Google search engine
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக எம்எல்ஏ.க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இரண்டு பேர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைப் பற்றிய பின்புலக் குறிப்புகள் இங்கே... ஏ.ஸ்ரீநாத் - தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம்...
சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் விளை​யாட்டு வீரர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை தன்னை நேரில் அணுகலாம் என அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​துள்​ளார். அகில இந்​திய அளவி​லான 18 வயதுக்​குட்​பட்​டோருக்​கான கூடைப்​பந்து போட்​டிகள் புதுச்​சேரி​யில் வரும் 22 முதல் 29-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதையொட்​டி, பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில், நேற்று தமிழ்​நாடு ஜூனியர்...
பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்​டித்து விசிக மற்​றும் இடது​சா​ரி​கள் கட்​சிகள் நேற்று வள்​ளலார் நகர் பேருந்து நிலை​யம் அருகே கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர்...
ஆம்னி பேருந்​துகளுக்​கான சாலை வரியை குறைக்க வேண்​டும் என, உரிமை​யாளர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் சங்​கத்​தின் தலை​வர் அன்​பழகன், முக்​கிய நிர்​வாகி​கள் மற்​றும் அனைத்து செயற்​குழு உறுப்​பினர்​களும் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. சென்னை மாநகரின் மையப்​பகு​தி​யில், மிகப்​பெரிய ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​ய​மான கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை மீண்​டும் ஒரு பகு​தி​யாகவோ அல்​லது முழு​மை​யாகவோ செயல்​படுத்த தமிழக...
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அனைவரும் ஆளுநர் மாளிகையில் திரண்டுள்ளனர். அமைச்சர்கள் பட்டியல்: 1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ 2. எஸ்.கமலி - அவிநாசி 3. சி.விஜயலக்‌ஷமி - குமாரபாளையம் 4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம் 5. வினோத் - கும்பகோணம் 6. ராஜீவி - திருவாடானை 7. பி.ராஜ்குமார் - கடலூர் 8. வி.காந்திராஜ் - அரக்கோணம் 9. மதன்ராஜ்.பி -...
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக...
சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கின்​றன. இவற்​றில், மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான 3-வது வழித்​தடம் (45.4 கி.மீ.) ஒன்​றாகும். இத்​தடத்​தில் பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, மாதவரம் பால்​பண்ணை முதல் கெல்​லீஸ் வரையி​லான முதல் 9 கி.மீ. தொலை​வுக்கு சுரங்​கப் பாதை அமைக்​கும்...
​மாற்​றுத்​திற​னாளி​கள் அமைப்​பினருட​னான முதல்​வர் விஜய்யின் சந்​திப்பு வீடியோ சமூக வலை​தளங்​களில் பரப்​பப்​பட்​டது சர்ச்​சை​யாகி​யுள்​ளது. தமிழக முதல்​வரை, பல்​வேறு காரணங்​களுக்​காக பல அமைப்​பு​களைச் சேர்ந்​தவர்​கள், முக்​கிய​மான தனி​நபர்​கள் சந்​திப்​பது வழக்​கம். அவ்​வாறு சந்​திக்​கும் போது, தமிழக அரசின் செய்​தித்​துறை சார்​பில் புகைப்​படம், செய்தி வெளி​யிடப்​படும். இந்​நிலை​யில், தமிழக முதல்​வர் விஜய்​யை, நேற்று காலை மாற்​றுத்​திற​னாளி​கள் அமைப்​பு​களின் நிர்​வாகி​கள் சந்​தித்​தனர். இந்த சந்​திப்பு தொடர்​பான படங்​கள் அரசு செய்​தித் துறை​யால் வெளி​யிடப்​பட்​டது. இதற்​கிடையே, நேற்று பிற்​பகல்...
பழவேற்காடு பகு​தி​ கடலில் மீன்​பிடி வலை​யில் சிக்​கிய 2-ம் உலகப் போரில் பயன்​படுத்​தப்​பட்ட பீரங்கி குண்​டால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. பொன்​னேரி அருகே உள்ள பழவேற்​காடு, அதையொட்​டி​ உள்ள 30-க்​கும் மேற்பட்ட மீனவ கிராமங்​களைச் சேர்ந்த மீனவர்​கள் மீன் பிடி தொழிலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அந்த வகை​யில், நேற்று முன் தினம் இரவு, பழவேற்​காட்டை அடுத்த பசி​யா​வரம் மீனவ கிராமத்​தைச் சேர்ந்த தேவபிர​காஷ் (35), 4 பேருடன் பழவேற்​காடு பகு​தி​யில், வங்​காள விரி​குடா...
தமிழகம் முழு​வதும் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகளிடம் பணம் பறிக்​கும் இடைத்​தரகர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பான புகாரை கூட்​டுறவுத்​துறை மற்​றும் லஞ்ச ஒழிப்​புத்​துறை இரு​வாரங்​களில் பரிசீலிக்க உத்​தர​விட்​டுள்​ளது. காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த ஏ. வெங்​கடேசன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தமிழகம் முழு​வதும் உள்ள மாநில நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் நேரடி நெல்...