Google search engine
தமிழக அரசின் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்​தில் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இது தொடர்​பாக துறை​கள் வாரி​யாக முதல்​வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதி​முதல் ஆலோ​சனைக் கூட்​டங்​களை நடத்​திவரு​கிறார். அதன்​படி கால்​நடை பராமரிப்​பு, பால்​வளம் மற்​றும் மீன்​வளத் துறை​களின் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் மரிய வில்​சன், சி.​விஜயலட்​சுமி, ஸ்ரீ​நாத், செ.கமலி, தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார்...
கும்மிடிப்பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்டை தனி​யார் தொழிற்​சாலை​யில் பர்​னஸ் கொதி​கலன் வெடித்​த​தில், வடமாநில தொழிலாளி ஒரு​வர் உயி​ரிழந்​தார்; 9 பேர் காயமடைந்​தனர். இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர் குடும்​பத்​தினர் மற்​றும் காயமடைந்​தோருக்கு நிதி​யுதவி வழங்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில், ‘ஜெ​யின் ரிசோர்ஸ் ரிசைக்​கிளிங் லிமிடெட் (யுனிட் 2)’ என்ற தனி​யார் தொழிற்​சாலை செயல்​பட்டு வரு​கிறது. இத்​தொழிற்​சாலை​யில், பழைய ஈயம், செம்பு உள்​ளிட்ட உலோகங்​களை பிரித்து எடுத்து உருக்கி...
அனல் மின் நிலைய பாதிப்​பு​கள் குறித்து மீனவர்​களு​டன் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் கலந்​தாய்வு கூட்​டம் நடத்​தி​னார். இந்த கூட்​டத்​தில் எண்ணூர் பகுதி மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு தேவை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என அமைச்​சர் உறு​தி​யளித்​தார். சென்னை மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் நேற்று மின்​சா​ரத் துறை அமைச்​சர் சி.டி.ஆர். நிர்​மல் குமார் எண்​ணூரை சுற்​றி​யுள்ள நெட்​டுக்​குப்​பம், தாழங்​குப்​பம் உள்​ளிட்ட 8 கிராம மீனவர்​களின் நீண்​ட​கால கோரிக்​கைகள் குறித்து மீனவ சங்க பிர​தி​நி​தி​களு​டன் கலந்​தாய்வு கூட்​டம்...
ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் செல​வில் 18 அரசு பள்​ளி​களுக்கு 900 இருக்​கைகள் வழங்​கப்​பட்​டன. ஹூண்​டாய் மொபிஸ் சிஎஸ்​ஆர் எனப்​படும் பெருநிறுவன சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக 18 அரசுப் பள்​ளி​களுக்கு ரூ.70 லட்​சம் செல​வில் 900 இருக்​கைகளை (Bench Desk) வழங்க முன்​வந்​தது. அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகள் வழங்​கும் நிகழ்ச்சி எழும்​பூர் பிரசிடென்சி மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று...
தமிழ்​நாடு விழாவை முன்​னிட்டு, பள்ளி மாணவர்​களுக்கு நடத்​தப்​படும் மாநில அளவி​லான பேச்​சு,கட்​டுரை போட்​டிகளில் முதலிடம் பெறு​வோருக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்​போருக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெறு​வோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்​கப்​படும் என அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, பள்​ளிக்​கல்வி, தமிழ்​வளர்ச்​சி, செய்தி மற்​றும் விளம்​பரத்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் வெளி​யிட்​டுள்ள ஓர் அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாகாணத்​துக்கு தமிழ்​நாடு என பெயர் சூட்​டப்​பட்டநாள் தமிழ்​நாடு விழா​வாக...
