Google search engine
பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்​க​வும், அத்​தகைய குற்​றங்​களில் ஈடு​படு​வோரை தீவிர​மாக கண்​காணிக்க தமிழக காவல்​துறை புதிய நடவடிக்​கையை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. அதன்​படி, பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடு​படு​பவர்​களை அவர்​களின் குற்​றத்​தின் தன்மை மற்​றும் ஆபத்​தின் அடிப்​படை​யில் 8 வண்​ணங்​களாக பிரித்து கண்​காணிக்​கும் நடை​முறை அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது. பொது​வாக கொடூர ரவுடிகள், கொலை​யாளி​கள், கூலிப்​படை​யினர் மற்​றும் அடிதடி வழக்​கு​களில் தொடர்​புடைய ரவுடிகளை போலீ​ஸார் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4...
சட்டப்பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி லோக்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, சட்டப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று சந்தித்தார். அவருடன் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது ஆளுநர் உரைக்கு முறைப்படி பேரவைத் தலைவர் பிரபாகர் நன்றி கூறினார். அப்போது...
தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நாளை நடைபெறுகிறது. இதில் புதிய கூட்டணி பெயர், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு, கூட்டணி கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ம் தேதி (நாளை) சென்னையை அடுத்த கோவளத்தில் தவெக தலைவரும், முதல் வருமான விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணி கட்சியினருக்கு...
முதல்​வர் விஜய் ஜூலை 2-வது வாரத்​தில் கரூர் வருகை தரவுள்​ளதாக​ தகவல் வெளியாகியுள்ளது. அப்​போது, தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களைச் சந்​திக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். உயிரிழந்தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம்...
சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை​களில் அதி​காரி​கள் சுதந்​திர​மாக முடிவு செய்​ய​லாம். எதி​லும் தனி​நபர்​கள் தலை​யீடு இருக்​காது. யார் தவறு செய்​தா​லும் பாரபட்​சமின்றி துரித​மாக நடவடிக்கை எடுத்து தண்​டனை பெற்​றுத் தரவேண்​டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்​டில் முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழகத்​தின் சட்​டம் - ஒழுங்கு நில​வரம், அரசுத் திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்து ஆண்​டு​தோறும் முதல்​வர் தலை​மை​யில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலு​வலர்​கள் மாநாடு நடை​பெறும். அந்த வகை​யில், புதி​தாக...
பழநியில் பக்​தர்​கள் வசதிக்​காக தனி​யாரிடம் ரூ.58.54 கோடிக்கு வாங்​கப்​படும் 23.78.5 ஹெக்​டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்​றப்​படும் என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. சென்​னையை சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு: பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோ​யிலுக்கு வரும் பக்​தர்​களுக்​கான திட்​டங்​களை செயல்​படுத்த 23.78.5 ஹெக்​டேர் தனி​யார் நிலம் கையகப்​படுத்​த​வும், அந்த நிலத்​துக்கு ரூ.58 கோடியே 54 லட்​சத்து 63 ஆயிரத்து 724-ஐ இந்து சமய அறநிலை​யத்​துறை​யின்...
தமிழகத்​தில் நேரடி நெல் கொள்​முதல் மற்​றும் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பான ஒருங்​கிணைந்த ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடந்​தது. இதற்கு உணவுத் துறை பி.வெங்​கடரமணன், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​தி​ராஜ், வேளாண்மை துறை அமைச்​சர் ஆர்​.​வினோத் ஆகியோர் தலைமை வகித்​தனர். தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் தலை​வர் பு.உ​மா​நாத், வேளாண்மை துறை செயலர் பொ.சங்​கர், வேளாண்​மைத் துறை இயக்​குநர் க.வீ.​முரளதரன் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். இதில், கொள்​முதல்...
 தெரு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளும் பணி தொடர்​பாக மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்​னை​யில் தெரு நாய்​கள், செல்​லப்​பி​ராணி​களை பராமரிப்​பது தொடர்​பாக, விலங்கு நல தொண்டு நிறு​வனம், தெரு நாய்​களை பராமரிக்​கும் தன்​னார்​வலர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தலை​மை​யில் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. ​கூட்​டத்​தில் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு தெரு நாய்​களை மேலாண்மை செய்​வது குறித்து அனைத்​துத் தரப்​பினரிட​மும் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. தெரு...
 திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது. இதில், பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல்,...
 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்கு விசா​ரணையை செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​திலிருந்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றம் செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் தனி​யார் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை பக்​கத்து வீட்​டில் வசித்த சிறு​வன் உள்​ளிட்​டோர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக 6 சிறார்​கள் உட்பட 15 பேர் மீது போலீ​ஸார் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ சட்​டத்​தின் கீழ்...