தோல்விக்கான காரணம், தற்போதைய அரசியல் சூழல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காலை சென்னை...
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றச் சூழல் காரணமாகவும், ஹார்முஸ் நீரிணை வழியான வணிகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும், உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது...
மின்சாரத் துறையின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல் குமார், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், மின்துறை செயலர் மங்கத் ராம் சர்மா, மின் வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலர் மு.அ.சித்திக் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண் டனர்.
இக்கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின்தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்காலக்...
விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா. சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வராக வேண்டும் என சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு அவர் வேண்டுதல் வைத்திருந்தார். இதன்படி விஜய் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்த நிலையில், நகரி சாலையில்...
ஒரே நாளில் 18 பேரை தெரு நாய் கடித்ததன் எதிரொலி: காக்களூர், புட்லூரில் 75 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
admin - 0
காக்களூரில் ஒரே நாளில் 18 பேரை தெரு நாய் கடித்ததை அடுத்து நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், காக்களூர், புட்லூர் பகுதிகளில் 75 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத் தப்பட்டது; 10 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஊராட்சி பகுதிகளில் கூட்டமாக சுற்றி வரும் தெரு நாய்களில் ஒன்று நேற்று முன் தினம் சாலையில் சென்ற 18 பேரை கடித்தது....
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும்...
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் பழனிசாமியால் வலுவிழந்துவிட்டதாக நிதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை விஜய்யிடம் உள்ளது.
மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இவ்வளவு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் நிலைப்பாடுகளை பார்க்கும்போது எம்ஜிஆர், ஜெயலலிதா...
தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கடிக்கும் நிகழ்வு தொடர் கதை ஆகிவிட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. திருவள்ளூரில் இருந்து காக்களூர் வழியாக இருசக்கர வாகனத்தில், நடந்து செல்பவர்கள் நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் காக்களூர் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்க்கு வெறி பிடித்ததாக...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை இவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும்.
மத்திய அரசின் பி.எம். திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நிலைப்பாட்டை தான் இந்த அரசும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும்.
கேள்வித்தாள்...
2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு: சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்
admin - 0
சென்னை ரயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், சூரியசக்தி உள்கட்டமைப்பை விரிவுபடுத்த முயற்சி எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையம், ஆண்கள் விடுதி மற்றும் கிண்டி ரயில் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 140 கிலோவாட் திறன்...










