முதல்வர் விஜய்யை ஃபோர்டு நிறுவனத்தினர் சந்தித்தனர். அவர்களிடம் மறைமலைநகரில் உற்பத்தி மற்றும் விரிவாக்கத்தை விரைவில் தொடங்கும்படி முதல்வர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனம், தமிழகத்தில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது...
ஆவின் நெய் விலை உயர்த்தப்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், மொத்த விற்பனையாளர்களுக்கான கமிஷன் குறைப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் ஈடுபடுகிறது.
ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி பல்வேறு வகைகளில் விநியோகம் செய்கிறது. இதற்கிடையில், ஆவின் நெய் தொடர்பான பில்லிங்...
சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையைத் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையைத் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் நாள்தோறும் சேரும் குப்பைகளில் 3,200 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளாகவும், 2,950 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளாகவும் உள்ளன. இதில் மக்கும் குப்பைகளை நவீன தொழில்நுட்பத்தில் இயற்கை எரிவாயுவாகவும், உராகவும் மாற்ற வேண்டும்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட...
தமிழக அரசின் மதுபான கொள்முதலில் மாற்றம்: உற்பத்தியாளர்களிடம் இருந்து சம அளவில் வாங்க முடிவு
admin - 0
மதுபானக் கொள்முதலில் அனைத்து மது உற்பத்தியாளர்களிடமிருந்தும் சம அளவில் கொள்முதல் செய்யப்படும் என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த மதுபானங்களை டாஸ்மாக் நிர்வாகம் மதுபான உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் போன்ற உரிமம் பெற்றவர்களுக்கு வழங்கி வருகிறது.
குறிப்பாக, சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டுமே அதிகளவில் மதுபானம்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது லண்டன் பயணத்தை முடித்து நேற்று இரவு சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, திமுக...
அம்மா உணவகங்களில் காஸ் தட்டுப்பாட்டால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் வருவாய் குறைந்தது: மேயர் ஆர்.பிரியா விளக்கம்
admin - 0
சர்வதேச போர் பதற்ற சூழலால் ஏற்பட்ட காஸ் தட்டுப்பாட்டால், ஏப்ரல் மாதம் மட்டும் அம்மா உணவகங்களில் வருவாய் குறைந்தது என்று, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில், தற்போது, தினசரி சராசரியாக...
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட...
‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ பணி அக்டோபரில் முடியும்: சென்னை – பெங்களூருவுக்கு 3 மணி நேரத்தில் செல்லலாம் என அதிகாரிகள் தகவல்
admin - 0
சென்னை - பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை - பெங்களூருவை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ எனப்படும் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் முடிந்து, தேசிய நெடுஞ்சாலை...
தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வின் எதிரொலியாக சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதி கைப்பந்து மைதானம் உடனடியாக திறக்கப்பட்டது. இதனால் விடுதி மாணவர்கள் உற்சாகமாக கைப்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் அண்ணா சாலையை ஒட்டி எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்த விடுதி ரூ.44.5 கோடி செலவில் மின்தூக்கி வசதியுடன் 10 மாடி கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் விஜய் கடந்த...
தொல்லியல் துறை ஓய்வுபெற்ற இணை தலைமை இயக்குநர் தலைமையில் 14 பேர் கொண்ட புராதன சின்ன ஆணையம் அமைப்பு
admin - 0
தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற இணை தலைமை இயக்குநரான எம்.நம்பிராஜன் தலைமையில் 14 பேர் அடங்கிய தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்தும், கோயிலின் பழமை மற்றும் புராதன சின்னங்களை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட புராதன சின்னங்கள் ஆணைய சட்டத்தின்கீழ் தமிழ்நாடு புராதன சின்னங்கள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க...










