Google search engine
இந்​திய - பிரிட்​டானிய எழுத்​தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்​தானின் வேதங்​கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளி​யிட்​டார். இது இஸ்​லாமியர்​களின் மத உணர்​வு​களைப் புண்​படுத்​து​வ​தாக புகார் எழுந்தது. இதனால் சல்​மான் ருஷ்டி உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வில் நடை​பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்​றில் சல்​மான் ருஷ்டி தாக்​கப்​பட்​டார். அவரை ஹாதி மாதர் (28) என்​பவர் கத்​தி​யால் 15 முறை குத்​தி​னார். இதில் சல்​மான் ருஷ்டி தனது...
எல்​லைக் கண்​காணிப்​பு, பாது​காப்​பு, தளவாடங்​கள் மற்​றும் போக்​கு​வரத்தை பலப்​படுத்​து​வதற்​காக, திபெத்​தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்​திற்கு அரு​கில் ட்ரோன் ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறு​வி​யுள்​ளது. சீனா இந்​திய எல்​லைக்கு அரு​கில் உள்ள பகு​தி​களில் ராணுவ பலத்தை அதி​கரித்து வரு​கிறது. லடாக்​கின் லே பகு​திக்கு அரு​கில் உள்ள ஹேட்​டன் விமானப்​படை தளத்​தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்​களை நிறுத்​தி​யுள்​ளது. அருணாச்​சலப் பிரதேசத்​தின் தவாங் பகு​திக்கு அரு​கில் 4 ஜே-20...
 ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்​தில், செவ்வாய்க் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. இந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், தனது தலைமையில் அவசரகால பேரிடர் நிவாரணக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவு உள்ளது. இங்கு குமாமோட்டோ பகுதியில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது....
தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை அன்று கூறியதாவது: ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம் மற்றும் பல்வேறு நாசவேலைகளை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்புகள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது. அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம்...
குறைந்த கட்​ட​ணத்​தில் சுற்​றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்​கள் தாய்​லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்​றுலா​வுக்கு சுமார் ரூ.2 லட்​சம் செலுத்தி உள்​ளனர். கடந்த 21-ம் தேதி சுவர்​ணபூமி விமான நிலை​யத்​துக்கு வந்த அவர்களை, சுற்​றுலா ஏற்​பாடு செய்​தவர்​கள் என்று கூறி டாக்ஸி மூலம் பட்​டா​யா​வுக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்​கிளில் பாங் லாமுங் மாவட்​டத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். அங்கு அவர்​களின் கை, கால்​களை கட்​டிப் போட்டு...
தொழில​திபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: இன்​னும் 10 ஆண்​டு​களில் மனிதர்​கள் ஏஐ-யிடம் தங்​கள் கட்​டுப்​பாட்டை இழப்​பார்​கள். 2036-ம் ஆண்​டுக்​குள் உலகம் ரோபோக்​கள் வசம் செல்​லும். ஏஐ மனிதகுலத்​தையே அழிப்​ப​தற்கு 10 முதல் 20% வாய்ப்​பு​கள் உள்​ளன. அதி​கார அமைப்​பில் விரை​வில் மாற்​றம் ஏற்​படும். அடுத்த 5 ஆண்டு​களில் ஒட்​டுமொத்த மனிதகுலத்​தின் அறிவை​யும் ஏஐ விஞ்​சி​விடும். ஒரு விஷ​யத்தை மனிதர்​களை விட...
ஜப்பானின் தெற்குப் பகுதியான குமாமோட்டா மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த வணிக வளாகத்தில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குமாமோட்டோ மாகாணத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் மத்திய கியூஷு தீவின் மிகப் பெரிய நகரமான குமாமோட்டோவுக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக ஜப்பான் வானிலை...
இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தியா என்று தெற்காசிய நாடுகளில் 2022-ல் தொடங்கி ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களின் போராட்டமும், அதன் மூலம் நிகழ்ந்த ஆட்சி, அரசியல் மாற்றங்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்துவிட்டன. இந்தப் பட்டியலில் அண்டை நாடான பாகிஸ்தான் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் ஜென்ஸீக்கள் அப்படியொரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாததன் பின்புலத்தைப் பார்ப்போம். அத்தனை காரணிகள் இருந்தும்... இத்தனைக்கும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய புரட்சி வெடிக்கத் தேவையான அளவு பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடை​பெற்று வரும் தேர்​தலைப் புறக்​கணிக்​கக் கோரி நடை​பெற்ற போராட்​டத்​தில் பாகிஸ்​தான் ராணுவம் 20 பேரை சுட்​டுக் கொன்றதால் பதற்​றம் நிலவுகிறது. பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் 53 தொகு​தி​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டு, 3 கட்​டங்​களாக ஆகஸ்ட் 10-ம் தேதி வரை வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. ஜூலை 27 அன்று முதற்​கட்ட வாக்​குப்​ப​திவு தொடங்​கிய நிலை​யில், தேர்​தலை புறக்​கணிக்​கக் கோரி ‘ஜா​யிண்ட் அவாமி ஆக்​சன் கமிட்​டி’...
ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்​தில், நேற்று சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. கடலுக்கு அடி​யில் 10 கி.மீ ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 7.1 ஆக பதி​வானது. இதைத் தொடர்ந்​து, ஒரு மீட்​டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்​கூடும் என ஜப்​பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்​தது. இந்த நிலநடுக்​கத்​தால் உயிர்ச்​சேதம் குறித்த தகவல்​கள் எது​வும் உடனடி​யாக...