குஜராத் மாநில அரசு, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முதல் பிரத்யேக ‘விக்சித் குஜராத் தரவு மையக் கொள்கை 2026- 29’ என்ற திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது.
இது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா கூறியதாவது: பிரத்யேக தரவு மையக் கொள்கை திட்டத்தின் மூலம் முதல் கட்டத்திலேயே ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகளாவிய தொழில்...
பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சாதனையாக, ஆஸ்திரேலியாவிடம் இருந்த மூன்று தொன்மையான இந்திய சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
மீட்கப்பட உள்ள அந்த சிலைகள் பின்வருமாறு:
* திரிசூல மங்கள காளி (பத்ரகாளி): திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமம் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த 46 செ.மீ. உயரம், 29 செ.மீ. அகலம், 55 செ.மீ. விட்டம் உள்ள சிலை.
* நந்தி:...
ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாநில வக்பு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார்.
வக்பு (திருத்த) சட்டம், 2025-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் புதிய வாரியம், இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நாட்டின் முதலாவது மாநில அளவிலான வக்பு வாரியம் ஆகும்.
இது குறித்து உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், ”வக்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தான்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சேப்பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் அண்மையில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி கரை திரும்பவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் அளித்த தகவலின்படி அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இதில் கடலோர ரோந்துப் படையினரும் ஹெலிகாப்டர் உதவியுடன் 72 மணி நேரமாக தொடர்ந்து தேடினர். எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அந்த 7 மீனவர்களில் காரி சின்னா மட்டும் உயிர் தப்பி...
‘ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு முடிவுகள் கசிந்து விட்டன’
admin - 0
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்கும் எஸ்ஐடியின் முடிவுகள் கசிந்து விட்டதாக அயோத்தி சமாஜ்வாதி எம்.பி. அவதேஷ் பிரசாத் புகார் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உ.பி.யின் ஆளும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. தீவிரமான கேள்விகளை எழுப்பி வருகின்றன. அயோத்தி தொகுதி சமாஜ்வாதி எம்.பி.யான அவதேஷ் பிரசாத் எஸ்ஐடி மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
இது...
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் சென்றார்.
இந்தோனேசியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான...
மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ஜூலை 6-ம் தேதி ஒரே நாளில் 523 மரங்கள் விழுந்துள்ளன. கோரேகான், குர்லா, மாதுங்கா மற்றும் தாதர் ஆகிய பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம்...
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று அவரது தாய் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பருய்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஜூலை 4-ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஜூலை 5-ம் தேதி, பருய்பூரில் உள்ள ஒரு குளத்தில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட...
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் படுகொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
admin - 0
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பரூய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் மோண்டல். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனிமையான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு ஆனந்த் சர்தார், திவாகர் சர்தார் என்ற இருவருடன்...
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை சற்று நிம்மதி கிடைத்த நிலையில், நேற்று மீண்டும்...










