ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான 10 நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆக.16-ம் தேதி தொடங்கி, ஆக.26-ம் தேதி வரை திருவோணம் திருநாளுடன் நிறைவடைகிறது. இந்த விழா காலம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சுற்றுலா நிகழ்வுகளால் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும். எனவே, பயணிகள் வசதிக்காக, 100-க்கும் மேற்பட்ட...
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்களை நிரந்தர பணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் 3 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவம் கொண்ட இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.
கார்கில் போருக்குப் பிறகு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியம், லெப்டினென்ட் ஜெனரல்...
ஆக்ராவில் தாஜ்மகால் வளாகத்தில் அகழாய்வு நடத்தக் கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் ஏஎஸ்ஐ-க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உ.பி.யின் ஆக்ராவில் உலகின் 7-வது அதிசயமாக கருதப்படும் தாஜ்மகால் உள்ளது. இது முகலாய மன்னர் ஷாஜஹானால் 1563-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது அங்கிருந்த ஒரு கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுகின்றன.
தற்போது உ.பி.யின் பகவான் ஸ்ரீ அக்ரேஷ்வர் மஹாதேவ் நாகநாதேஷ்வர் விராஜ்மான் தேஜோ மகாலயா...
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் கராஜியா கிராமத்துக்குள் சிங்கம் ஒன்று நேற்று புகுந்தது. அது ஒரு பசு மாட்டு கூடாரத்தின் அருகே பதுங்கியிருந்தது.
அப்போது பசுக்களுக்கு தீவனம் போடச் சென்ற உரிமையாளர் பார்மர் மீது சிங்கம் பாய்ந்து அவர் தப்ப முடியாமல் கால்களால் அழுத்தி பிடிக்குள் வைத்திருந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால், அவரின் கை சிங்கத்தின் வாயிலும்,...
உள்நாட்டில் 100 நாளில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி அனைத்து சோதனைகளையும் முடித்து மத்திய ஆயுதப்படைகளுக்காக கொள்முதல் செய்யப்படவுள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘த்விப்பா’. ராணுவம் மற்றும் போலீஸாருக்கு துப்பாக்கிகள் தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு உரிமம் பெற்று இதுவரை 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரகங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனத்தில் யு-19 இயந்திரத் துப்பாக்கி, இலகு ரக இயந்திரத் துப்பாக்கி, யு-45,...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவராக இருந்த சந்திரிமா பட்டாச்சார்யா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து எதிரணியுடன் சேர்ந்தார். இது மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக மம்தா இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர் சந்திரிமா பட்டாச்சார்யா. மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிலை குலையத் தொடங்கியது. திரிணமூல்...
மும்பையில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புனே, சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷியா பயணத்தை முடித்துக் கொண்டு 8-ம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, 9-ம் தேதி மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் இந்தியர்கள்...
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை விவகாரம் வெளியாவதற்கு முன்பு ரூ.18 லட்சமாக இருந்த தினசரி டெபாசிட் ரூ.24 லட்சம் ஆக உயர்வு
admin - 0
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு வரை, ராம ஜென்ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் தினமும் சராசரியாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இந்தத் தொகை தினமும் ரூ.24 லட்சம் முதல்...
சிறார் பாலியல் வீடியோ குறித்து இன்ஸ்டாகிராமில் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
admin - 0
பாலியல் வன்கொடுமை, சிறார் பாலியல் வீடியோ தொடர்பான விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் வருவது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபலமான சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து செயல்படும் மெட்டா நிறுவனம் நிர்வகிக்கிறது. வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ள ‘யூசர்நேம்’ அம்சம் குறித்து விளக்கம் அளிக்க மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு நோட்டீஸ்...










