குமரி: பத்திர பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்

0
19

அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த மெர்லின் ரஞ்சித் (40) என்பவர், சொத்துப் பாகப்பிரிவினைக்காக மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி, நேற்று அவர் தனது குடும்பத்துடன் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தின் வாயிற்படியில் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரி உணவு உண்ணச் செல்ல முயன்றபோது அவரைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு பத்திரப்பதிவு செய்து தருவதாக அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், குடும்பத்தினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here