சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் மீஞ்சூர் - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு பிப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு பிப். 5, 7,...
ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் செலுத்தும் வசதி திடீர் நிறுத்தம்
admin - 0
மின்வாரிய அலுவலகங்களில் ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை நேரடியாக செலுத்தும் வசதி கணினியில் முடக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பின்றி நடைமுறைப்படுத்துவதால் ஊழியர்களும் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக மின்ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2024-ம் ஆண்டு தரவுகளின்படி 3.45 கோடி மின்இணைப்புகள் உள்ளன.
இதில், தாழ்வழுத்த மின்நுகர்வோர் மட்டும் 3...
‘தொழில் முதலீட்டை ஈர்க்காமல், தொழில் முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது பொய்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை பேசினார். கட்சியினர் அளித்த வரவேற்பைப் தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு...
விருதுநகர் மாவட்டத்தில் ‘மணக்கும் மல்லிகை’ சாகுபடி: சென்ட் ஆலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
admin - 0
விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட் ஆலை அமைத்து மல்லிகைக்கு அதிக விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், கட்டங்குடி, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இவை, அருப்புக்கோட்டை, மதுரை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மாவட்டத்தில்...
என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து
admin - 0
தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், அவை விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும்,...
சென்னையில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களான மா.சுப்பிரமணியன் மற்றும் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 6 தினங்களாக தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது பல கிராமங்களுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் மனநிலை திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது. வரலாறு காணாத வெற்றியை திமுக...
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என்று மத்திய அரசுஅழுத்தம் கொடுப்பதால், 15 ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டிய நிலைஏற்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்எஸ்ஏ) தமிழகத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் வழங்க வேண்டிய பங்கீட்டுத் தொகை ரூ.573...
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
admin - 0
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் வருவதால் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,480 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைக்கிள்களை...
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடங்கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 19 பேரின் நிலங்கள் பரந்தூர் விமான நிலையத்துக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்துக்கான பணிகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து,...
ராமேசுவரம்: தமிழகத்தின் தென்கோடியில் உள்ளராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாக 1931-ம் ஆண்டு அக்.15-ம் நாள் பிறந்தார் அப்துல் கலாம். அவரின் முழு பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர். ஒரு சகோதரி.
1958-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றினார். அப்துல்...









