தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக துறைகள் வாரியாக முதல்வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதிமுதல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்.
அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் மரிய வில்சன், சி.விஜயலட்சுமி, ஸ்ரீநாத், செ.கமலி, தலைமைச் செயலர் எம்.சாய்குமார்...
கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு
admin - 0
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தனியார் தொழிற்சாலையில் பர்னஸ் கொதிகலன் வெடித்ததில், வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; 9 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், ‘ஜெயின் ரிசோர்ஸ் ரிசைக்கிளிங் லிமிடெட் (யுனிட் 2)’ என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இத்தொழிற்சாலையில், பழைய ஈயம், செம்பு உள்ளிட்ட உலோகங்களை பிரித்து எடுத்து உருக்கி...
எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதி
admin - 0
அனல் மின் நிலைய பாதிப்புகள் குறித்து மீனவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்...
ஹூண்டாய் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 18 அரசு பள்ளிகளுக்கு 900 இருக்கைகள்: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வழங்கினர்
admin - 0
ஹூண்டாய் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் செலவில் 18 அரசு பள்ளிகளுக்கு 900 இருக்கைகள் வழங்கப்பட்டன.
ஹூண்டாய் மொபிஸ் சிஎஸ்ஆர் எனப்படும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக 18 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.70 லட்சம் செலவில் 900 இருக்கைகளை (Bench Desk) வழங்க முன்வந்தது.
அரசுப் பள்ளிகளுக்கு இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூர் பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று...
தமிழ்நாடு விழா பேச்சு-கட்டுரை போட்டிகள்: மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு
admin - 0
தமிழ்நாடு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மாநில அளவிலான பேச்சு,கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்போருக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெறுவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டநாள் தமிழ்நாடு விழாவாக...
சென்னை ஐஐடி நலவாழ்வு மையத்துக்கு, சர்வதேச தரச்சான்று கிடைத்திருப்பதாக, ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடியில் தென்னிந்திய பேராசிரியர்களுக்கு மனநல வாழ்வு தொடர்பான 2 நாள் பயிலரங்கம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிலரங்கில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்...
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் விஜய் தனது தொகுதியான பெரம்பூருக்கு நேற்று முதல்முறையாக வந்தார். அவரை தொகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அப்போது, 8-ம் வகுப்பு படிக்கும் ருத்ரா என்ற மாணவி, முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்பியுள்ளார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியாததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.
இதுபற்றி மாணவியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பள்ளிக்கூட புத்தகப் பை அதிக கனமாக உள்ளது. அதை தூக்கி சுமந்தால் முதுகு வலிதான் வருகிறது. எனவே,...
லண்டனில் இருந்து 236 பேருடன் சென்னைக்கு வந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.
லண்டனில் இருந்து புறப்படும் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்து விட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று லண்டனில் இருந்து 224 பயணிகள், 12 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட...
தமிழக காவல்துறையில், உதவி ஆய்வாளர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் உதவி ஆய்வாளர்கள் 10 ஆண்டு பணிபுரிந்த பின்னர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேல் அதிகாரிகள் உதவி ஆய்வாளர்களின் பணி குறித்து அறிக்கை தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவர். அதன்படி, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள், காலிப் பணியிடங்களின் அடிப்படையில், உதவி ஆய்வாளர்களுக்கு, காவல்...
வனத்துறை வசம் உள்ள 100 டன் செம்மரம் ஏலம் கோரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.52.38 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செம்மரம் அதன் அரிய தன்மை, கடின அமைப்பு, உயர்ந்த சந்தை மதிப்பு காரணமாக உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இசைக் கருவிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் சில பாரம்பரிய பயன்பாடுகளுக்காக இதற்கு வெளிநாடுகளில் நீண்ட காலமாக தேவை இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே செம்மரம் சட்டவிரோத வர்த்தகத்தில் அதிகம் இலக்காகியுள்ளது. குளிர்...










