Google search engine
திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய வசதியாக ஆந்​தி​ரா​வில் 4 விமான நிலை​யங்​களி​ல் ஸ்ரீ​வாணி அறக்​கட்​டளை டிக்​கெட்​டு​கள் விற்​பனை விரை​வில் தொடங்க உள்ளது. திருப்​பதி ஏழு​மலை​யானை ​வாணி அறக்​கட்​டளை மூலம் ரூ.10,500 கட்​ட​ணம் செலுத்தி தரிசிப்​ப​தற்கு பக்​தர்​கள் அலைமோதுகின்​றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்​கொடை வழங்கியும், விஐபி பிரேக் தரிசனத்​திற்கு கூடு​தலாக ரூ.500 செலுத்தி​யும் இந்த தரிசனத்தை பெற முடி​யும். ஒய்​எஸ்​ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இது அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதன் முலம் வரும்...
உலகிலேயே இரண்டாவது நீளமான மற்றும் உயரமான ரோப் கார் சேவை காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கோண்டோலா’ என அழைக்கப்படுகிறது. முதல் கட்ட ரோப் காரில் 8,694 அடி உயரமுள்ள காங்தோரி பள்ளத்தாக்கு பகுதிக்கும், 2-வது கட்ட ரோப் காரில் 13,058 அடி உயரத்தில் உள்ள காங்தோரி மலைப் பகுதிக்கும் செல்லலாம். இந்த ரோப் காரில் நேற்று சுமார் 300 சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப...
வரும் மாநிலங்​களவை தேர்​தலுக்கு பிறகு, என்​டிஏ மற்றும் எதிர்​கட்​சிகளுக்கு தலா 2 எம்​.பி.க்​கள் கூடு​தலாக கிடைக்க வாய்ப்​புள்​ளது. ஆந்​தி​ரா, கர்​நாட​கா, குஜ​ராத் உள்​ளிட்ட 10 மாநிலங்​களில் காலியாக உள்ள 24 மாநிலங்​களவை எம்​.பி. பதவி​களுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இத்​துடன் மகாராஷ்டிரா மற்​றும் தமிழ்​நாட்​டில் தலா ஒரு எம்​.பி. பதவிக்கான இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது. இந்த 24 எம்​.பி. பதவி​களில் பாஜக தலைமையிலான கூட்டணி (என்​டிஏ)...
தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான ட்விஷாவின் மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கை மாநில அரசு கையாளும் விதம் குறித்து ட்விஷாவின்...
கேரளா​வில் சமீபத்​தில் நடை​பெற்ற சட்டப்பேரவை தேர்​தலுக்கு பிறகு காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்​துள்​ளது. புதிய முதல்​வ​ராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவி​யேற்​றார். இந்​நிலை​யில், தலைமை தேர்​தல் அதி​காரி​யாக சமீபத்​திய தேர்தலை கண்​காணித்​த ரத்​தன் யு.கேல்​கர் முதல்​வரின் செயலாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது சர்ச்​சையை ஏற்​படுத்தி​யுள்​ளது. தேர்​தலை நடத்​திய அதி​காரியை நேரடி​யாக முதல்​வர் அலு​வல​கத்​துக்கு மாற்​று​வது தேர்​தல் நடுநிலைமை குறித்த மக்​களின் பார்​வையை சீர்​குலைக்​கும் என்று எதிர்க்​கட்சிகள் வாதிடு​கின்​றன. இந்த இடமாற்​றம்...
அமெரிக்​கா​வின் பிளெட்​சர் பள்​ளி​யில் நடை​பெற்ற கலந்​துரை​யாடல் ஒன்​றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது அவர் கூறிய​தாவது: மாலத்​தீ​வில் கடந்த முறை நடை​பெற்ற அதிபர் தேர்​தலில், இந்​தி​யாவே வெளி​யேறு என்ற பிரச்சாரம் அதி​க​மாக முன்​னெடுக்​கப்​பட்​டது. அந்த பிரச்சாரத்தை முன்​னெடுத்​தவர்​தான் (முகமது முய்​சு) அங்கு அதிப​ராகப் பொறுப்​பேற்​றார். அவர் வெற்றி பெற்ற சில நாட்​களி​லேயே, இந்திய நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்ட பல ஒப்​பந்​தங்​களை ரத்து செய்​தார். அவர் அதிப​ராகப் பொறுப்​பேற்ற சில மாதங்​களி​லேயே, அந்நாட்டில்...
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானில் எபோலா வைரஸ் பரவல் உள்ளதால், இந்த நாடுகளுக்கு பயணத்தை தவிர்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலோ காய்ச்சல் பரவி வருகிறது. இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது இதற்கு தடுப்பூசி இல்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த நாடுகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இதனால்...
மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு அறிவித்தது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை பாஜக கூறியிருந்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு பல்வேறு அதிரடி...
கேரள தேவஸ்​வம் துறை அமைச்​சர் கே.முரளிதரன் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சபரிமலை ஐயப்​பன் கோ​யிலுக்கு சொந்​த​மான தங்​கம் காணா​மல் போனது தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வின் (SIT) அறிக்​கைக்​காக காத்​திருக்​கிறோம். அந்த அறிக்கை கிடைத்​தவுடன் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் உடனடி​யாகத் தொடங்​கும். கடவுள் சொத்​தைக் கொள்​ளை​யடித்த எவரும் சட்​டத்​தின் பிடி​யில் இருந்து தப்ப முடி​யாது. எபோலா வைரஸ் தொற்று குறித்து கேரள மக்​கள் அச்​சப்​படத் தேவை​யில்​லை. இந்​தி​யா​வில் இது​வரை எபோலா பாதிப்பு...
தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த சிறுநீர க​வியல் துறை மருத்​து​வர் சையது முகமது கவுஸ், சீனா​வின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்​து​வ​மனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்​சை​யில் சிறப்பு பயிற்​சிகளைப் பெற்​றார். இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000 கி.மீ. தொலை​வில் உள்ள ஹைத​ரா​பாத் மருத்​து​வ​மனை​யில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்​தார். இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்​கள் நீடித்​தது. ஹைத​ரா​பாத் மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்​கப்​பட்​டு,...