Google search engine
இளநிலை பட்​டப்​படிப்​பு​களுக்​கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழு​வதும் தொடங்​கியது. முதல் நாள் தேர்​வில் ஒரு லட்​சத்து 24 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். நாடு முழு​வதும் உள்ள மத்திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின் கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை படிப்​பு​களில் சேர கியூட் எனப்​படும் பல்​கலைக்​கழக பொதுநுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும். இத்​தேர்வை மத்திய அரசு சார்​பில் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நடத்தி வரு​கிறது....
 தமிழகத்​தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்​கப்​பட்ட சதி திட்​டம் முறியடிக்​கப்​பட்​டுள்​ளது என்​று, தமிழர் தேசிய முன்​னணி​யின் நிறு​வனர் பழ.நெடு​மாறன், தலை​வர் செ.ப.​முத்​தமிழ்​மணி ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக, அவர்​கள் கூட்​டாக நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் யாருக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத நிலை உரு​வாகி, அதிக இடங்​களில் வெற்​றி​பெற்ற தவெக தலை​வர் விஜய் முதல்​வர் பொறுப்பை ஏற்​றுள்​ளார். அவருக்​கும், அவரது கட்​சியை சார்ந்த அமைச்​சர்​கள் மற்​றும்...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார். இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து...
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய், மே 10-ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிய எம்எல்ஏ.க்களுக்கு பதவிப்பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக...
 “மது இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக ஆதரவு வழங்கும்” என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முழு...
முதல்​வ​ராக பதவி​யேற்ற பின் முதல்​வர் ஜோசப் விஜய் அறி​வித்த திட்​டங்​களுக்கு பாமக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன. இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: பாமக நிறு​வனர் ராம​தாஸ்: முதல்​வ​ராக பதவி​யேற்​றவுடன் 200 யூனிட் மின்​சா​ரம் இலவச​மாக வழங்​க​வும், போதை ஒழிப்​புக்கு சிறப்​புப் படை உரு​வாக்​க​வும் முதல்​வர் ஜோசப் விஜய் முதல் கையொப்​பமிட்​டதை வரவேற்று நன்​றியை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இதைத்​தொடர்ந்து தவெக தேர்​தல் அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ளது போல் சாதி​வாரி கணக்​கெடுப்​பை​யும் உடனே...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்​யின் பதவி​யேற்பு விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக சென்னை வந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு தமிழக காங்​கிரஸ் தலை​மையக​மான சத்​தி​யமூர்த்தி பவனுக்கு வருகை தந்​தது கட்​சி​யினரிடையே பெரும் எழுச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. நேற்று காலை டெல்​லியி​லிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்​தி, நேரு உள்​ விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்ற ஜோசப் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​கும் விழா​வில் கலந்து கொண்​டார். அங்​கிருந்து நேராக சத்​தி​யமூர்த்தி...
முதல்​வ​ராக பதவி​யேற்ற ஜோசப் விஜய்க்கு, பல்​வேறு தொழிற்​சங்கப் பிர​தி​நி​தி​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: கிரெ​டாய் தமிழ்​நாடு தலை​வர் டபிள்​யூ.எஸ் ஹபீப்: தெளி​வான வளர்ச்​சி, வலு​வான உள்​கட்​டமைப்​பு, தூய்​மை​யான நிர்​வாகம், ஊழலற்ற சூழல் மற்​றும் அமைப்​பு​களில் கூடு​தல் பொறுப்​புக்​கூறல் ஆகிய​வற்றை இளைஞர்​களும், நகர்ப்​புற வாக்​காளர்​களும் பெரிதும் எதிர்​பார்க்​கிறார்​கள் என்​பதை தேர்​தல் முடிவு​கள் காட்​டு​கின்​றன. இந்த மக்​கள் தீர்ப்பு என்​பது வெறும் அரசி​யல் முடிவு மட்​டுமல்ல. இது...
17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் புதிய உறுப்பினர்கள் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்க தொடங்கினர். தமிழக முதல்வராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்​றார். இதனையடுத்து தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி தவெக உறுப்​பினர் எம்​.​வி.கருப்​பை​யாவை நியமிப்​ப​தற்​கான கோப்​பில், முதல்​வர் ஜோசப் விஜய்​யிடம், பேரவைச் செயலர் கி.சீனி​வாசன் ஒப்​புதல் பெற்​றார். ஆளுநர் மாளி​கை​யில்,...
வட மாவட்டங்களில் தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி...