ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை அழித்தோம்: முதலாம் ஆண்டு நிறைவு நாளில் விமானப் படை தகவல்
admin - 0
‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள், 11 விமானப்படை தளங்களை இந்தியப் படைகள் அழித்தது’’ என்று விமானப்படை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று...
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
"கேரளாவில் 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களம் கண்ட இடதுசாரி முன்னணிக்கு இந்தத் தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த தோல்வி முழு வியப்பையும் பேரதிர்ச்சியையும் அளித்துள்ளது. தேர்தல் பின்னடைவை ஒப்புக்கொண்டு மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
சட்டமன்றத்தில் இடதுசாரி முன்னணி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படும். சமூக நலத்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் நகரங்களில் கடந்த 5-ம் தேதி இரவு அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக திட்டமிட்டு கலவரங்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்துவதாக முதல்வர் பகவந்த் மான் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சக், முதல்வர் பகவந்த் மானுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது...
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம்: மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது.
இதுபோன்ற சர்ச்சைகளின் போது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே பெரிதும் விவாதிக்கப்படுகிறது. கடந்த 1994-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ஒரு ஆட்சிக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை சட்டப்பேரவையில்தான் அறிய முடியும். ஆளுநர் மாளிகையில் இல்லை. பெரும்பான்மை ஆதரவு...
முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கடந்த 5ம் தேதி நிருபர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில்...
கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், கூட்டம் மேலும் அதிகரித்தது.
இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். கோடை காலத்தில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கடந்த மே 1-ம் தேதி முதல்...
அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியா – வியட்நாம் இணைந்து பாடுபடும்: பிரதமர் மோடி அறிவிப்பு
admin - 0
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வருகை தந்துள்ள வியட்நாம் அதிபர் டோ லாம் மற்றும் பிரதமர் மோடி இடையிலான உயர்நிலை குழுப் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உறவுகளைப்...
பாஜகவின் 6-ல் ஒரு மக்களவை எம்.பி. வாக்குத் திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்: ராகுல் காந்தி விமர்சனம்
admin - 0
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் இடங்களைக் கைப்பற்றவும், சில நேரங்களில் ஒட்டுமொத்த அரசுகளையே கவிழ்க்கவும் வாக்குகள் திருடப்படுகின்றன.
மக்களவையில் உள்ள 240 பாஜக எம்.பி.க்களில், தோராயமாக ஒவ்வொரு 6-வது எம்.பி.யும் (6-ல் ஒருவர்) வாக்குத் திருட்டு மூலமே வெற்றி பெற்றுள்ளார். அவர்களைக் கண்டறிவது கடினமல்ல. பாஜக பாணியிலேயே அவர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று அழைக்கலாமா ? ஹரியானாவைப்...
பத்தாயிரம் கி.மீ. வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயாராக உள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-6’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயாராக இருப்பதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக தனது அதிகாரப்பூர்வ...
அசாம் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக இக்கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இதனிடையே, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்துக்கான மத்தியப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் பாஜகவின் மத்தியப் பார்வையாளர்கள் குவாஹாட்டிக்கு வருவார்கள் என்றும், அதன்...










