சுமார் 20,000 டன் எரிவாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த மார்ஷல் தீவுகளின் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘சிமி' என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சரக்குக் கப்பல், உலக அளவில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மே 13 அன்று கடந்து, இந்தியத் துறைமுகத்தை வந்தடைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில்,...
ம.பி.யின் தார் நகரில் உள்ள போஜ்சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ம.பி. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாங்கள் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் முஸ்லிம் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அயோத்தி விவகாரத்துக்கு பிறகு, பிற வழக்குகளிலும் இதேபோன்ற முடிவுகள்எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாட்டில் மசூதி- கோயில் சர்ச்சை தொடர்பாக 10 வழக்குகள் நீதிமன்றங்களில்...
நீட் வினாத்தாள் கசிவு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) புதிதாக 4 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நீட், ஜேஇஇ, கியூட், சிமாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி என்டிஏ தலைவராகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் இயக்குநராகவும் செயல்படுகின்றனர்.
மேலும்...
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, தனது மகனை போலீஸில் ஒப்படைத்ததாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார்.
பாஜகவின் தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்). சட்டம் மற்றும் நீதித்துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத்...
விமானப் படைக்காக குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார்
admin - 0
விமானப்படை பயன்பாட்டுக்காக குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள டாடா - ஏர்பஸ் மையத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்திய விமானப்படையில் வீரர்கள் மற்றும் சரக்கு போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆவ்ரோ -748 விமானங்களுக்கு மாற்றாக ஏர்பஸ் நிறுவனத்தின் சி-295 ரக விமானத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதில் 70 வீரர்கள் பயணிக்கலாம், ராணுவத் தளவாட பொருட்களையும் எடுத்துச் செல்லலாம். குறுகிய ஓடுதளத்தில்...
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ நீதிமன்றத்தில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
admin - 0
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 10 பேர் கைதாகினர். காரை ஓட்டிவந்து வெடிக்கச் செய்த முக்கிய குற்றவாளி புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி என தெரியவந்தது.
டெல்லி பாட்டியாலா...
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 2 கட்டங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், 3-வது கட்டமாக எஞ்சிய 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தற்போதைக்கு எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாது என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மேலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தி தீவைத்தனர் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரிணமூல்...
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி நாக ரத்தினா, எம் எம் சுந்தரேஷ், ஏ.அமானுல்லா, ஏ.ஜி. மசி, பி.பி. வர்லே, ஆர். மகாதேவன், ஜோய்மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற 16-வது நாள்...
வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை...










