Google search engine
ஹார்முஸ் ஜலசந்தி முடக்​கத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும் என்று சவுதி அரேபியா வலி​யுறுத்தி வரு​கிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்​கா, ஈரான் இடையே நடை​பெற்ற அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புறத்​தி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்​தினம் முடக்​கியது. ஈரான் துறை​முகங்​களில் இருந்து வரும் எந்​தவொரு கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முடி​யாது...
இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. “இனி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; நான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போகிறேன்,” என்று டொனால்டு ட்ரம்ப் “ஐ டோண்ட் கேர்” மனநிலைக்குள் சென்றுவிட்டார். இந்நிலையில், ஈரான்...
கத்​தோலிக்க திருச்​சபை தலை​வர் போப் பற்றி விமர்​சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்​களில், தன்னை இயேசு​வாக சித்​தரிக்​கும் ஏஐ புகைப்​படத்தை சமூக வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​துள்​ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்​தினம் கத்​தோலிக்க திருச்​சபை​யின் தலை​வர் போப் 14-ம் லியோ பற்றி செய்​தி​யாளர்​களிட​மும் சமூக வலை​தளங்​களி​லும் பல்​வேறு விமர்​சனங்​களை முன்​வைத்​தார். தான் போப்​பின் ரசிகர் அல்ல என்​றும் அவர் சிறந்த முறை​யில்...
ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்​பிலும் 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. சுமார் 21...
ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க அனு​மதி வழங்​க​மாட்​டோம். இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்​களின் கட்​டுப்​பாட்​டில் மட்​டுமே இருக்​கும். சர்​வ​தேச சட்ட விதி​களுக்கு எதி​ராக அமெரிக்க ராணுவம் செயல்​பட்டு வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்​தியை...
ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரத் தடைகளால் ஈரானிட​மிருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்தி வைத்​திருந்​தது. இருப்​பினும், மேற்கு ஆசி​யப் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தை​யில்...
கடல் கண்​ணி வெடிகள் எங்​கெல்​லாம் இருக்​கின்றன என்​ப​தைக் கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் ஹார்​முஸ் ஜலசந்​தியை முழு​மை​யாக திறப்​ப​தில் சிக்​கல் நீடிக்​கிறது. அமெரிக்கா உடனான போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி முழு​வதும் நூற்​றுக்​கணக்​கான கண்​ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி​யுள்​ளது. குறிப்​பாக கடலுக்கு அடி​யிலும், சில நூறு அடி ஆழத்​தி​லும் கடலுக்கு மேலே​யும் கண்ணி வெடிகள் வீசப்​பட்​டன. இதனால் சரக்​குக் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யுக்​குத் தட்​டுப்​பாடு...
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே சென்றது, பெரும்பாலான அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை. எனவே, உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில், உலகின் மிகச்சிறந்த...
அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பும் இணைந்து 2 வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் அமைதிப்...
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது. தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில் அடிக்கடி ராக்கெட் குண்டு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 2 வாரங்க ளாக லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வந்தது. காசாவின் ரஃபா, பெய்ட் ஹானன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை எல்லாம்...