Google search engine
தவெக வேட்​பாள​ரான சினோரா அசோக் மீது தாக்​குதல் நடத்​திய குற்​றச்​சாட்​டில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை துறை​முகம் தொகு​தி​யில் திமுக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு​வும், தமிழக வெற்றிக் கழகம் சார்​பில் சினோரா அசோக்​கும் போட்​டி​யிட்​டனர். இதில் சேகர்​பாபு வெற்றி பெற்று எம்​எல்ஏ ஆனார். முன்​ன​தாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற ஏப்​ரல் 23-ம்...
சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் தொடரும் மின்தடை காரண​மாக பொது​மக்​கள் அவதி அடைகின்​றனர். தமிழகத்​தில் கடந்த சில நாட்​களாக கோடை வெயி​லின் தாக்​கம் அதி​கரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்​களாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் திடிரென மின்​சா​ரம் துண்​டிக்​கப்​படு​கிறது. இதனால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி​யுள்​ளனர். நள்​ளிரவு நேரங்​களில் ஏற்​படும் மின்​வெட்டு காரண​மாக குழந்​தைகள், முதி​ய​வர்​கள் மற்​றும் நோயாளி​கள் தூக்​கமின்றி தவித்து வரு​கின்​றனர். மின்​சா​ரம் எப்​போது...
காய்ச்​சல், சளி, தொண்டை வலி, உடல் வலி​யுடன் மக்​கள் அவதிப்​பட்டு வரும் நிலை​யில், இது கரோனா தொற்று பாதிப்​பாக இருக்​குமா என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் சில வாரங்​களாக வெயி​லின் தாக்​கம் அதி​கரித்து வரு​கிறது. இதனால், உடலில் நீர்ச்​சத்து இழப்பு போன்ற பிரச்​சினை​களால் ஏராள ​மானோர் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். பொது​மக்​களின் வசதிக்​காக, அரசுமருத்​து​வ​மனை​களில் ஓஆர்​எஸ் கரைசல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதேநேரம், டைபாய்​டு, டெங்கு உள்​ளிட்ட பல்​வேறு காய்ச்​சல்​களால் பலர் பாதிக்​கப்​பட்டு அரசு...
 குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட நிலை​யில், முதல்​வர் விஜய்க்கு நன்றி தெரி​வித்​தார். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யும், பிரபல யூடியூபரு​மான சவுக்கு சங்​கர், கடந்த ஏப்​.9-ம் தேதி குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். புதிய அரசு அமைந்​துள்ள நிலை​யில், சவுக்கு சங்​கர் மீதான குண்​டர் சட்​டத்தை தமிழக அரசு கடந்த புதன்​கிழமை ரத்து செய்து உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து...
தவெக எம்​எல்​ஏ-வுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட ராயபுரம் காவல் ஆய்​வாளர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். சென்னை ராயபுரம் பகு​தி​யில் உள்ள திருமண மண்​டபம் ஒன்​றில் இரு தினங்​களுக்கு முன்​னர் இஸ்​லாமிய இளைஞர் ஒரு​வருக்கு திரு​மணம் நடை​பெற இருந்​தது. அப்​போது இளம்​பெண் ஒரு​வர், பெண் சமூக ஆர்​வலர் மற்​றும் உறவினர்​கள் சிலருடன் அங்கு சென்​று, நீதி வேண்​டும் என்ற பதாகை ஏந்தி திரு​மணத்தை நிறுத்​தக் கோரி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டார். இதனால் அங்கு பரபரப்​பான சூழல் ஏற்​பட்​டது....
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்​நாடு பிரிவு தலை​வர் பி.சொக்​கலிங்​கம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில், கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்​த ரூ.500 வரை பணம் வசூலித்​து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மூத்த குடிமக்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், கர்ப்​பிணி பெண்​கள், புதுமண தம்​ப​தி​கள், மாநில ஆளுநர்​கள், முதல்​வர்​கள், மடா​திப​தி​கள், ஜீயர்​களை இலவச சிறப்பு தரிசனத்​துக்கு...
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் - இலாகா 1. முதல்வர் விஜய் - பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு...
“திமுக-வுடனான எங்களது உறவு தேர்​தல் காலத்து உறவு அல்ல. இது கொள்கை ரீதி​யான கூட்​ட​ணி. திமுக தலை​வர் ஸ்டா​லினுடன் நேற்​றும் இருந்​தோம், இன்​றும் இருக்​கிறோம், நாளை​யும் இருப்​போம். திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்​லிம் லீக் கட்​டுப்​படும்” என்று சொன்ன இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்சியும் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கத் தயாராகிவிட்டது. “எக்காலத்திலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்பதை அழுத்திச் சொல்லியே இத்தனை ஆண்டு...
எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்​து​மிட வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​க​வும், பயணி​களின் வசதி​களை மேம்​படுத்​த​வும் முடி​யும் என, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​தனர். தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலையம் திகழ்​கிறது. நூற்​றாண்டை கடந்த இந்த ரயில் நிலை​யத்​தில் அடுத்த 50 ஆண்​டு​களில் ரயில்​கள் இயக்​கம், பயணி​கள் வருகை உள்​ளிட்​ட​வற்றை கருத்​தில் கொண்​டு, மறுசீரமைப்பு பணி...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் - கயல்​விழி தம்​ப​தி​யினருக்கு 2-வ​தாக பெண் குழந்தை பிறந்​துள்​ளது. தமிழ் சினி​மா​வில் இயக்​குந​ராக அறி​முக​மாகி பின்​னர் அரசி​யலுக்கு வந்​தவர் சீமான். மறைந்த முன்​னாள் சட்​டப்​பேரவை தலை​வர் காளி​முத்​து​வின் மகள் கயல்​விழிக்​கும், சீமானுக்​கும் கடந்த 2013-ம் ஆண்டு திரு​மணம் நடை​பெற்​றது. இந்த தம்​ப​தி​யினருக்கு திரு​மண​மாகி 5 ஆண்​டு​கள் கழித்​து, 2019 ஜனவரி​யில் ஆண் குழந்தை பிறந்​தது. மாவீரன் பிர​பாகரன் என அக்​குழந்​தைக்கு பெயரிட்​டனர். இந்நிலையில்,தற்​போது மீண்​டும்...