Google search engine
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் புதுப்பிக்கப்பட்டு 1951-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இக்கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குஜராத்தில் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால்...
அ​சாம் மாநில முதல்​வ​ராக 2-வது முறை​யாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவி​யேற்க உள்​ளார். அசாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் (என்​டிஏ) கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 102 இடங்​களில் அமோக வெற்றி பெற்​றது. இதன் மூலம் இக்​கூட்​டணி தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது. இந்​நிலை​யில், குவாஹாட்​டி​யில் என்​டிஏ எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டம் நேற்று நடைபெற்றது. இதில் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்​து,...
மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்​சனங்​களை முன்​வைத்​தனர். இது தொடர்​பாக கோகினூர் மஜும்​தார், ரிஜு தத்தா மற்​றும் கார்த்​திக் கோஸ் ஆகியோ​ருக்கு கட்​சித் தலைமை விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​தது. அவர்​கள் அளித்த விளக்​கம் திருப்தி அளிக்​காத​தா​லும், தொடர்ச்​சி​யாகக் கட்சி விதி​களுக்கு மாறாகச் செயல்​பட்​ட​தா​லும் அவர்​கள் மூவரும் கட்​சியி​லிருந்து சஸ்​பெண்ட் செய்யப்பட்டனர்....
குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால் கெடா​வாலா மற்றும் இரு கூட்​டாளி​களு​டன் இணைந்து பர்​சா​னாவைக் கொலை செய்​துள்​ளனர். அதற்​குப் பிறகு பல ஆண்​டு​களாக அந்தக் குடும்பத்​தினர் குற்ற உணர்ச்​சி​யாலும், கொல்​லப்​பட்ட பெண்ணின் நிழல் தங்​களைத் துரத்​து​வ​தாக ஏற்​பட்ட மாயை யாலும் கடும் பீதி​யில் இருந்​துள்​ளனர். அந்த ஆவி​யிட​மிருந்து விடுபட அவர்​கள்...
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், "போதைப் பொருள் வர்த்தகத்தில்...
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக  லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில்  ராஜா சுப்ரமணி அந்த பதவியில் அமர உள்ளார். இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற...
 கேரளா​வின் மலப்​புரம் மாவட்​டத்​தில் கோடினி கிராமம் உள்​ளது. அங்கு சுமார் 2,000 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன. பெரும்​பாலும் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் ​காரண​மாக கோடினி கிராமம், இரட்​டையர் கிராமம் என்று அழைக்​கப்​படு​கிறது. இதுகுறித்து கிராம மக்​கள் கூறிய​தாவது: கடந்த 70 ஆண்​டு​களாக எங்​கள் கிராமத்​தில் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​பது வழக்கமாக இருந்து வரு​கிறது. இரு குழந்​தைகளும் ஒரே மாதிரியாக இருப்​ப​தால் அவர்​களை அடை​யாளம் காண்​ப​தில் பெரும் சிரமங்​கள் ஏற்​படும்....
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.  கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு...
உத்தர பிரதேசம் லக்னோ​வில் 71 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வுக்கு விண்​ணப்​பித்து தேர்வு எழு​தி​யுள்​ளார். உத்தர பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​தவர் அசோக் பாஹர்​(71). உத்​த​ராகண்​டில் உள்ள இந்​திய மருந்​துள் நிறு​வனத்​தில் (ஐடிபிஎல்) மார்க்​கெட்​டிங் பிரிவு தலை​வ​ராக​வும், வெளி​யுறவுத்​துறை​யில் ஆலோ​சக​ராக​வும் பணி​யாற்றி விருப்ப ஓய்வு பெற்​றுள்​ளார். இவரது மனைவி டாக்​டர். மஞ்சு பாஹர் மகப்​பேறு மருத்​து​வர். அசோக் பாஹரின் தந்​தை​யும் லக்​னோ​வில் பிரபல மருத்​து​வ​ராக இருந்​தவர். அதனால் இவரும் மருத்​து​வ​ராக வேண்​டும்...
கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டுமே 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவின்...