ஆளுநர் உரை நிகழ்வு குறித்து ஆலோசிக்க ஸ்டாலின் தலைமையில் ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
admin - 0
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ல் தொடங்க உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் ஆலோனைக் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தவெக அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மே 13 ம் தேதி சட்டப்பேரவை கூடியது. வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது.
இந்த...
தவெகவினர் தற்குறிகள் அல்ல கூர்மையான அம்புக்குறிகள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். அரசியலுக்கு வருவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என மக்களிடம் கேட்டிருந்தேன்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ‘நீங்கள் வராமல் வேறு யார்...
கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சைக்கு கீமோதெரபி மருந்துகளான சிஸ்பிளாட்டின் மற்றும் கார்போபிளாட்டின் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
இந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி யிருப்பது, மருந்து தட்டுப்பாடு என்பது உண்மையான பிரச்சினை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருப்பதை காட்டுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில்...
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் பிரிவு மாணவர்கள் சென்னை அரசு கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
admin - 0
சென்னை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள், அரசு கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவியருக்கு 12 அரசு கல்லூரி மாணவர் விடுதிகள், 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகள் என மொத்தம் 18...
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
admin - 0
அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’ என கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பெண்கள்...
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குளிர்ந்த காற்றுடன் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 10 செ.மீ., ஊத்து பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக,...
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்திருப்பதாகவும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனர்.
cச்இவ்விவகாரத்தில், மேட்டூர் அணையில் இருந்து நீரை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மேட்டூர் அணை திறக்கப்படாத தால்...
‘நான் அரசியலுக்குள் வருவதற்கு என் தாயின் அனுமதி கிடைத்து விட்டது. நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்பதை மக்களாகிய நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்’, என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று காணொலி வாயிலாக அவர் பேசியதாவது: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நான் அரசியலுக்கு வரவேண்டும்.
நான் எப்போதும் என் வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, இதய அறுவை...
சென்னையில் தொடங்கிய மாம்பழ திருவிழா: பல்வேறு மாநிலங்களின் 25-க்கும் மேற்பட்ட வகைகள் விற்பனை
admin - 0
இந்தியாவின் மாம்பழ பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நாட்டின் பல்வேறு மாநில தோட்டங்களிலிருந்த பறிக்கப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்களை சென்னை மக்களுக்கு நேரடியாக வழங்கும் விதமாக, நபார்டு வங்கி மற்றும் அதன் துணை நிறுவனமான நப்கிசான் ஃபைனான்ஸ் சார்பில் ‘மாம்பழ திருவிழா - 2026’ சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும்...
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான கட்டணம் கடைசியாக 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணப்படி ஆரம்ப 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25, அதன்பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், இந்த காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 2013-ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.65...










