நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தொடங்கியது
admin - 0
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. முதல் நாள் தேர்வில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வை மத்திய அரசு சார்பில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது....
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி திட்டம் முறியடிப்பு: ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு
admin - 0
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்கப்பட்ட சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று, தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன், தலைவர் செ.ப.முத்தமிழ்மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி, அதிக இடங்களில் வெற்றிபெற்ற தவெக தலைவர் விஜய் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவருக்கும், அவரது கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மற்றும்...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார்.
இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து...
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய், மே 10-ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிய எம்எல்ஏ.க்களுக்கு பதவிப்பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக...
“மது இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக ஆதரவு வழங்கும்” என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முழு...
முதல்வராக பதவியேற்ற பின் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த திட்டங்களுக்கு பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: முதல்வராக பதவியேற்றவுடன் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும், போதை ஒழிப்புக்கு சிறப்புப் படை உருவாக்கவும் முதல்வர் ஜோசப் விஜய் முதல் கையொப்பமிட்டதை வரவேற்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனே...
9 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி: தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
admin - 0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தது கட்சியினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அங்கிருந்து நேராக சத்தியமூர்த்தி...
முன்னேற்றத்தை விரும்பும் ஒரு புதிய தலைமுறையின் குரல்: முதல்வர் ஜோசப் விஜய்க்கு தொழிற்சங்க அமைப்புகள், தலைவர்கள் வாழ்த்து
admin - 0
முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு, பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
கிரெடாய் தமிழ்நாடு தலைவர் டபிள்யூ.எஸ் ஹபீப்: தெளிவான வளர்ச்சி, வலுவான உள்கட்டமைப்பு, தூய்மையான நிர்வாகம், ஊழலற்ற சூழல் மற்றும் அமைப்புகளில் கூடுதல் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை இளைஞர்களும், நகர்ப்புற வாக்காளர்களும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த மக்கள் தீர்ப்பு என்பது வெறும் அரசியல் முடிவு மட்டுமல்ல.
இது...
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவியேற்க தொடங்கினர்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். இதனையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி தவெக உறுப்பினர் எம்.வி.கருப்பையாவை நியமிப்பதற்கான கோப்பில், முதல்வர் ஜோசப் விஜய்யிடம், பேரவைச் செயலர் கி.சீனிவாசன் ஒப்புதல் பெற்றார்.
ஆளுநர் மாளிகையில்,...
வட மாவட்டங்களில் தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி...










