Google search engine

கொல்லங்கோடு:   24 மது பாட்டில்களுடன் வியாபாரி கைது

கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் காலை வேலையில் ஸ்கூட்டரில் வந்து ஆங்காங்கே நின்று கொண்டு பின்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று ஊரம்பு பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரம்பு...

மண்டைக்காடு:   கோவில் மாசி கொடை; பந்தல் கால் நாட்டு விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாசிக் கொடை விழா வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.  இந்த...

புதுக்கடை: கணவனுடன் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி

புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (30). இவர் முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறார். இவர் நேற்று (பிப்.11) காலை தனது மனைவி ஹரிஷ்மா, 3 வயது குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலக சந்திப்பில் வைத்து பைக்கைத் திருப்புவதற்காக...

கோட்டாரில் புகையிலை வைத்திருந்தவர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் எட்டுக்கடை பஜார் பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் என்பவர் அவரது பலசரக்குக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதனை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் பறிமுதல் செய்து வழக்குப்...

குமரி: பிப்ரவரி 17ஆம் தேதி மாறக்காதீங்க..!

தமிழ்நாட்டில் மார்ச்‌ மாதம், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம் என அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ லதா அறிவித்துள்ளார். தேர்வுக்கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று...

மணவாளக்குறிச்சி: இருதரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே வயக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (65). இவர் கொத்தனார். செல்வத்துக்கு சொந்தமான பூர்விக இடம் பிள்ளையார் கோவில் சந்திப்பு பகுதியில் உள்ளது. நேற்று (பிப்.8) செல்வம் மற்றும் அவர் மகன் பால பிரனேஷ் ஆகியோர் இடத்துக்கு சென்று சர்வேயர் மூலம் இடத்தை அளந்து கல்...

திருவட்டாறு: பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் நியமனம்

தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனராக அலுவலகத்திலிருந்து வந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது: - தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு அலுவல் சாரா பழங்குடியினர் 14 பேர், அலுவல் சாரா பழங்குடியினர் அல்லாத மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலவாரிய ஆய்வுக் கூட்டம் மற்றும்...

அருமனை:   சந்தன மரம் வெட்டி கடத்திய ஒருவர் கைது

களியக்காவிளை அருகே உள்ள செங்கவிளை பகுதியை சேர்ந்தவர் கிங்சிலி ஆனந்த் (46). இவர் ராணுவ வீரர். அருமனை அருகே மேல்புறம் பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரம் உள்ளது. அதனை யாரோ திருட்டுத்தனமாக வெட்டி சென்றதாக கிங்சிலி ஆனந்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் பணியிடத்திலிருந்து...

குமரி: உணவு கழிவுகளுடன் வந்த டெம்போ சிறைபிடிப்பு

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உணவுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் டெம்போக்களில் ஏற்றி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பன்றிப் பண்ணைகளுக்கு உணவாக இவை கொண்டு வரப்படுவதாக தெரிகிறது. பன்றிப் பண்ணைகளுக்கு கொண்டு வரப்படும் உணவுக் கழிவுகளை...

இரணியல்: கஞ்சா விற்றதாக  2 பேர் கைது

திங்கள்நகர் அடுத்த கண்டன்விளை விளையாட்டு மைதானம் பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக இரணியல் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து நேற்று (பிப்.8) சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு நின்ற இரணியல் பகுதியைச் சேர்ந்த ரதீஷ் (20), சர்ஜின் (19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்...