பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை நிறுவியவர் அமீர் ஹம்சா (66). இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர். இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரு செய்திச் சேனல் அலுவலகத்துக்கு வெளியில் அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஹம்சா தாக்குதலுக்கு...
தாய்லாந்தில் உலகின் மிகப் பெரிய தண்ணீர் திருவிழாவின்போது 3 நாளில் விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழப்பு
admin - 0
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தண்ணீர் திருவிழாவின்போது சாலை விபத்துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகிறது. தாய் தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘சோங்க்ரான்' என்ற சொல் இந்தியாவின் சங்கராந்தி என்ற வார்த்தையுடன் ஒத்துப்போகிறது. தெற்காசியாவின் பல இன மக்களிடையே புத்தாண்டு இந்த சமயத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும்...
உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது 700 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு
admin - 0
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நேற்று முன்தினம் 700 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பல மணி நேரம் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது மிகப் பெரியளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தவில்லை. தற்போது உக்ரைன் மீது மீண்டும் மிகப் பெரியளவிலான தாக்குதலை ரஷ்யா நேற்று முன்தினம் நடத்தியது. உக்ரைன் தலைவர்...
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி...
மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், கடந்த இரு நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.
இந்தச் சூழலில்...
ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா.
கடந்த மார்ச் 28-ம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின்னர் 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது.
இந்தச் சூழலில், ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா....
“நாங்கள் முயன்றோம்; இப்போது முடிவு ஈரான் வசம்” – அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஜே.டி.வான்ஸ்
admin - 0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜே.டி.வான்ஸ், “அமைதிப்...
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள்...
அமெரிக்காவின் தடையை மீறி சீன எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இரு முனைகளிலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க கடற்படை முடக்கி உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவின் தடையை மீறி சீனாவின் ரிச்ஸ்டாரி என்ற எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இதில் 2.5 லட்சம் பேரல் மெத்தனால்...
பாகிஸ்தான் மருத்துவமனையில் ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று
admin - 0
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே மருத்துவ சாதனத்தை பல நோயாளிகளுக்கு பயன்படுத்துதல் என பல்வேறு பாதுகாப்பற்ற நடைமுறைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே எச்ஐவி பரவலுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தவுன்சாவில் 8 வயது சிறுவன் எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இறுதி நாட்களில்,...










