கூடங்குளம் அணுமின் நிலைய 5-வது அலகில் வெற்றிகரமாக 320 டன் அணு உலை அழுத்த கலன் நிறுவப்பட்டது
admin - 0
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5-வது அலகில், 320 டன் அணு உலை அழுத்தகலன் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில், ரஷ்யாவின் பங்களிப்புடன் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் திட்டத்தின் 5-வது அலகில், அணு உலை கட்டிடத்துக்குள் ‘அணு உலை அழுத்தக்கலன்’ (reactor pressure vessel) வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக, இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் அக்கழகம் வெளியிட்ட பதிவு: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5-வது...
‘கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, விமர்சித்துக் கொண்டே இருந்தால் திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்படும்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பு.
மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும்...
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.8 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் குமார் வழங்கினார்
admin - 0
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 3 வயது பெண் குழந்தையின் குடும்பத்துக்கு அரசு சார்பில், ரூ.8 லட்சம் நிவாரண நிதிக்கான ஆணையை நேற்று செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் குமார் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையையொட்டியுள்ள புதுப்பேட்டை பகுதியில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த பிஹார் மாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை திடீரென...
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனுப்பினார்
admin - 0
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ‘ரூ.258 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலாமாகியுள்ளது’ என திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில்...
2031-க்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என வெள்ளை அறிக்கையில் தகவல்
admin - 0
தமிழகத்தில் 2031-ம் ஆண்டுக்குள் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்கிறது.
அதன்படி, மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.2,29,579 கோடியாக, அதாவது 19 சதவீத வளர்ச்சியுடன் கணிக்கப்பட்டுள்ளது....
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதல்வர் ரூ.48 லட்சம் காசோலையை வழங்கி பாராட்டு
admin - 0
வீர தீரச் செயலுக்காக இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரத்தை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.48 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு -...
காலி மது பாட்டில்களை திரும்பப் பெற இயந்திரத்தை பயன்படுத்த திட்டம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
admin - 0
காலி மது பாட்டில்களை திரும்ப பெற, இயந்திரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியிலும், பின்னர், பல்வேறு மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. இதற்கிடையே, சென்னை உட்பட...
முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் ஆன்லைனில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி: விசாரணை ஆக.7-க்கு தள்ளிவைப்பு
admin - 0
முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் இருதரப்பினருக்கும் முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு...
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
முதல்வராக விஜய் பதவியேற்ற நாள் முதலே பலர் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகமும் கூடுதல் விலைக்கு...
பச்சிளம் குழந்தைகளின் சுவாச பிரச்சினை, தூக்கக் குறைபாடுகளுக்கு ரெயின்போ மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம்
admin - 0
சென்னையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
செவித்திறன் இழப்பு, சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடு போன்ற பாதிப்புகள் குழந்தைகளின் பேச்சுத்திறன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கின்றன.
இத்தகைய சிக்கல்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சென்னை கிண்டி, அண்ணாநகர் மற்றும் சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான...










