Google search engine
முதல்​வ​ராக பதவி​யேற்ற பின் முதல்​வர் ஜோசப் விஜய் அறி​வித்த திட்​டங்​களுக்கு பாமக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன. இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: பாமக நிறு​வனர் ராம​தாஸ்: முதல்​வ​ராக பதவி​யேற்​றவுடன் 200 யூனிட் மின்​சா​ரம் இலவச​மாக வழங்​க​வும், போதை ஒழிப்​புக்கு சிறப்​புப் படை உரு​வாக்​க​வும் முதல்​வர் ஜோசப் விஜய் முதல் கையொப்​பமிட்​டதை வரவேற்று நன்​றியை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இதைத்​தொடர்ந்து தவெக தேர்​தல் அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ளது போல் சாதி​வாரி கணக்​கெடுப்​பை​யும் உடனே...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்​யின் பதவி​யேற்பு விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக சென்னை வந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு தமிழக காங்​கிரஸ் தலை​மையக​மான சத்​தி​யமூர்த்தி பவனுக்கு வருகை தந்​தது கட்​சி​யினரிடையே பெரும் எழுச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. நேற்று காலை டெல்​லியி​லிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்​தி, நேரு உள்​ விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்ற ஜோசப் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​கும் விழா​வில் கலந்து கொண்​டார். அங்​கிருந்து நேராக சத்​தி​யமூர்த்தி...
முதல்​வ​ராக பதவி​யேற்ற ஜோசப் விஜய்க்கு, பல்​வேறு தொழிற்​சங்கப் பிர​தி​நி​தி​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: கிரெ​டாய் தமிழ்​நாடு தலை​வர் டபிள்​யூ.எஸ் ஹபீப்: தெளி​வான வளர்ச்​சி, வலு​வான உள்​கட்​டமைப்​பு, தூய்​மை​யான நிர்​வாகம், ஊழலற்ற சூழல் மற்​றும் அமைப்​பு​களில் கூடு​தல் பொறுப்​புக்​கூறல் ஆகிய​வற்றை இளைஞர்​களும், நகர்ப்​புற வாக்​காளர்​களும் பெரிதும் எதிர்​பார்க்​கிறார்​கள் என்​பதை தேர்​தல் முடிவு​கள் காட்​டு​கின்​றன. இந்த மக்​கள் தீர்ப்பு என்​பது வெறும் அரசி​யல் முடிவு மட்​டுமல்ல. இது...
17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் புதிய உறுப்பினர்கள் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்க தொடங்கினர். தமிழக முதல்வராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்​றார். இதனையடுத்து தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி தவெக உறுப்​பினர் எம்​.​வி.கருப்​பை​யாவை நியமிப்​ப​தற்​கான கோப்​பில், முதல்​வர் ஜோசப் விஜய்​யிடம், பேரவைச் செயலர் கி.சீனி​வாசன் ஒப்​புதல் பெற்​றார். ஆளுநர் மாளி​கை​யில்,...
வட மாவட்டங்களில் தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி...
திண்​டுக்​கல், தேனி மாவட்ட ஆட்​சி​ய​ராக இருந்த ஐஏஎஸ் அதி​காரி வெங்​க​டாச்​சலத்​தின் விருப்ப ஓய்வு ஆவணங்​களை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கொடைக்​கானலைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திண்​டுக்​கல், தேனி மாவட்ட முன்​னாள் ஆட்​சி​யர் வெங்​க​டாச்​சலம். இவர் 2012 பிப்.29 முதல் 2018 பிப்.24 வரை ஆட்​சி​ய​ராக இருந்த காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு புகார் அனுப்​பினேன். புகாரின்​பேரில்...
கோ​யில் சொத்​துகளை பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் உள்ள அதி​காரி​கள் அதில் தவறு இழைக்​கக்​கூ​டாது என அறநிலை​யத்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் அறி​வுரை வழங்​கி​யுள்​ளது. இதுதொடர்​பாக திருத்​தொண்​டர் அறக்​கட்​டளை தலை​வ​ரான சேலம் ஏ.ரா​தாகிருஷ்ணன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘சென்னை மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயி​லில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும் அறு​பத்து மூவர் உலா மற்​றும் பிரம்​மோற்​சவம் போன்ற திரு​விழாக்​களின் வரவு - செலவு கணக்கு விவரங்​களை இந்து சமய...
இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும்...
சென்​னை​யில் நடை​பெறும் ஐபிஎல் போட்​டியைக் காண வரும் ரசிகர்​களின் வசதிக்​காக, போட்டி நடை​பெறும் நாளன்று மெட்ரோ ரயில்​களில் இலவச​மாக பயணிக்​கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்​டி​யில் சென்னை சூப்​பர் கிங்ஸ் மற்​றும் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் வரும் மே 10-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் மோதவுள்​ளன. இதையொட்​டி, ரசிகர்​களுக்கு தடையற்ற பயண...
தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால்...