Google search engine
தவெக ஆட்​சியை கவிழ்க்க முயன்ற குற்​றச்​சாட்​டில் முன்​னாள் அமைச்​சர் செந்தில் பாலாஜி​யிடம் போலீ​ஸார் 2-வது நாளாக விசா​ரணை நடத்​தினர். ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெற்​றனர். திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் தின​மும் காலை, மாலை​யில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும். போலீ​ஸாரின் விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளிக்க...
செல்​போனில் பேசி​யபடியே ரோந்து வாகனத்தை ஓட்​டிய தலை​மைக் காவலர் மீது புகார் தெரி​வித்த சமூக ஆர்​வலருக்​கு, அபராதம் விதிக்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த சமூகஆர்​வலர் நவீன்​கு​மார் (28). சென்​னை, திரு​வொற்​றியூரில் தங்கி ஆட்டோ ஓட்டி வரு​கிறார். நேற்று முன்​தினம் அவசர வேலை காரண​மாக, ஷேர் ஆட்​டோ​வில் பயணி​யாக நுங்​கம்​பாக்​கம் நோக்கி சென்று கொண்​டிருந்​தார். சென்ட்​ரல் ரயில் நிலை​யம் அருகே காவல் ரோந்து வாக​னத்தை தலை​மைக் காவலர் ஒரு​வர் செல்​போனில்...
தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற 26 வயது இளைஞரை போலீசார் அடித்து கொன்றதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் அப்போது விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்துள்ளார். மகன் உயிரிழந்தததை அடுத்து கதறி அழுத பெற்றோர் போலீசார் தான் அடித்து...
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தீர்வை விரும்பவில்லை என்றும், குழப்பத்தையே விரும்புகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்தய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து...
‘காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ்...
‘காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் த.வெ.க. அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து கால தாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது இந்த அரசு? குறுவையும் பாதித்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர். நெருக்கடியான...
முதல்​வர் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படம் உலகம் முழு​வதும் நேற்று வெளியானது. தமிழகம் முழு​வதும் 1000 திரையரங்​கு​களில் திரை​யிடப்​பட்ட நிலை​யில் ரசிகர்​கள் மிகுந்த கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். நகரப்​பகுதி மட்​டுமில்​லாமல் கிராமப்​புறங்​களி​லும் அனைத்துதிரையரங்​கு​களி​லும் ஜனநாயகன் படம் வெளியானது. திரையரங்​கம் முன்பு கட் அவுட்​டுக்கு பால் அபிஷேகம் செய்​தும் மேள​தாளம் முழங்​க​வும் ரசிகர்​கள், தொண்​டர்​கள் நடன​மாடினர். பல்​வேறு இடங்​களில் பட்​டாசு வெடித்​தும் கொண்​டாடினர். இந்​நிலை​யில் ஜனநாயகன் திரைப்​படத்தை பார்த்​த​போது அமைச்​சர்​கள் முகமது பர்​வேஸ்,...
​காமராஜர் காலை உணவு திட்​டத்​தில், 3 ஆண்டு உணவு தயாரிப்​புக்கு தகுதி வாய்ந்த நிறு​வனங்​களிடம் இருந்து நகராட்சி நிர்​வாகத் துறை டெண்​டர் கோரி​யுள்​ளது. தமிழகத்​தில் அரசு பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்​தைகளுக்கு காலை சிற்​றுண்டி வழங்​கும் வகை​யில், முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் கடந்த 2022-ம் அண்டு செப்​டம்​பர் மாதம் தொடங்​கப்​பட்​டது. தொடர்ந்​து, அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்ட நிலை​யில், தவெக அரசு...
இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகரில் பாரிமுனையில் இயங்கி வந்த பேருந்து நிலை​யம், மொத்த காய்​கறி வியா​பாரத்​தின் கேந்​திர​மாய்த் திகழ்ந்த கொத்​த​வால்​சாவடி​யால் அப்​பகு​தி​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் மற்​றும் மக்​கள் நெருக்​கடி ஏற்​பட்​டது. இதற்கு தீர்​வு​காண கோயம்​பேட்​டில் ரூ.103 கோடி​யில் ஆசி​யா​விலேயே மிக பிரம்​மாண்​ட​மான பேருந்து நிலை​யம் அமைக்​கப்​பட்டு 2002-ம் ஆண்டு அதி​முக அரசால் திறக்​கப்​பட்​டது. கோயம்​பேட்​டிலும் போக்​கு​வரத்து மற்​றும் மக்​கள் நெரிசல் அதி​க​மானதைத் தொடர்ந்​து, செங்​கல்​பட்டு...
தமிழக முதல்​வரை அவதூறாக பேசிய வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்கப்பட்டுள்ள மார்க்​கண்​டேயன் எம்​எல்ஏ ஜாமீன் மனுவை தூத்​துக்​குடி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர்​மன்​றம் நேற்று தள்​ளு​படி செய்​தது. மேலும், அவரை காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி கோரிய காவல் துறை​யினரின் மனுவை​யும் நீதிபதி தள்​ளு​படி செய்​தார். தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி​யில் கடந்த 18-ம் தேதி நடை​பெற்ற திமுக பொதுக்​கூட்​டத்​தில் தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும், மிரட்​டும் வகை​யிலும்...