Google search engine
ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு முன்​பும் இது​போன்ற சந்​திப்​பு​களை நடத்தி இருக்​கி​றார் ஸ்டா​லின். அப்​போதெல்​லாம்,...
முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 44 துறைகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது இளம் பெண் ஒருவர், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு...
இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக, வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு முற்றிலும் இலவசமாகவும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஆண்டுதோறும்...
முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த...
கட்சியின் மறுசீரமைப்பையொட்டி நடைபெறும் மாற்றங்களுக்கு பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியதாவது: விசிக கட்சியின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த, சட்டப்பேரவை தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களை மறுசீரமைப்பு செய்து சிலரை விடுவிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து 144...
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பழனிசாமி கையெழுத்திட்ட படிவங்களை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி, சூரியமூர்த்தி ஆகியோர் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 இடங்களுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே பழனிசாமி பொதுச்செயலாளரானது, அவர் பல்வேறு தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் படிவங்களில் கையெழுத்திட்டு...
சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்ததால், 8 சுரங்கப்பாதைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸார் நேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். முதல் கட்டமாக மழைநீர் சூழ்ந்ததால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், சூரப்பட்டு அண்டர்...
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம்தேதி நடைபெற உள்ளது.பிரச்சாரம் 8-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அன்றுமாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை, யாரும்...
கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுதாகர், திமுக வேட்பாளர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 30-ம் தேதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர் விடுமுறைக்குப் பின் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், கும்மிடிப் பூண்டி தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன்,...