கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
இந்த பதக்கங்கள் அனைத்தும் பளுதூக்குதல் (4), பாரா பவர்லிஃப்டிங்கில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 8-ம்...
சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி. இந்திய ரயில்வே ஊழியரான ராஜா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்தார்.
சிறு வயதிலேயே பளுதூக்கும் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால், முறையான பயிற்சிகளை மேற்கொண்டு ஜூனியர் பிரிவுகளில் பல்வேறு சாதனைகளை படைத்தார். 2017-ம் ஆண்டு காமன்வெல்த்...
ஆகஸ்ட் 4 முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நடத்தும் ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 10-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த சீசனின் முதல்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கலிலும், இறுதிக்கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 என்றும், சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விலை சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே...
ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் இளையோர் ஹாக்கி-5ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
மஸ்கட் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனா 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. சீன அணி தரப்பில் டாங்டாங் லு, கெக்சின் டாங், ஜியாக்சின் குவா, சென் கே ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இந்திய அணி தரப்பில் நவுஷீன்...
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 2 போட்டிகள்...
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் மீராபாய் சானு.
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோவும், கிளீன் அன்ட்...
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ள ரிஷிகண்டா சிங், கட்டிடம் கட்டுமிடத்தில் தினக்கூலியாக இருந்து சாம்பியனாக மாறியவர் என்ற செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த 28 வயதான ரிஷிகண்டா சிங், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது இளம்வயதை பெரும்பாலும் வேலை பார்த்தே கழித்துள்ளார். இம்பாலின் பல்வேறு பகுதிகளில் கட்டிட வேலைகளில் அவர் தினக்கூலியாக வேலை பார்த்துள்ளார். செங்கல், சிமெண்ட்,...
உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் கனடாவில் உள்ள ஆன்டாரியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் அனஹத் சிங் 11-4, 11-8, 11-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 9 முதல் 13 வரை லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து கடந்த ஆண்டு கைப்பற்றியிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டிக்குமான மைதானத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, இங்கிலாந்து வாரியத்திடமே உள்ளது. இதுவரை நடைபெற்ற 3 உலக டெஸ்ட்...










