கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க ஐகோர்ட் நிபந்தனை

0
14

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி, தற்​காலிகப் பணி​யாக இருக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை​யின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் தீரன் திரு​முரு​கன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செய​லா​ளர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​ விவரம்: கரூரில் தவெக சார்​பில் கடந்​தாண்டு நடந்த பிரச்​சா​ரக்கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்​தக்குடும்​பங்​களைச் சேர்ந்​தோ ருக்கு அரசு வேலை வழங்​கப்​படு​கிறது. ஏற்​கெனவே உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு சார்​பிலும், தவெக சார்​பிலும் நிதி உதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அரசி​யல் கட்​சிக் கூட்​டங்​களில் நெரிசலில் சிக்கி உயி​ரிழப்​போருக்கு அரசு வேலை வழங்​கு​வது தவறான முன் உதா​ரணத்தை ஏற்​படுத்​தும். அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம், வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​கள் அல்​லது பிற சட்​டப்​பூர்வ பணி​யாளர் தேர்வு முறையைப் பின்​பற்​றியே அரசுப் பணி வழங்​கப்பட வேண்​டும். இந்த முறை​களைப் பின்​பற்​றாமல் அரசுப் பணி வழங்​கு​வது சட்​ட​விரோதம்.

மேலும் இந்​தச் செயல்​பாடு தமிழகத்​தில் அரசுப் பணிக்​காக கடுமை​யாகப் படித்து வரும் லட்​சணக்​கணக்​கான இளைஞர்​களுக்​குப் பாதிப்பை ஏற்​படுத்​தும். மேலும் கரூர் சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு அரசு வேலை வழங்​கு​வது விசா​ரணை​யைப் பாதிக்​கும்.

எனவே, கரூர் கூட்ட நெரிசல் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோரின் குடும்​பங்​களுக்கு நேரடி​யாக அரசு வேலை வழங்​கத் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது நீதிப​தி​கள், “உயி​ரிழந்​தோரின் குடும்​பம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கு​வ​தில் என்ன தவறு? அவர்​களுக்​குப் பொருளா​தார உதவி தேவை தானே?” என்​றனர்.

அரசுத் தரப்​பில், “வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் கண்​காணித்து வரு​கிறது. அரசு கொள்கை முடி​வெடுத்து உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்​துள்​ளது. பணி நியமன ஆணை வழங்​கும் நாளில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது” என கூறப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், “அரசின் கொள்கை முடிவு என்​றால் சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தில் அறி​விப்பு வெளி​யிடப்​பட்​ட​தா?” எனக் கேள்வி எழுப்​பினர்.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: உச்ச நீதி​மன்​றத்​தில் அண்​மை​யில் தாக்​கல் செய்த மனு விசா​ரணைக்கு வந்​த​போது உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில் ஏற்​கெனவே இழப்​பீட்​டுத் தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், தற்​போது கருணை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு வழங்க முடிவு செய்​திருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது. இருப்​பினும் அந்த மனுவை திரும்​பப் பெற​வும், மனு​தா​ரர் தரப்பு பிற சட்​டப்​பூர்வ தீர்​வு​களை நாட​வும் உச்ச நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

மனு​தா​ரர்​கள் தரப்​பில், கரூர் நெரிசல் சம்​பவத்​தில் துர​திருஷ்ட​வச​மாக உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்​குக் கருணை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு வழங்​கு​வது விதி​களை மீறும் செயல் என வாதிடப்​பட்​டது. பணி​யில் இருக்​கும்​போதே உயி​ரிழக்​கும் அரசு ஊழியரின் சட்​டப்​பூர்வ வாரிசு​தா​ரர்​களுக்கு கருணை அடிப்​படை​யில் வேலை வழங்​கு​வது தொடர்​பாக விதி​முறை​கள் மற்​றும் வழி​காட்​டு​தல்​கள் உள்​ளன.

தூத்​துக்​குடி​யில் நடை​பெற்ற துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது என அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அந்​தச் சம்​பவத்தை அரசின் தீவிர நடவடிக்​கை​யின் விளை​வாகக் கருதலாம் என சிறிய வேறு​பாட்​டைச் சுட்​டிக்​காட்​டலாம். எப்​படி​யிருந்​தா​லும் அரசின் கொள்கை முடி​வில் இந்த நீதி​மன்​றம் தலை​யிடு​வது மிக​வும் குறுகிய கண்​ணோட்​ட​மாக அமை​யும்.

எனவே, கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோருக்கு வழங்​கப்​படும் வேலை​வாய்ப்பு என்​பது நீதி​மன்ற மறுஆய்​வுக்கு உட்​பட்ட தற்​காலிக அடிப்​படை​யில் மட்​டுமே இருக்​கும் என்ற நிபந்​தனை​யுடன் பணி நியமன ஆணை வழங்க அனு​மதி வழங்​கப்​படு​கிறது. வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்ட நபர்​கள் தங்​கள் முதல் சம்​பளத்​தைப் பெறு​வதற்கு முன்​பாகவே இம்​மாத இறு​திக்​குள் முக்​கிய விவ​காரங்​கள் குறித்து விசா​ரிக்க நாங்​கள் உத்​தேசித்​துள்​ளோம். இந்த நிபந்​தனை​களின் அடிப்​படை​யில் பணி நியமன நடவடிக்​கை​யைத் தொடல​ராம்.

இந்த வழக்கு 21.07.2026 பிற்​பகல் 2.15 மணிக்கு விசா​ரணைக்கு எடுக்​கப்​படும். அப்​போது தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் உறுப்​பினர் செயலர், கருணை அடிப்​படை​யில் வேலை வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் கரூரில் வழங்​கப்​பட்​டுள்ள வேலை​வாய்ப்​பில் அந்த வழி​காட்​டு​தல்​கள் பொருந்​து​மா? என்​பது குறித்த அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டும். இதற்​காக டிஎன்​பிஎஸ்சி உறுப்​பினர் செயலரை நீதி​மன்​றம் தா​மாக முன்​வந்து எதிர்​மனு​தா​ர​ராகச்​ சேர்க்​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here