அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிசோனாவின்யுமா செக்டார் பகுதியில் எல்லை ரோந்துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்மேட்' என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்த 52 பேரை கைது செய்தனர்....
ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், நான்...
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த சூழலில் மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. அது தொடர்பாக இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை...
அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்விகமாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்டாகப் பணிபுரிந்து வந்தார். பிஜியும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நியூ டெஸ்டமென்ட் தேவாலயத்தில் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது முதல் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்' என்ற இடத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த...
அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்களை அமெரிக்கப் படைதகர்த்தது.
அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோன் சர்வதேச கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதை ஈரான் சில நாட்களுக்கு முன்பு சுட்டு வீழ்த்தியது. ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்ததால் சுட்டு வீழ்த்தினோம் என ஈரான் கூறியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் கோருக் மற்றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள...
தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடு இந்தியா: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் கருத்து
admin - 0
தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறியுள்ளார்.
இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறிந்தன. இந்நிலையில் ஆசிய-பசிபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் 44 ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று நாடுகளுக்கு...
ஈரானின் ராணுவ இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோனை, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆராஷ்-இ-கமன்கீர்’ என்ற வான் பாதுகாப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ட்ரோனின் மதிப்பு 30 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அவற்றை ரேடார்களின் உதவியில்லாமல், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட வான்...
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் என்று ஆரம்பத்தில் இருந்து கூறிவரும் அமெரிக்கா, அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புதல் தராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் சனிக்கிழமை சிங்கப்பூரில் அளித்த பேட்டியில், “போர் நிறுத்தத்தை நீடிப்பதற்காக அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், அணு ஆயுதம் தொடர்பான...
ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது.
இதையடுத்து அதில் இருந்த இந்திய மாலுமிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர்ச்சியான தூதரக முயற்சிகள் காரணமாக இந்திய மாலுமிகள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈரானால் விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமிகள்...
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்பிசி நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்ட சூழலில், சீனா மறைமுகமாக ஈரானுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, ரேடார்களில் சிக்காமல்...










