Google search engine
பாகிஸ்​தானில் தீவிர​வாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பை நிறு​விய​வர் அமீர் ஹம்​சா (66). இந்​தி​யா​வில் மட்​டுமின்றி உலகம் முழு​வதும் பல தீவிர​வாத செயல்களுடன் தொடர்​புடைய​வர். இந்​நிலை​யில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரு செய்​திச் சேனல் அலுவல​கத்​துக்கு வெளி​யில் அவர் மீது மர்ம நபர்​கள் துப்பாக்கிச்​ சூடு நடத்​தினர். இதில் படு​கா​யம் அடைந்த அவர் மருத்​து​வ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. ஓராண்டுக்கும் குறை​வான காலத்​தில் ஹம்சா தாக்குதலுக்கு...
தாய்​லாந்​தில் நடை​பெற்று வரும் தண்ணீர் திருவிழா​வின்​போது சாலை விபத்​துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தாய்​லாந்து நாட்டு மக்​களின் புத்​தாண்டு சோங்க்ரான் என்று அழைக்​கப்​படு​கிறது. தாய் தேசிய புத்​தாண்டு ஆண்​டு​தோறும் ஏப்​ரல் 9-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. ‘சோங்க்​ரான்' என்ற சொல் இந்​தி​யா​வின் சங்​க​ராந்தி என்ற வார்த்​தை​யுடன் ஒத்​துப்​போகிறது. தெற்​காசி​யா​வின் பல இன மக்​களிடையே புத்​தாண்டு இந்த சமயத்​தில்​தான் கொண்​டாடப்​படு​கிறது. சோங்க்​ரான் மத சடங்​கு​கள், பாரம்​பரிய நடனங்​கள், இசை மற்​றும்...
உக்ரைன் தலைநகர் கீவ் பகு​தி​யில் குடி​யிருப்​பு​கள் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் 700 ட்ரோன்​கள் மற்​றும் ஏவுகணை​கள் மூலம் பல மணி நேரம் தாக்​குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயி​ரிழந்​தனர், 80 பேர் காயம் அடைந்​தனர். கடந்த சில வாரங்களாக உக்​ரைன் மீது மிகப் பெரியளவி​லான தாக்​குதலை ரஷ்யா நடத்​த​வில்​லை. தற்​போது உக்​ரைன் மீது மீண்​டும் மிகப் பெரியளவி​லான தாக்​குதலை ரஷ்யா நேற்று முன்​தினம் நடத்​தி​யது. உக்​ரைன் தலை​வர்...
 ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி...
மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார். இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், கடந்த இரு நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றன. இந்தச் சூழலில்...
ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா. கடந்த மார்ச் 28-ம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின்னர் 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இந்தச் சூழலில், ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா....
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஜே.டி.வான்ஸ், “அமைதிப்...
பிரதமர் நரேந்​திர மோடி​யும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் நேற்று தொலைபேசி​யில் 40 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்​தும், ஹார்​முஸ் ஜலசந்​தியைத் திறப்​பது குறித்​தும் இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து தாக்​குதல் நடத்​தின. இதற்கு பதிலடி தரும் வகை​யில் வளை​கு​டா​வில் உள்ள அமெரிக்​கா​வின் நட்பு நாடு​கள்...
அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்​றது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகிறது. ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்தை அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் தடையை மீறி சீனா​வின் ரிச்ஸ்டாரி என்ற எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தியை கடந்​தது. இதில் 2.5 லட்​சம் பேரல் மெத்​த​னால்...
பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்​டார மருத்​து​வ​மனை உள்​ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்​திய ஒரு ரகசிய ஆய்​வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்​டும் மீண்​டும் பயன்படுத்​துதல், ஒரே மருத்​துவ சாதனத்தை பல நோயாளி​களுக்கு பயன்​படுத்​துதல் என பல்​வேறு பாதுகாப்​பற்ற நடை​முறை​களை அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது. இதுவே எச்​ஐவி பரவலுக்​கும் வழி​வகுத்​துள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது. தவுன்​சா​வில் 8 வயது சிறு​வன் எச்​ஐவி தொற்று உறு​தி செய்​யப்​பட்ட சிறிது நேரத்​திலேயே உயி​ரிழந்​தான். இறுதி நாட்​களில்,...