Google search engine

வேளிமலை: வனச்சரகம் சார்பில் கடற்கரை தூய்மை பணி

குமரி மாவட்ட வனத்துறை சார்பில் வேளிமலை வனச்சரக பணியாளர்களும், சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் சேர்ந்து வேளிமலை வனச்சரக எல்லைக்குட்பட்ட அழிக்கால் மண்டபம், லெமூர்பீச், ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச 1-ம் தேதி) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.  பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிகள், கண்ணாடிப் பாட்டில்கள் போன்றவை...

பத்துகாணி: மரங்களை வேரோடு சாய்த்த யானை கூட்டம்

அருமனை அருகே பத்துகாணி ஆதிவாசி குடியிருப்பு வனப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் தற்போது யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.  கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் கிராமப் பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று யானை கூட்டம் பத்துகாணி -...

குமரி: ஒரு வாரத்தில் 339 பேரை நாய் கடித்ததாக தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களிலும் சாலைகளிலும் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்களை அவை கடித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 339 பேர்களை நாய்கள் கடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 25 பேரை நாய் கடித்துள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி...

குமரி ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் அழகுமீனா...

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் திடீர் போராட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் நேற்று காலையில் சிலருடன் வந்து குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவிக்கையில், நான் பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்குச் சொந்தமான ராட்டினத்தை ஒருவர்...

குளச்சல்: பேரன் இறந்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகே உள்ள லியோன் நகரை சேர்ந்தவர் வர்கீஸ் மனைவி சகாயமேரி (54). இந்த தம்பதிக்கு சகாய டேனியல், சகாய லிபியா என்ற மகனும் மகளும் உள்ளனர். இதில் சகாய லிபியாவுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் லிஜோன் (8) உடல்...

கொல்லங்கோடு: குருசடி, கோவில் உண்டியலை திருடியவர் கைது

கொல்லங்கோடு அருகே கோனசேரி புனித அந்தோனியார் குருசடி மற்றும் பிராகோடு பரிதர்மசாஸ்தா கோவிலில் உள்ள உண்டியல்களை உடைத்து திருடியதாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (29-ம் தேதி) மாலை ஊரம்பு சந்திப்பில் வைத்து உண்டியல் திருட்டில் சம்பந்தப்பட்ட மேல்பாலை...

திருவட்டாறு: தாய் மொபைலுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்

திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சௌமியா கல்லூரிக்குச் செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றார். சென்ற சிறிது நேரத்தில் அவரது தாய் அகிலா என்பவரின் செல்போனுக்கு மெசேஜ்...

முஞ்சிறை: திமுகவினர் திடீர் போராட்ட முயற்சி

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளப்புறம் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் செல்வன் என்பவர் ஊராட்சி தலைவர் மனோன்மணிக்கு, பொதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தடையாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரை இடமாற்ற வேண்டும் என கேட்டு முஞ்சிறை ஊராட்சி...

நாகர்கோவில்: தவறவிட்ட மணிப்பர்ஸை மீட்டுக்கொடுத்த போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் இன்று(நவ. 28) காத்துநின்ற பெண்மணி ஒருவர் தான் வைத்திருந்த மணிப்பர்சை தவறவிட்டுவிட்டார். அதில், ஆயிரக்கணக்கில் பணம் இருந்தது, உடனடியாக வடசேரி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு தவறவிட்ட மணிப்பர்சை மீட்டுக்கொடுத்தனர், உடனே...