Google search engine

குளச்சல்: அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் பறிமுதல்

குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் தலைமையிலான போலீசார் நேற்று (7-ம் தேதி) மாலையில் களியங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது விதியை மீறி அதிக பாரம் ஏற்றி...

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் கழிவறை ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். கடந்த சில தினங்கள் முன்பு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கழிவறை வசதி இல்லை என்று கூறி பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்....

கருங்கல்: சோனியா பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

சோனியா காந்தியின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று 8ம் தேதி மதியம் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளியாவிளை புனித அன்னம்மாள் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கலந்து கொண்டு...

பேச்சிப்பாறை: வேலைவாய்பு திறன்பயிற்சி கலெக்டர் துவக்கினார்

பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கலையரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (8-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில்: - இந்த திறன் பயிற்சியில்...

தக்கலை: துணிக்கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பினோராஜன் (40). இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கடையின் மேஜையில் வைத்திருந்த பினோராஜனின் கைக்கடிகாரம் திடீரென மாயமானது. அப்போது கடைக்குத் துணி வாங்க வந்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோராஜனின்...

திருவட்டாறு:   விபத்தில் ஒர்க்ஷாப் தொழிலாளி படுகாயம்

திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ரோஸ் பர்வீன் (56). ஓர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று (7-ம் தேதி) காலை ரோஸ் பர்வீன் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திருவட்டார் - மாத்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வேகமாக...

நித்திரவிளை: கேரள மீனவர்களை காப்பாற்றிய குமரி மீனவர்கள்

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மெஜில் என்பவரின் விசைப்படகு ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடிதுறைமுகம் நோக்கி கடந்த 1-ம் தேதி வந்துகொண்டிருந்தது.  கொச்சி அருகே வந்தபோது ஆழ்கடலில் ஒரு ஃபைபர் படகு எஞ்சின் பகுதி உடைந்து 6 கேரள மீனவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தனர். உடனே விசைப்படகில்...

வட்டவிளை: முன்னாள் ஊர்தலைவர் வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டவிளை ஊர் தலைவராக இருந்த சிவ கிருஷ்ணன் தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 கோடி ரூபாயையும், 25 பவுன் நகையும் புதிய ஊர் கமிட்டியிடம் ஒப்படைக்க RDO உத்தரவிட்டும் இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, புதிய நிர்வாகிகள்...

நாகர்கோவில்: ரயில்வே தொழிற்சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான கிளைத்தேர்தல் கடந்த மூன்று நாளாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் SRMU, DREU, DRKS, SRES ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் உள்ள 1120 வாக்காளர்களில் நேற்றுடன் (டிசம்பர் 6) முடிந்த வாக்குப்பதிவில் மொத்தம் 912 பேர் தங்களது வாக்குகளை...

நித்திரவிளை: ஓய்வு பெற்ற அரசு பேருந்து டிரைவர் மீட்பு

நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியில் நேற்றிரவு 6:30 மணியளவில் வயதான நபர் ஒருவர் பாதை தெரியாத நிலையில் உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, காஞ்சிபுரம் மற்றும் நடைக்காவு ஆகிய பகுதிகளில் உறவினர்கள் இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் அவரின் கால் சட்டையை சோதனை செய்துபார்த்தபோது, அவரது...