Google search engine
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 3-ம் தேதி கோடை விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை...
பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம்...
நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், டெல்டா மாவட்டங்களில் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அனுமதி...
கடலுக்குள் காற்றாலை மின்னுற்பத்தி செய்வது தொடர்பாக, டென்மார்க் நாட்டு எரிசக்தி முகமை அதிகாரிகளுடன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இத்திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. கடலில் அமைக்கப்படவுள்ள காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும்...
கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து, கல்லூரி கனவு-2025 எனும் வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து தமிழக...
பாதுகாப்பு கேட்டு நடிகை கவுதமி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமி, தற்போது, அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாற்றிய அழகப்பன் மோசடி செய்து அபகரித்ததாகவும், சட்ட விரோதமாக அனுமதி பெற்று அங்கு கட்டிடம் கட்டி வருவதாகவும் காவல் துறையில் சமீபத்தில்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்' இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க...
பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக, பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவம் தமிழ்​நாட்டு மக்​களிடையே கடும் அதிர்ச்​சியை உண்​டாக்​கியது. தமிழ்​நாட்​டில் பெண்​களுக்கு எதி​ராக நிகழ்ந்த மிகக்​கொடுமை​யான குற்​றசம்​பவ​மாக கருதப்​படும் இந்த வழக்கை விசா​ரணை செய்த...
காவல் துறை​யில் பெண்​கள் என்ற தலைப்​பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்​டலூர் அருகே ஊன​மாஞ்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு போலீஸ் அகாட​மி​யில் நேற்று தொடங்​கியது மாநாட்டை மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​தி​யானந்த் ராய் தொடங்கி வைத்​தார். இன்று நடக்​கும் மாநாட்டு நிறைவு விழா​வில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொள்​கிறார். பெண் காவலர்​களை கவுரவிக்​கும் வகை​யில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்​கியது செங்​கல்​பட்டு...
தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்​டு​கள் ஆவதையொட்டி இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் வாழ்த்து கூறியுள்​ளார். இது தொடர்​பாக தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தி துறை அமைச்​சர் ​மு.பெ.​சாமி​நாதன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் அன்​புடன் “இசை​ஞானி” என அழைக்​கப்​பட்​ட​வர் இளை​ய​ராஜா. அந்த பெயரே இன்​றைக்கு தமிழரின் இசை அடை​யாள​மாக உலகெங்​கும் ஒலிக்​கிறது. இந்​திய அரசின் உயரிய விருதுகளான பத்​மபூஷண், பத்​ம​விபூஷண் விருதும்,...