Google search engine

தக்கலை: போலீஸிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து தப்ப முயன்ற கைதி

அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜான் (39). ஆயுதப்படை தலைமைக் காவலரான இவர் நேற்று (5-ம் தேதி)  பாளையங்கோட்டை சிறையில் இருந்து போலீஸ்  வாகனத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் என்ற முத்தையா (25) என்பவரை நாகர்கோவில் கொண்டு வந்தார். பின்னர்  பத்மநாபபுரம்...

திருவட்டார்: திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரிப்பாய் (40). இவர் மீது குமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திருவட்டார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு  நடந்த திருட்டு வழக்கில் போலீசார் இவரை...

நித்திரவிளை: மாணவர்களுக்கு  கஞ்சா விற்ற 2 பேர் கைது

நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று (5-ம் தேதி) மாலையில் விரி விளை அருகே உள்ள கணபதியான்கடவு  பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, அவர்கள்...

நித்திரவிளை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகள் ஷாலு (17). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக கடந்த 27ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று (5-ம் தேதி)...

நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய நர்சை சில வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும், இரவு பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம். ஆர். பி....

வடசேரியில் மது விற்ற முதியவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கிருஷ்ணன்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வ. ஊ. சி. தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 65) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது....

திருவட்டாறு: ஆதிகேசவன் கோயில் கிருஷ்ணன் சன்னதி கொடியேற்றம்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று ( 4-ம் தேதி) இரவு கோவிலின் உள்ளே உள்ள திருவம்பாடி கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது.கோகுல் தந்திரி, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை பூஜை செய்து கொடிமரத்தில்...

மார்த்தாண்டன்துறை: நாலட்ஜ் பவுண்டேசன் சார்பில் கல்வி விருது

கிள்ளியூர் தொகுதி, மார்த்தாண்டன்துறையில் செயல்பட்டு வரும் நாலட்ஜ் பவுண்டேசன்  சார்பில் கல்வியாண்டின் 10 மற்றும் 12-ம் வகுப்பு இறுதி தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.      கடந்த 2023-2024 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்களில் 90 சதவீதத்துக்கும்...

கொல்லங்கோடு: கடத்தல் வாகனத்தை திருப்பி அனுப்பிய போலீசார்

கிள்ளியூர் பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு காவல் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் போலீசார்  ரோந்து பணியில் இருந்த போது சொகுசு வேன் ஒன்றில் 8 மீனவர்கள் உட்பட 42 கேன்களில் 1500 லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்துள்ளது. தமிழக...

புதுக்கடை: தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது

புதுக்கடை அருகே கீழ்குளம், பருத்தியடைப்பு விளையை சேர்ந்தவர் ஆல்பன் (44). இவருக்கும் அதே பகுதி அரசு (44) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அரசு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று வரும் போது, எதிரே வந்த ஆல்பனை தடுத்து நிறுத்தி அரசு மற்றும் 2...