ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறத்திலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் முடக்கியது. ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முடியாது...
இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
“இனி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; நான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போகிறேன்,” என்று டொனால்டு ட்ரம்ப் “ஐ டோண்ட் கேர்” மனநிலைக்குள் சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஈரான்...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பற்றி விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்களில், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்தினம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 14-ம் லியோ பற்றி செய்தியாளர்களிடமும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். தான் போப்பின் ரசிகர் அல்ல என்றும் அவர் சிறந்த முறையில்...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பிலும் 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 21...
மத்திய கிழக்கு துறைமுகங்களை தாக்குவோம்: ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை
admin - 0
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது: எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்கமாட்டோம். இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை...
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இருப்பினும், மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில்...
கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு
admin - 0
கடல் கண்ணி வெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. குறிப்பாக கடலுக்கு அடியிலும், சில நூறு அடி ஆழத்திலும் கடலுக்கு மேலேயும் கண்ணி வெடிகள் வீசப்பட்டன. இதனால் சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுக்குத் தட்டுப்பாடு...
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே சென்றது, பெரும்பாலான அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை. எனவே, உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில், உலகின் மிகச்சிறந்த...
பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்
admin - 0
அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பும் இணைந்து 2 வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் அமைதிப்...
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது.
தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில் அடிக்கடி ராக்கெட் குண்டு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 2 வாரங்க ளாக லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வந்தது.
காசாவின் ரஃபா, பெய்ட் ஹானன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை எல்லாம்...










