தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாளை (10-ம் தேதி), நாளை மறுநாள் (11-ம் தேதி) மற்றும் 12-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான...
கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்-6ம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியதாக பிரதமர் மோடி சமூக ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டார்.
மத்திய அணுசக்தித் துறை, கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட...
அதிமுக என்ற போர்வையின் மூலம் மீண்டும் தமிழகத்தினுள் நுழைய முயற்சிக்கிறது பாஜக என, ஆவடியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் சா.மு.நாசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில்,...
தமிழகத்தில் 20 தொகுதி வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்த, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவாக தலைவர் வேல்முருகன் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைபடி, உரிய ஆவணங்களுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் துணையோடு,...
திமுக – தேமுதிக கூட்டணி தாமதமாக அமைந்துள்ளது. ஏன், இந்த கூட்டணி இவ்வளவு நாளாக அமையவில்லை என நான் வருத்தப்படுகிறேன் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியுள்ளார்.
விருத்தாசலத்தில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வெ. கணேசன் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது: விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோயில் சாதாரண கோயில் அல்ல....
சென்னையில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களான மா.சுப்பிரமணியன் மற்றும் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 6 தினங்களாக தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது பல கிராமங்களுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் மனநிலை திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது. வரலாறு காணாத வெற்றியை திமுக...
திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட 60 பேர் விருப்ப மனு கட்டணம் (ரூ.50 ஆயிரம்) செலுத்தியிருந்தனர்.
ஆனால், தேர்தலில் மநீம போட்டியிடவில்லை என்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் விருப்ப மனு கட்டணம் செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், விருப்ப மனு கட்டணம் செலுத்தியவர்கள் அந்த...
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாமக, நாதக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் விஜய்யின் வேட்புமனு ஆவணங்களில் சான்றொப்பம் காலாவதியான நோட்டரி வழக்கறிஞரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறி பாமகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
அத்துடன் அவர் சொத்து வரி செலுத்தவில்லை என்றும் கூறி அவரது மனுவை நிராகரிக்க வாதாடினர். இதையடுத்து...
“அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு அஞ்சுபவர் புரட்சியாளனாகவோ, வீரனாகவோ ஆக முடியாது. பயப்படக்கூடாது. பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் எழும்பூர், மயிலாப்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் தொகுதிகள் போட்டியிடும் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால், ஆட்சி முறை மாறவில்லையே. அன்று அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ்...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல், கூட்டுறவுத் துறை செயலருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாகண்ணு அனுப்பியுள்ள மனு: தமிழக விவசாயிகள் நெல்லுக்கு லாபகரமான விலை கிடைக்காததால் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால்...










