காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்
admin - 0
காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து, டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது, பெரும்பாலான மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தின்படி, டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டும். காலி மது பாட்டிலை அதே கடையில் மீண்டும் கொடுக்கும் போது...
மேகேதாட்டு அணை விவகாரம்: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காவிரி என்பது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி. உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளையும் மீறி, ஒருதலைபட்சமாக அணைக்கட்ட முயல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது.
தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசின் இந்த...
திருவான்மியூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூடுமாறு முதல்வர் விஜய் கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள 4,765 டாஸ்மாக் கடைகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள...
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு ரூ.5.80 லட்சம் நிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
admin - 0
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.5.80 லட்சம் நிதி வழங்கினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து சாதனையாளர்களாக மாற்ற தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காது கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற நீச்சல்...
மெரினா கடலில் குளிக்கும் போது, அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த அண்ணனின் உடல் கரை ஒதுங்கியது.
ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் தேவகி. இவர், கடந்த 22-ம் தேதி மகன்கள் சுதர்சன் (16), கமலேஷ் (15) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். கண்ணகி சிலை பின்புறமுள்ள கடலில் சகோதரர்கள் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் தம்பி கமலேஷ் சிக்கி உள்ளார். இதனைக் கண்ட...
தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “விழுப்புரம் - மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல்...
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்...
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் 22-ம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவை-அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையன் காய்ச்சல் காரணமாக...
சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில், பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களின் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், மக்கள் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு சமூக முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தில், பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில், பழங்குடியினர் உற்பத்தி பொருட்களின் விற்பனை மையம் தொடங்கப்பட்டுளளது.
இந்த விற்பனை மையத்தில் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள்,...
மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
admin - 0
மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய கடந்த திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.
இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க...










