Google search engine
பழநியில் பக்​தர்​கள் வசதிக்​காக தனி​யாரிடம் ரூ.58.54 கோடிக்கு வாங்​கப்​படும் 23.78.5 ஹெக்​டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்​றப்​படும் என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. சென்​னையை சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு: பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோ​யிலுக்கு வரும் பக்​தர்​களுக்​கான திட்​டங்​களை செயல்​படுத்த 23.78.5 ஹெக்​டேர் தனி​யார் நிலம் கையகப்​படுத்​த​வும், அந்த நிலத்​துக்கு ரூ.58 கோடியே 54 லட்​சத்து 63 ஆயிரத்து 724-ஐ இந்து சமய அறநிலை​யத்​துறை​யின்...
தமிழகத்​தில் நேரடி நெல் கொள்​முதல் மற்​றும் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பான ஒருங்​கிணைந்த ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடந்​தது. இதற்கு உணவுத் துறை பி.வெங்​கடரமணன், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​தி​ராஜ், வேளாண்மை துறை அமைச்​சர் ஆர்​.​வினோத் ஆகியோர் தலைமை வகித்​தனர். தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் தலை​வர் பு.உ​மா​நாத், வேளாண்மை துறை செயலர் பொ.சங்​கர், வேளாண்​மைத் துறை இயக்​குநர் க.வீ.​முரளதரன் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். இதில், கொள்​முதல்...
 தெரு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளும் பணி தொடர்​பாக மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்​னை​யில் தெரு நாய்​கள், செல்​லப்​பி​ராணி​களை பராமரிப்​பது தொடர்​பாக, விலங்கு நல தொண்டு நிறு​வனம், தெரு நாய்​களை பராமரிக்​கும் தன்​னார்​வலர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தலை​மை​யில் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. ​கூட்​டத்​தில் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு தெரு நாய்​களை மேலாண்மை செய்​வது குறித்து அனைத்​துத் தரப்​பினரிட​மும் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. தெரு...
 திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது. இதில், பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் 83 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல்,...
 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்கு விசா​ரணையை செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​திலிருந்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றம் செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் தனி​யார் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை பக்​கத்து வீட்​டில் வசித்த சிறு​வன் உள்​ளிட்​டோர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக 6 சிறார்​கள் உட்பட 15 பேர் மீது போலீ​ஸார் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ சட்​டத்​தின் கீழ்...
திமுக ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வரவேண்டிய 25 முக்கிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.34 லட்சம் கோடியாகும். இதனால் 2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். டாடா...
நண்​பர்​களு​டன் கடலில் குளித்​த​போது, அலையில் இழுத்​துச் செல்​லப்​பட்ட மாணவன் உயி​ரிழந்​தார். சென்​னை, புழு​தி​வாக்​கத்​தைச் சேர்ந்​தவர் இஷாந்த் குமார் (17). இவர் 12-ம் வகுப்பு படிப்பை முடித்​து​விட்​டு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி ஒன்​றில் சேர​விருந்​தார். இந்​நிலை​யில், இஷாந்த் குமார் தனது நண்​பர்​கள் 4 பேருடன் நேற்றுமுன்தினம் காலை திரு​வான்​மியூர் கடற்​கரைக்கு சென்​றார். அங்கு அனை​வரும் ஒன்​றாக கடலில் குளித்​தனர். அப்​போது, அவர்​கள் ஒரு​வரையொரு​வர் தொட்​டுப் பிடித்து விளை​யாடிய​தாக கூறப்​படு​கிறது. அந்த சமயத்​தில்,...
வாட்​ஸ்​-அப் செயலி​யில் வழங்​கப்​படும் 44 வித​மான சேவை​களை இது​வரை 1.86 லட்​சம் பேர் பெற்று பயன் அடைந்​திருப்​ப​தாக சென்னை மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக பெருநகர சென்னை மாநக​ராட்சி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யின் சார்​பில் வழங்​கப்​படும் அத்​தி​யா​வசிய சேவை​களை பொது​மக்​கள் எளி​தில் பெறு​வதற்கு ஏது​வாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி வாட்​ஸ்​-அப் செயலி சேவை புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி, பொது​மக்​கள் மாநக​ராட்​சி​யின் 94450 61913 என்ற...
தமிழகம் முழு​வதும் 14 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மதுரை, திருப்பூர், சேலத்​துக்கு புதிய காவல் ஆணை​யர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: தமிழக மின்​வாரிய விஜிலென்ஸ் அதி​காரி​யாக இருந்த ஆயுஷ் மணி திவாரி தலை​மை​யிடத்து கூடு​தல் டிஜிபி-​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். திருப்​பூர் காவல் ஆணை​ய​ராக இருந்த எஸ்​.​ராஜேந்​திரன் மதுரை காவல் ஆணை​ய​ராக​வும், அங்கு காவல் ஆணை​ய​ராக இருந்த கபில்​கு​மார் சரத்​கர் வட சென்னை கூடு​தல்...
தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் எவ்​வித மாற்​ற​மும் இன்றி முழு​மை​யாக வாசித்​தார். கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் ஆளுந​ராக இருந்த ஆர்​.என்​.ர​வி, 2023-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில், அரசு தயாரித்த உரை​யில் சில​வற்றை தவிர்த்​தும், சில தகவல்​களை சேர்த்​தும் வாசித்​தார். அதன்​பிறகு 2024, 2025, 2026-ம் ஆண்​டு​களில் பேர​வைக் கூட்​டத்​தின் தொடக்​கத்​தில் தேசிய கீதம் இசைக்​கப்​பட​வில்லை என்று அதிருப்தி தெரி​வித்​து, தனது...