குமரியில்: காட்டு யானை அட்டகாசம்; கிராம மக்கள் போராட்டம்
குமரி மலையோரப் பகுதியில் காட்டு யானை தாக்கி ராஜேஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, ஆதிவாசி பழங்குடியின மலைக்கிராம மக்கள் நேற்று (ஜூன் 3) மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் மின்சாரம் இல்லாததால் தீ பந்தல்களை ஏந்தியும், சாலையில் தீ மூட்டியும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சுமார்...
நாகர்கோவில் அருகே காசி விஸ்வநாதர் கோவில் குரு பெயர்ச்சி விழா
நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி குரு பகவானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், களபம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம்...
குமரியில்: அமைச்சர் பேச்சு வார்த்தை; டாஸ்மாக் கடை மூடல்
பொதுமக்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தீவிரமடைந்தது. நேற்று அமைச்சர் ராஜேஷ்குமார், டாஸ்மாக் கோட்ட மேலாளர் சரவணன், கிள்ளியூர் தாசில்தார் அஜிதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை நிரந்தரமாக மூடப்படும் என அமைச்சர் ராஜேஷ்குமார் உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
குமரி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளிடம் கனிவுடன் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் மில்லிங்டோனியா,...
குமரி: யானை தாக்கியதில் மதபோதகர் உயிரிழப்பு
கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் நேற்று (ஜூன் 2) 3 காட்டு யானைகள் ரப்பர் தோட்டத்தில் புகுந்தன. கிராம மக்களும் வனத்துறையினரும் சேர்ந்து யானைகளை துரத்தினர். இதில் ஒரு யானை பட்டப்பாறை பகுதியில் மத போதகர் ராஜேஷ் (46) என்பவரை தந்தத்தால் முதுகில் குத்தி கொன்றது. பலத்த காயமடைந்த...
கொல்லங்கோடு: பள்ளி மாணவன் கடலில் மாயம்
கேரளாவின் பூவார் பொழி முகத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் டேனியல் கிறிஸ்டியன் திடீரென கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானான். நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், நண்பர்களால் மாணவனை காப்பாற்ற முடியவில்லை. பூவார் தீயணைப்பு படை வீரர்கள் நேற்று இரவு வரை தேடியும்...
வாரிசுகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மறைந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். மேலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தாமதம்...
நித்திரவிளை: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வைகல்லூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான சோமன், வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் பார்ப்பது குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மன உளைச்சலுக்கு ஆளான அவர், அன்று இரவு விஷம் குடித்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
குமரி: விஷ ஜந்துக்களின் கூடாரமாமான போலீஸ் குடியிருப்பு
திருவட்டாறு அருகே காங்கரை, இடிச்சக்கபிலாமூடு பகுதியில் இருந்த பழைய போலீஸ் குடியிருப்பு மூடப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டாறில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. தற்போது காங்கரை குடியிருப்பு பாழடைந்து விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பாழடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டிடத்தை...
குமரி: பத்திர பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த மெர்லின் ரஞ்சித் (40) என்பவர், சொத்துப் பாகப்பிரிவினைக்காக மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி, நேற்று அவர் தனது குடும்பத்துடன் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தின் வாயிற்படியில் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரி உணவு உண்ணச் செல்ல முயன்றபோது அவரைத் தடுத்து...













