Google search engine
“மாத வாரியாக கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெறுவது பெரும் சவாலாக உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் ஆனந்த், “காவிரி நீர் உயிர் ஆதாரமாக உள்ளது. காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாய...
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தலைமைச் செயலக வளாகத்தில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக அரசு இதுவரை எந்தவொரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வெறும் வசனத்தை பேசியே 85 நாட்களை கடந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் ரீல்ஸ், ரீல் விடுவதுதான் இவர்களின் சாதனையாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள்: தேர்தல் நேரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் அளிக்கப்படும், முதியோர் உதவித்...
தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது: சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட தவெக அரசின் பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ ஆக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ‘வேஸ்ட் வேஸ்ட்’ என சொல்லும்படியாகத்தான் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களின் ‘ரீமேக் வெர்சன் பட்ஜெட்’ ஆகவும் அது அமைந்துள்ளது....
தவெக அரசின் முதல் பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்சன், சட்​டப்​பேரவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார். அதில் கவனம் ஈர்த்த அம்சங்கள்: ஏஐ மூலம் தடையற்ற அரசு சேவை வழங்கப்படும். அரசின் சேவை வழங்கலை மாற்றியமைக்கவும், நிர்வாக பணி பகிர்வை எளிமைப்படுத்தவும், தலைமைச் செயலர் தலைமையில் ஆளுமை செயல்முறைகள் சீர்த்திருத்தக் குழு அமைக்கப்படும். சட்டப்படி உரியநேரத்தில் அனைவருக்கும் சேவைகள் கிடைக்கும் பொருட்டு சேவை உரிமை சட்டம் இயற்றப்படும். முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றது. அதில் வாக்குப்பதிவில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல்...
 தமிழக பட்ஜெட்டில் சென்னைக்காக 1 லட்சம் புதிய வீடுகள் மற்றும் கூவம், அடையாறு நதிகள் சீரமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதன் பரப்பளவை 5,904 சதுர கி.மீ-ஆக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான முழுமைத் திட்டத்தைத்(மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் எளிதாகத் திட்ட அனுமதி பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய...
“100 நாளில் தவெக அரசின் மதிப்பெண் என்ன என்று யாரிடம் கேட்டாலும் பெரிய பூஜ்ஜியம் என சொல்வார்கள். அதேபோல் தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை பெற்றுள்ளது. ஆட்சிக்கு வரும்போது மாற்றம் என்றார்கள். என்ன மாற்றம் என்றால் ‘பெயர் மாற்றம்' தான்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர்...
தமிழகத்தை வறுமை இல்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பினை வழங்கக்கூடிய மாநிலமாகவும், 2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்றுவதற்குத் தேவையான சமூக பொருளாதாரம் மற்றும் மனித வள முதலீடுகளை மேற்கொள்வதற்கு தவெக அரசு உறுதிபூண்டுள்ளது என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்​டுக்​கான(2026-27) பொது பட்​ஜெட்​டைத் தாக்​கல் செய்து, நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் உரை நிகழ்த்தி வருகிறார். நிதி அமைச்சர்...
புனித ஹஜ் பயணத்துக்கான அரசு மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை, தமிழக சட்டப்பேரவையில் தாக்​கல் செய்த நிதியமைச்​சர் மரிய வில்​சன், சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் தனது பட்ஜெட் உரையில், “மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும். சிறுபான்மையின மாணவர்களுக்குக் கால்வி...
தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,485 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 மாவட்டங்களில் 'நம்பிக்கை இல்லம்' அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார். இது குறித்து அவர் பேசும்போது, மாற்றுத்திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக நம்முடைய முதல்வர் விஜய்...