கோட்டாறு பகுதியில் இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறில் இளங்கடை வடக்கு அரசு தொடக்கப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுக் கட்டடமான இந்தக் கட்டடம் ஒரு பகுதி இடிவிழுந்து, மற்ற பகுதிகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே,...
சின்னவிளை: கடற்கரை பகுதியினை பார்வையிட்ட கலெக்டர்
கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கண்டைனர்கள் அரபிக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது. இந்த கப்பலில் சில பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட...
மணக்கரை: நான்குவழிச் சாலையில் விதிமுறைகளை மீறி டோல்பிளாசா
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டம் 2026 க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற்று வருகின்றன. காவல்கிணறு-நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க, அந்த டோல் பிளாசாவிலிருந்து சுமார் 18 கி.மீ...
புதுக்கடை: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (55). நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு மற்றும் கடன் பிரச்சனையால் ரசல்ராஜ் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 8) வீட்டிலிருந்து வெளியே வேறு...
குமாரகோவில் முருகன் கோயிலில் வைகாசி திருவிழா ஆராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குமாரகோவில் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருஆறாட்டு நிகழ்ச்சி தந்திரிஸ்ரீ ராமரு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
மணவாளகுறிச்சி: மனைவி, மாமனாரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் மனைவி சிவகலா (32). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். இதனை அறிந்த சிவகலாவின் தந்தை ராஜன் மருமகனைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன் மாமனாரைத் தாக்கினார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்...
ஆளூர்: சாலையில் கழிவு… சுகாதாரச் சீர்கேடு
காரங்காட்டில் இருந்து ஆளூர் செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் கட்டிமாங்கோடு ஊராட்சிப் பகுதியிலிருந்து சேமிக்கப்படும் குப்பைகள் குவித்து வைக்கப்படுவதும், பின்பு எரிக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோன்று தெரு நாய்கள் குப்பைகள், இறைச்சி, உணவுக் கழிவுகளைக் கிளறுகின்றன. எனவே இப்பகுதியில்...
பேச்சிப்பாறை: அணை நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் 1ஆம் தேதி பேச்சிப்பாரை அணை நீர் திறந்து விடப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் பல பகுதிகளில் கால்வாய் துவாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் கால்வாயில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் மட்டுமே...
இரணியல்: ஆட்டோ கவிழ்ந்து பெண் படுகாயம்
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் மனைவி மேரி பாய் (57). நேற்று காலை இவர் ஆட்டோவில் திங்கள்நகர் பகுதிக்கு வந்தார். பின்னர் மதியம் அங்கிருந்து ஆட்டோவில் திரும்பி வரும்போது குழியூர் என்ற பகுதியில் வைத்து ஆட்டோ எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேரி...
குமரி: கடற்கரையில் ஒதுங்கிய சோப் ஆயில் பேரல்
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குச் சென்ற லைபிரியா நாட்டுக் கப்பல் கடந்த மே 24ஆம் தேதி கடலில் கவிழ்ந்தது. இதிலிருந்து குமரி மாவட்டத்திலும் கண்டெய்னர் கரை ஒதுங்கியது. இந்த நிலையில், நேற்று சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல் இரவிபுத்தன்துறை கடற்கரைப் பகுதியில்...













