முதல்வர் விஜய்யை சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். முதல்வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற பின்னர், வாரநாட்களில் தினமும் சென்னை தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார்.
காலை 10 முதல் மாலை 5 மணி வரை துறைசார்ந்த அலுவல் பணிகளை கவனிப்பதுடன், பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள், முதல்வர் விஜய்யை சென்னை தலைமைச்...
புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப்போல தமிழகத்திலும் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவர் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தென்காசியைச் சேர்ந்த பெருமாள் சேட், உயர் நீதிமன்றமதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ஆலங்குளம் எஸ்ஐ இசக்கிராஜா மற்றும் போலீஸார் என் மகன் மணிகண்டனை பனைத்தோப்புக்கு அழைத்துச் சென்று பனை மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா என பார்க்குமாறு தெரிவித்தனர். அப்போது அவர்களுக்குள்...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மாலை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்த அவர், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிரடிப் படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில்...
‘புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால், தனது பெயர், புகைப்படத்தை தன்னார்வலர்கள் பயன்படுத்த வேண்டாம்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நமது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்த பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்த பொறுப்புகளோ,...
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 என்.ஆர்.காங்கிரஸ், 1 பாஜக எம்எல்ஏ என 3 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. வருகிற 17-ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வுள்ளது
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தே.ஜ கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி மே.13-ம் தேதி பதவியேற்றார். இதை தொடர்ந்து அமைச்சர்களாக பாஜக சார்பில் நமச்சிவாயம்,...
சென்னை மாநகராட்சியில் சட்ட விதிப்படி சொத்து கணக்கை மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் அளிக்கவில்லை
admin - 0
மாநகராட்சியில் மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் சட்ட விதிகளின்படி சொத்துக் கணக்கை அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 34ஏ என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது.
அதில், ``நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், துணை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் சொத்துக்...
கிராமங்கள், நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அண்ணாமலையின் `வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்களை அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.
10 நாட்களில் 40 லட்சம் உறுப்பினர்களை இயக்கத்தில் இணைக்க தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி `வீ த லீடர்ஸ்' என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து, தமிழக பாஜகவில் முக்கியப் பொறுப்புகளில் வகித்து...
மதுபானக் கடைகளில் கூடுதலாக ரூ.10 வாங்குவது வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள் நிறுத்தப்படும் என அமைச்சர் க.விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் என்னை திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்துள்ளார். முறைகேடுகளுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது வரும் பேரவை கூட்டத் தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும். எம்ஆர்பி விலைக்குள் மதுபானம் கொண்டு வரப்படும். எந்த...
ராமேசுவரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்துக்கு இதுவரை 2 கோடி பார்வையாளர்களுக்கு மேல் வந்து சென்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக் காலத்துக்கு பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள...
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக 204 பேருக்கு பதவி கேட்கும் காங்கிரஸ்
admin - 0
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 204 பேரை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு அக்கட்சி கடிதம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து...










