நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய வங்கிப் பணப்பெட்டியை உடைத்து சுமார் ரூ.92.68 லட்சம் பணத்தைக்கொள்ளை அடித்த 29 பேரைப்போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள போலீஸார் எச்சரித்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டம் போடே கோசி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், நீர்மின் திட்டங்கள்...
நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்​துள்​ளது. சுமார் 3,000-க்​கும் மேற்பட்டோரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்படுத்​தப்​பட்டு உள்​ளது. கடந்த 26-ம் தேதி இமயமலை​யில் பனிமலைகள் உடைந்து நேபாள நதி​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த நாட்​டின் ரசு​வா, தாதிங், நுவாகோட், கோர்க்​கா, டானாஹன், நவல்​பூர், பராசி, சிட்​வான் ஆகிய 8 மாவட்​டங்​கள் மிக கடுமையாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. நேபாளம் - சீனா இடையிலான பிர​தான...
நே​பாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் ஏற்​பட்ட இடிபாடுகளுக்​குள் சிக்​கிய 6 வயது சிறுமி 3 நாட்​களுக்கு பிறகு உயிருடன் மீட்​கப்​பட்​டாள். நேபாளத்​தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ரசுவா மாவட்டத்​தில் உள்ள திமுரே கிராமத்​தில் கடந்த வெள்​ளிக்​கிழமை மாலை மீட்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த அதி​காரி​கள் மண்​ணுக்கு அடி​யில் இருந்து மெல்​லிய அழுகுரலைக்...
நே​பாளத்​தில் மீட்​கப்​பட்ட அடை​யாளம் காண முடியாத உடல்​களை அடக்​கம் செய்​வதற்கு முன்பு டிஎன்ஏ மாதிரி சேகரிக்​கப்​படு​வ​தாக அந்​நாட்டு பிரதமர் தெரி​வித்​துள்​ளார். நேபாளத்​தில் இமயமலைப் பகு​தி​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தில் காணா​மல் போன சுமார் 3,000 பேரைத் தேடும் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பிரதமர் பாலேந்​திர ஷா மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​கள் குறித்த சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மீட்​புப் பணி​யின்​போது ஏராள​மான உடல்​கள் மீட்​கப்​பட்டு வரு​கின்​றன. இதில் குடும்​பத்​தின​ரால்...
இன்​ஸ்​டாகி​ராம், முகநூல் பயன்​படுத்​தும் பதின்ம வயதினருக்கு நேரக் ​கட்​டுப்​பாடு விதிக்க மெட்டா நிறு​வனம் முடிவு செய்​துள்​ளது. இதன்படி, அமெரிக்​கா​வில் 29 மாகாணங்​களு​டன் ஏற்​பட்ட 18 பில்​லியன் டாலர் (​ரூ. 1.71 லட்​சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்​புமிக்க இழப்​பீட்டு ஒப்​பந்​தத்தின் ஒரு பகு​தி​யாக, 13-18 வயதுக்​கு உட்​பட்டவர்களின் பாது​காப்பை உறுதி செய்யும் வகை​யில் இந்த செயலிகளில் புதிய கட்​டுப்​பாடு​கள் கொண்​டுவர மெட்டா நிறு​வனம் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. நீதி​மன்ற ஒப்​புதலுக்​குப் பிறகு அமலுக்கு வரவுள்ள...
நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 826 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்று பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 289. இதில் ரசுவா பகுதியில் 17, நுவாகோட்டில் 12, தாடிங்கில்...
நே​பாள வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மாய​மான 1,500 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது. நிவாரணப் பொருட்​களு​டன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்​துக்கு இந்​தியா அனுப்​பியது. மலைப்​பிரதேச​மான நேபாள நாட்​டின் வடக்கே திபெத் எல்லை உள்​ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்​டத்​தில் போடே கோசி என்ற நதி ஓடு​கிறது. இந்த நதி​யில் நேற்று முன்​தினம் காலை திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. பல அடி உயரத்​துக்​குக்...
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 200 இந்தியர்கள் திபெத் பகுதியில் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. 24 மணி நேர கட்​டுப்​பாட்டு அறை : டெல்​லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 91 11 2308 8718, 91 11 2308 8719 எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். 91 9968291988...
சீன, நேபாள எல்லையில் இமயமலையின் லாங்டாங் லிருங் சிகரம் அமைந்துள்ளது. சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்தன. இதனால் சிகரத்துக்கு உள்ளேயே மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது. இந்த சூழலில் லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதன் காரணமாக ஏரி உடைந்து திபெத் பகுதியின் போய்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோன்ற பெருவெள்ளம்,...
ஈ​ரான் - அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்​கு, எப்​படிக் கொல்​வது என்​பது குறித்த விவரங்​களு​டன் கூடிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்​பிலான வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளி​யிட்​டுள்​ளது. மேலும், அவரது தலைக்கு 10 மில்​லியன் டாலர் (ரூ.95 கோடி) பரிசை​யும் அறி​வித்​துள்​ள​தால் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. ஈரானிய தொலைக்​காட்​சி​யின் சேனல் 3-ல்...