Google search engine
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக வசித்​துக்​கொண்டு, லாரி ஓட்​டுநர்​களாகப் பணி​யாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் விரை​வில் நாடு கடத்​தப்பட உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரிசோனாவின்யுமா செக்​டார் பகு​தி​யில் எல்லை ரோந்​துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்​மேட்' என்ற திட்​டத்​தின் கீழ் அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக இருந்த 52 பேரை கைது செய்​தனர்....
 ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், நான்...
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில் மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. அது தொடர்பாக இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை...
அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர். அப்​போது முதல் காதலித்து வந்​தனர். இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்' என்ற இடத்​தில் இவர்களது திரு​மணம் நடை​பெற்​றது. சுமார் 400 விருந்​தினர்​கள் கலந்​து​கொண்ட இந்த...
அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்​களை அமெரிக்​கப் படைதகர்த்​தது. அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோன் சர்​வ​தேச கடல் பகு​தி​யில் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டது. இதை ஈரான் சில நாட்​களுக்கு முன்பு சுட்டு வீழ்த்​தி​யது. ஈரான் வான் எல்​லைக்​குள் நுழைந்​த​தால் சுட்டு வீழ்த்​தினோம் என ஈரான் கூறியது. இதற்கு பதிலடி​யாக ஈரானின் கோருக் மற்​றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள...
தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறியுள்ளார். இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறிந்தன. இந்நிலையில் ஆசிய-பசிபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் 44 ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று நாடுகளுக்கு...
ஈரானின் ராணுவ இலக்​கு​களை குறி ​வைத்து அமெரிக்கா சில நாட்​களுக்கு முன்பு தாக்​குதல் நடத்​தி​யது. இந்நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்​கா​வின் எம்​.க்​யூ-9 ரீப்​பர் ரக ட்ரோனை, உள்​நாட்​டில் உருவாக்​கப்​பட்ட ஆராஷ்-இ-கமன்​கீர்’ என்ற வான்​ பாது​காப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது. அமெரிக்க ட்ரோனின் மதிப்பு 30 மில்​லியன் டாலர் என கூறப்படுகிறது. அவற்றை ரேடார்​களின் உதவி​யில்​லாமல், குறைந்த செல​வில் தயாரிக்​கப்​பட்ட வான்​...
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் என்று ஆரம்பத்தில் இருந்து கூறிவரும் அமெரிக்கா, அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புதல் தராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் சனிக்கிழமை சிங்கப்பூரில் அளித்த பேட்டியில், “போர் நிறுத்தத்தை நீடிப்பதற்காக அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், அணு ஆயுதம் தொடர்பான...
ஈரானின் ஜாஸ்க் துறை​முகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்​.​வி.ஹார்​பர் பீனிக்ஸ் என்ற எண்​ணெய் கப்பலை ஈரான் கடற்​படை தடுத்து நிறுத்​தி​யது. இதையடுத்து அதில் இருந்த இந்​திய மாலுமிகள் 10 பேர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் தொடர்ச்​சி​யான தூதரக முயற்​சிகள் காரண​மாக இந்​திய மாலுமிகள் 10 பேரும் விடு​தலை செய்​யப்​பட்​டுள்​ள​தாக கப்​பல் போக்​கு​வரத்து இயக்​குநரகம் அறி​வித்​துள்​ளது. இது குறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில், “ஈரா​னால் விடுவிக்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள்...
ஈ​ரானின் தென்​மேற்​குப் பகு​தி​யில் கடந்த மாதம் விபத்​துக்​குள்​ளான அமெரிக்கா​​வின் எஃப்​-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்​பான தோளில் வைத்து இயக்​கும் ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டிருக்​கலாம் என்று புல​னாய்வு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து என்​பிசி நியூஸ் ஊடகம் தெரி​வித்​துள்​ள​தாவது: கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்ட சூழலில், சீனா மறை​முக​மாக ஈரானுக்கு ராணுவ உதவி​களை வழங்​கி​யிருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது. குறிப்​பாக, ரேடார்​களில் சிக்​காமல்...