஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி (நாளை) காலே நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்...
கிரிக்கெட்டை உலகளாவிய விளையாட்டாக மாற்ற பல நாடுகள் முன்வரவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐபிஎல் தொடரைப் போலவே ஐரோப்பாவில் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (இடிபிஎல்) கிரிக்கெட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் டப்ளின் கார்டியன்ஸ், எடின்பர்க் கேஸ்டில் ராக்கர்ஸ், ராட்டர்டாம் டாக்கர்ஸ், கிளாஸ்கோ காஸ்மிக், ஐரிஷ் உல்ஃப்ஸ், ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தப்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது அவர் ஷதமன் இஸ்லாம் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது 434-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தியிருந்த இடது கை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத்தின் (இலங்கை) சாதனையை அவர் முறியடித்தார். ரங்கனா ஹெராத் 433...
ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதன் முதல் போட்டி மராரா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் ‘பிக் ஃபோர்’ என அழைக்கப்படும் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன்...
இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரரான அஜிங்க்ய ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகிறார். இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அஜிங்க்ய ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகிறார். இதற்காக அவர், போட்டியை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வர்ணனைக் குழுவில் இணைந்துள்ளார். முதல்தரக்...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இதன்படி செப்டம்பர் 13 முதல் 17 வரை டி 20 தொடர் நடைபெறும். 17-ம் தேதி முதல் போட்டியும், 15-ம் தேதி 2-வது போட்டியும், கடைசி மற்றும் 3-வது போட்டி 17-ம் தேதியும் நடைபெறும். இந்தத் தொடரின்...
டிஎன்பிஎல் டி20 தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் டி20 தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 35 பந்துகளில்,...
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் அதிகாரப்பூர்வமாகத் தம்பதியாயினர். போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பு அமைப்பான ‘பிரன்ஸ்விக் குரூப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவர்கள் நேற்று முன்தினம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தங்களது ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்ட இந்தத் திருமணம், மிகவும் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகில் உள்ள கடலோர நகரமான காஸ்காய்ஸில் இந்த திருமண நிகழ்ச்சி...