சென்னை ஐஐடி நலவாழ்வு மையத்​துக்கு, சர்​வ​தேச தரச்​சான்று கிடைத்​திருப்​ப​தாக, ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தெரி​வித்​தார். மத்​திய கல்வி அமைச்​சகத்​துடன் இணைந்து, சென்னை ஐஐடி​யில் தென்​னிந்​திய பேராசிரியர்​களுக்கு மனநல வாழ்வு தொடர்​பான 2 நாள் பயிலரங்​கம் ஞாயிறு மற்​றும் திங்​கள்​கிழமை நடை​பெற்​றது. மத்​திய அரசின் மாள​வியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்​டத்​தின்​கீழ் ஏற்​பாடு செய்​யப்​பட்ட இந்த பயிலரங்​கில், தமிழகம், ஆந்​திரம், தெலங்​கா​னா, கேரளம், கர்​நாடகம் ஆகிய தென்​னிந்​திய மாநிலங்​களைச் சேர்ந்த பேராசிரியர்​கள் கலந்​து​கொண்​டனர். இதன்...
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் விஜய் தனது தொகுதியான பெரம்பூருக்கு நேற்று முதல்முறையாக வந்தார். அவரை தொகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது, 8-ம் வகுப்பு படிக்கும் ருத்ரா என்ற மாணவி, முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்பியுள்ளார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியாததால் வருத்தத்தில் இருந்துள்ளார். இதுபற்றி மாணவியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பள்ளிக்கூட புத்தகப் பை அதிக கனமாக உள்ளது. அதை தூக்கி சுமந்தால் முதுகு வலிதான் வருகிறது. எனவே,...
லண்​டனில் இருந்து 236 பேருடன் சென்​னைக்கு வந்த விமானத்​தின் மீது பறவை மோதி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. விமானி மிக​வும் சாமர்த்​தி​ய​மாக செயல்​பட்​டு, விமானத்தை பாது​காப்​பாக தரை​யிறக்​கி​னார். லண்​டனில் இருந்து புறப்​படும் பயணி​கள் விமானம் தின​மும் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை வந்து விட்​டு, மீண்​டும் சென்​னை​யில் இருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​டன் புறப்​பட்டு செல்​வது வழக்​கம். அதன்​படி, நேற்று லண்​டனில் இருந்து 224 பயணி​கள், 12 விமான ஊழியர்​களு​டன் புறப்​பட்ட...
தமிழக காவல்​துறை​யில், உதவி ஆய்​வாளர்​கள் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். தேர்வு செய்​யப்​படும் உதவி ஆய்​வாளர்​கள் 10 ஆண்டு பணிபுரிந்த பின்​னர் ஆய்​வாளர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​படும். ஒவ்​வொரு ஆண்​டும் மேல் அதி​காரி​கள் உதவி ஆய்​வாளர்​களின் பணி குறித்து அறிக்கை தயாரித்து தலை​மையகத்​துக்கு அனுப்​புவர். அதன்​படி, பதவி உயர்வு பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு 10 ஆண்​டு​கள் நிறைவு செய்​தவர்​கள், காலிப் பணி​யிடங்​களின் அடிப்​படையில், உதவி ஆய்​வாளர்​களுக்​கு, காவல்...
வனத்துறை வசம் உள்ள 100 டன் செம்​மரம் ஏலம் கோரப்​பட்​டுள்​ளது. குறைந்​த​பட்ச ஏலத் தொகை​யாக ரூ.52.38 கோடி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. செம்​மரம் அதன் அரிய தன்​மை, கடின அமைப்​பு, உயர்ந்த சந்தை மதிப்பு காரண​மாக உலக அளவில் முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது. இசைக் கருவி​கள், அலங்​காரப் பொருட்​கள் மற்​றும் சில பாரம்​பரிய பயன்​பாடு​களுக்​காக இதற்கு வெளி​நாடு​களில் நீண்ட கால​மாக தேவை இருந்து வரு​கிறது. இதன் காரண​மாகவே செம்​மரம் சட்​ட​விரோத வர்த்​தகத்​தில் அதி​கம் இலக்​காகி​யுள்​ளது. குளிர்...