குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் புதுப்பிக்கப்பட்டு 1951-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இக்கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குஜராத்தில் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால்...
அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவியேற்க உள்ளார்.
அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், குவாஹாட்டியில் என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து,...
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இது தொடர்பாக கோகினூர் மஜும்தார், ரிஜு தத்தா மற்றும் கார்த்திக் கோஸ் ஆகியோருக்கு கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும், தொடர்ச்சியாகக் கட்சி விதிகளுக்கு மாறாகச் செயல்பட்டதாலும் அவர்கள் மூவரும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்....
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் முசாஜி கெடா வாலாவுக்கும் அவருடைய மனைவி பர்சானாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஷம்சுதீன், அவரது சகோதரர் இக்பால் கெடாவாலா மற்றும் இரு கூட்டாளிகளுடன் இணைந்து பர்சானாவைக் கொலை செய்துள்ளனர். அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக அந்தக் குடும்பத்தினர் குற்ற உணர்ச்சியாலும், கொல்லப்பட்ட பெண்ணின் நிழல் தங்களைத் துரத்துவதாக ஏற்பட்ட மாயை யாலும் கடும் பீதியில் இருந்துள்ளனர்.
அந்த ஆவியிடமிருந்து விடுபட அவர்கள்...
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், "போதைப் பொருள் வர்த்தகத்தில்...
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி அந்த பதவியில் அமர உள்ளார்.
இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற...
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோடினி கிராமம் உள்ளது. அங்கு சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் காரணமாக கோடினி கிராமம், இரட்டையர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இரு குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படும்....
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு...
உத்தர பிரதேசம் லக்னோவில் 71 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளார்.
உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் அசோக் பாஹர்(71). உத்தராகண்டில் உள்ள இந்திய மருந்துள் நிறுவனத்தில் (ஐடிபிஎல்) மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும், வெளியுறவுத்துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி டாக்டர். மஞ்சு பாஹர் மகப்பேறு மருத்துவர்.
அசோக் பாஹரின் தந்தையும் லக்னோவில் பிரபல மருத்துவராக இருந்தவர். அதனால் இவரும் மருத்துவராக வேண்டும்...
கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டுமே 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவின்...










