அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த ஆசிரியர் கழகம் வேண்டுகோள்
admin - 0
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்தும் வகையில் விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் சோ.சுரேஷ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் செயல்படுத்தப்பட்டு வந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதன் விளைவாக, கடந்த...
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் மனிதவளத் துறை அரசுப் பணியாளர்களுக்கு முக அடையாள பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலுவல்...
சென்னையைச் சேர்ந்த 16 வயதான நிஷா சசிகுமார், ‘எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்பெண்’ என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து, நிஷா சசிகுமார் மற்றும் தந்தை சசிகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நானும் என் மகள் நிஷாவும் இணைந்து உலகத்தில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள 7 உயர்ந்த சிகரங்களை அடைய வேண்டும் என்ற நோக்கோடு பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
மே 25-ம் தேதி உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டை அடைந்து...
குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்தானதால் தனியார் கட்டுமான உரிமையாளர் சிறையில் இருந்து விடுவிப்பு
admin - 0
தனியார் கட்டுமான உரிமையாளர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தேமுதிக பொருளாளரும், எம்பியுமான எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி பூர்ணஜோதிக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றியதாகவும், ஒரே குடியிருப்பை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மோசடியாக விற்பனை செய்ததாகவும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மாவை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து...
‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் தலைவர்களே!’ – அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்
admin - 0
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்” என அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் போட்ட பதிவு அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
தனது பதிவில், அதிமுக இரண்டுபட்டு நிற்க காரணமானவர்களையும் சாடி இருந்த ராஜ் சத்யன், என்ன காரணத்தினாலோ சில மணி நேரத்திலேயே...
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபிஸ் கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் எரிந்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் ஹூண்டாய் மொபிஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கார்களுக்கான டேஷ்போர்டு, ஏர்பேக் தயாரிக்கும் பிரிவில் நேற்று திடீரென தீப்பற்றியது.
அப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்,...
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்துக்கு அநீதி: அன்புமணி கண்டனம்
admin - 0
தமிழக அரசு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கக்கூடாது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் தவெக அரசு மேல்முறையீடு செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை...
தமிழக முதல்வர் விஜய் நாளை (திங்கள் கிழமை) திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வரும் நிகழ்ச்சியில் கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொள்ளும்,...
“இப்போது அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, “இந்த தேர்தலில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் விரும்பிய கூட்டணியை அமைத்தோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல், ஒரு மாயையை உருவாக்கி ஒரு சுனாமி போல...
திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட 3 மதுக்கடைகளில் காவல் நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. தவெக பிரமுகரின் பாரையொட்டி உள்ள இந்த டாஸ்மாக் கடை விதிமுறையை மீறி திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
தவெக அரசு அமைந்தவுடன் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்....










