பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை: அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டு பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
admin - 0
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மாவட்டத் தலைவர் புலியூர் பாலசுப்ரமணியன் தலைமையில் நாகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நாகை மாவட்டத்தில் 2024-ல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதி மூலம் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
கருணாநிதி பிறந்த திருக்குவளையில் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கிறது. நெல் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை. 2021...
கோடைகாலத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (14-ம் தேதி), வரும் 21, 28 ஆகிய தேதிகளில் காலை 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சியை சென்றடையும்.
மறுமார்க்கமாக, மேற்குவங்கம் சந்திரகாச்சியில் இருந்து நாளை (15-ம் தேதி), வரும் 22, 29 ஆகிய தேதிகளில்...
இந்திய ரயில்வேயின் மிகப்பழமையான மண்டலங்களில் ஒன்றான தெற்கு ரயில்வே இன்று (ஏப்.14) 75-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
மெட்ராஸ் மற்றும் தென் மராட்டிய ரயில்வே, தென்னிந்திய ரயில்வே மற்றும் மைசூர் மாநில ரயில்வே ஆகிய 3 அமைப்புகளை ஒன்றிணைத்து தெற்கு ரயில்வே கடந்த 1951-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி உருவாக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் ரயில்வேயின் வரலாறு 1856-ல் ராயபுரம் முதல் ஆற்காடு (வாலாஜா ரோடு) வரை இயக்கப்பட்ட முதல் ரயிலிலிருந்து தொடங்குகிறது.
பரிணாம வளர்ச்சி
1860-களில்...
தவறுதலாக இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், பெண் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும், இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 11-ம் தேதி மாலை அவர் வேலையில் இருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், எதற்காக எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆயத்தப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புரோ மாட்யூல் (PRO Module-ECINET) குறித்த மாநில அளவிலான பயிற்சி முகாம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இசிஐ நெட் புரோ மாட்யூல் என்பது தேர்தல் பணியில் இருக்கும் தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயலியாகும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி பொருட்கள் வருகை, மாதிரி...
திமுகவினர் டிசைன் டிசைனாக பொய் பேசுவதில் வல்லவர்கள் என்று பாஜக முன்னாள் தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் திருப்பத்தூரில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. ஏராளமான குற்றங்கள் நடக்கும் தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக இருக்க முடியும்? இந்தத்...
மதுபானம் விற்ற பணத்தில் அரசு இயங்குவது வெட்கக்கேடு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சீமான் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இங்கு ஆட்சி செய்கின்றன. ஆனாலும், டாஸ்மாக் மூடப்பட்டதா? கொலை கொள்ளை குறைந்துள்ளதா? ஆண்டிபட்டியில் திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள். கடந்த முறை...
தவெக ஆட்சி அமைந்தால் ஆதார் அட்டை போன்று தமிழ்நாடு அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, ஏஐ தரவுகளுடன் லஞ்சம் இல்லாத நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கன்னியாகுமரியில் ரோடு ஷோ நடத்தினார். முன்னதாக மகாதானபுரம் ரவுண்டானாவில் வேனை விட்டு கீழே இறங்கி, ரவுண்டானாவை சுற்றி விசில் ஊதியபடி சைக்கிள் ஓட்டினார். அப்போது அங்கு திரண்டிருந்த...
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச்...
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான அனைத்து இணையதளங்களையும் முடக்கி சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடிப்பில், முன்னணி இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் திரைப்பயணத்தில் இது கடைசிப் படம் என்பதால், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த ஜனவரி...










