தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க பொதுப் பார்வையாளர்களின் தொலைபேசி எண் அறிவிப்பு: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
admin - 0
பொதுப் பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள், தொகுதியின் தேர்தல் அலுவலகங்களில் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர் தேம்ஜென்வாபாங்...
கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுதாகர், திமுக வேட்பாளர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 30-ம் தேதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தொடர் விடுமுறைக்குப் பின் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில், கும்மிடிப் பூண்டி தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன்,...
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட சூளைமேடு பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பிரச்சாரம்
admin - 0
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மகளிர் அணி செயலாளருமான வளர்மதி போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம் தனது பிரச்சாரத்தை தொடங்கி, கோபாலபுரம், ராயப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர்களிடம் வளர்மதி பேசும்போது, ‘‘திமுக...
சோழிங்கநல்லூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் பெருமிதம்
admin - 0
தமிழகத்தில் அதிக வாக்காளர் களைக் கொண்ட பெரிய தொகுதி என்ற தனிச்சிறப்பு வாய்ந்தது சோழிங்கநல்லூர் தொகுதி.
சென்னையை ஒட்டி ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல் லூரில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம், பொறியியல் கல்லூரிகள், உலகளாவிய திறன் மையங்கள் என பலதரப்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பால் குடியிருப்புகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அரவிந்த் ரமேஷ், மீண்டும்...
தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் நேயம் மக்கள் கழகம் என்ற புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் 4-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள புதுச்சேரி காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான காலாப்பட்டில் தொடங்கி கடலூர் அருகேயுள்ள முள்ளோடை வரை 23 இடங்களில் காலை 9.30 முதல் இரவு 9.30 வரை வேனில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதில்...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது: கடலூரை சேர்ந்த ஏழை தம்பதியின் மகள் 14 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறும் பாதிப்பு இருந்து வந்தது.
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அந்த பிரச்சினை சரியாகவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அந்த சிறுமி அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சிறுமியை பரிசோதனை...
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 3-ம் தேதி) புதுச்சேரி செல்கிறார்.
அங்கு பிரச்சாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் அவர் அன்று இரவு, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் காலை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், மதியம் புறப்பட்டு கேரளா செல்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம் பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள், பிரதமர் பயணிக்கும்...
தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் அமையும்: கே.பாலகிருஷ்ணன் கருத்து
admin - 0
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: பழனிசாமி அவர்களே நீங்கள் ஆட்சிக்கு வந்து செய்த சாதனை என்ன நீங்கள் அந்தகட்சியின் தலைவராக வந்த பின்னர் உங்களுடைய சாதனை என்னவென்று விளக்க முடியுமா? தமிழகத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது தான் பழனிசாமியின் சாதனை.
பாஜகவுடன்...
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கடுமையாக உழைப்போம், ஒற்றுமையாக உழைப்போம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரியில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளர் ஆ.ராசா கலந்துகொண்டு ஆலந்தூர் வேட்பாளர் தா.மோ.அன்பரசன்,...
வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சிக்னல் பிரச்சினையால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி
admin - 0
வியாசர்பாடி ஜீவா நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால், 35 நிமிடங்கள் வரை மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில், சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடம் முக்கியமானதாகும். இத்தடத்தில், நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே நேற்று பிற்பகலில் திடீரென சிக்னல்...










