தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி சட்டப் பேரவையில், முதல்வர்ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு...
டாஸ்மாக் பணியாளர்கள் இன்று குடும்பத்துடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கடந்த...
சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செலவில் தூர்வாரப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழக தொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்து, பரவலான முதலீடுகளை ஈர்ப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது.
லட்சம்...
வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை: தலைமைச் செயலர் எச்சரிக்கை
admin - 0
ஓய்வூதியத் திட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் தமிழக அரசு ‘டேப்ஸ்’ எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: அசோக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
admin - 0
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக,...
“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் மார்ச் 8-ல் திமுக மாநாடு நடைபெறும்” – அமைச்சர் கே.என்.நேரு தகவல்
admin - 0
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், திட்டமிட்டபடி திருச்சியில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் மார்ச் 8-ம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
திருச்சி சிறுகனூரில் 2021-ல் திமுக மாநாடு நடைபெற்ற இடமே தற்போதைய மாநாட்டுக்கும் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பந்தல்கால் நடும் நிகழ்வு...
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான எந்த முக்கிய திட்டங்களும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது மத்திய பாஜக அரசின் கண்களுக்கு தமிழகம் தெரியும்.
அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது...
மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகள் வரவேற்றும் விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சர் எல்.முருகன்: ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம், பொதிகை மலையேற்ற சுற்றுலா திட்டம் என பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை அடைவதற்கான உறுதியான பாதையை வகுக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான...
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் தினத்தையொட்டி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல் நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளை கொண்டு சேர்க்க,...
மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக ரூ.12 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
admin - 0
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்து, உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேற்று (பிப்.1) வெளியான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 7-ம் பக்கத்தில் ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டிடம் மூடல் -நோயாளிகளை செங்கல்பட்டுக்கு அனுப்பும் அவலம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
‘செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை...
