முதல்வராக பதவியேற்ற பின் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த திட்டங்களுக்கு பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: முதல்வராக பதவியேற்றவுடன் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும், போதை ஒழிப்புக்கு சிறப்புப் படை உருவாக்கவும் முதல்வர் ஜோசப் விஜய் முதல் கையொப்பமிட்டதை வரவேற்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனே...
9 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி: தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
admin - 0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தது கட்சியினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அங்கிருந்து நேராக சத்தியமூர்த்தி...
முன்னேற்றத்தை விரும்பும் ஒரு புதிய தலைமுறையின் குரல்: முதல்வர் ஜோசப் விஜய்க்கு தொழிற்சங்க அமைப்புகள், தலைவர்கள் வாழ்த்து
admin - 0
முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு, பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
கிரெடாய் தமிழ்நாடு தலைவர் டபிள்யூ.எஸ் ஹபீப்: தெளிவான வளர்ச்சி, வலுவான உள்கட்டமைப்பு, தூய்மையான நிர்வாகம், ஊழலற்ற சூழல் மற்றும் அமைப்புகளில் கூடுதல் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை இளைஞர்களும், நகர்ப்புற வாக்காளர்களும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த மக்கள் தீர்ப்பு என்பது வெறும் அரசியல் முடிவு மட்டுமல்ல.
இது...
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவியேற்க தொடங்கினர்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். இதனையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி தவெக உறுப்பினர் எம்.வி.கருப்பையாவை நியமிப்பதற்கான கோப்பில், முதல்வர் ஜோசப் விஜய்யிடம், பேரவைச் செயலர் கி.சீனிவாசன் ஒப்புதல் பெற்றார்.
ஆளுநர் மாளிகையில்,...
வட மாவட்டங்களில் தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி...
திண்டுக்கல், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி வெங்கடாச்சலத்தின் விருப்ப ஓய்வு ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல், தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடாச்சலம்.
இவர் 2012 பிப்.29 முதல் 2018 பிப்.24 வரை ஆட்சியராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினேன்.
புகாரின்பேரில்...
கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் தவறு இழைக்கக் கூடாது: ஐகோர்ட் நீதிபதி அறிவுரை
admin - 0
கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள அதிகாரிகள் அதில் தவறு இழைக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக திருத்தொண்டர் அறக்கட்டளை தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அறுபத்து மூவர் உலா மற்றும் பிரம்மோற்சவம் போன்ற திருவிழாக்களின் வரவு - செலவு கணக்கு விவரங்களை இந்து சமய...
இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும்...
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, போட்டி நடைபெறும் நாளன்று மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் வரும் மே 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
இதையொட்டி, ரசிகர்களுக்கு தடையற்ற பயண...
தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால்...










