Google search engine

குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு

குமாரகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் களியக்காவிளை மாணவி ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், மாணவி ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், களியக்காவிளையை சேர்ந்த சுராபுதீன், ஜாஸ்மின் மற்றும் மேலும் 13 பேர் கொண்ட கும்பல் ஆகாஷ் வீட்டிற்குள் புகுந்து...

குமரி: திற்பரப்பு அருவியில் வெள்ளம் பயணிகள் உற்சாகம்

கோடை காலத்தில் வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியில், வெப்பச்சலனத்தால் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அருவிக்கு வருகை தந்துள்ளனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டும் இந்த அருவி, தற்போது மீண்டும் உற்சாகத்துடன் காட்சியளிக்கிறது.

குமரியில்: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக வாலிபரிடம் பணம் மோசடி

வள்ளவிளை பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த சைமன் (29) என்பவர் இஸ்ரேலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராததால், பிரவீன் பணத்தை திரும்ப கேட்டபோது சைமன் தர மறுத்துள்ளார். இது குறித்து பிரவின் கொல்லங்கோடு காவல்...

குமரியில்: சுகாதாரத் துறைக்கு புகாரளித்த பெண் மீது தாக்குதல்

கொல்லங்கோடு பகுதியில் பன்றி பண்ணையால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து நிமிஷா என்பவர் சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார். இதற்குக் கோபமடைந்த பண்ணை உரிமையாளர்கள் நிமிஷாவைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நிமிஷா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...

கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பெறப்படும். கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை...

குளச்சல்: சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

குளச்சல் பகுதியைச் சேர்ந்த லுக்மானுல் ஹக்கீம் என்பவரின் மகள்கள் ஆதிலா (15) மற்றும் ஆசின் (10) ஆகியோர் அரபி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விபின் (42) என்பவர் தனது பைக்கில் அதிக ஒலி எழுப்பி அவர்களை அச்சமூட்டியுள்ளார். சிறுமி ஆசின் தட்டி...

பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

பேச்சிப்பாறையில்  அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது.  நேற்று முன் தினம் இரவு பள்ளி வளாகத்தில் இருந்து மலை பாம்பு ஒன்று  வெளியே வந்து,  சாலையை கடந்த பாம்பு பாக்கியதாஸ் என்பவர் வீட்டு வளாகத்தில்  சென்றுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  பாம்பு...

அருமனை: திருமணம் நிச்சயமான இளம் பெண் மாயம்

அருமனை பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் ஷோபனா (27), துணிக்கடையில் வேலை செய்து வந்தார். வருகிற 28ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் சோபி, அருமனை...

குறும்பனை: ரூ 12 லட்சம் மோசடி பெண் தூக்கிட்டு தற்கொலை

குறும்பனை பகுதியைச் சேர்ந்த 60 வயதான சோபை, தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 12 லட்சத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்ததால் மனமுடைந்த சோபை, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....

குமரியில்: விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதித் தேர்வில் பங்கேற்கத் தகுதி பெறுவர். இந்தத் தேர்வு...