பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால் இந்தியாவுக்கு சில விஷயங்களில் வெற்றி கிடைத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘‘நான் பாராட்டியது சரிதான். கட்சிக்காக மட்டும் எப்போதும் பேச முடியாது’’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.சசிதரூர், அவ்வப்போது மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பாராட்டி கருத்து வெளியிடுகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இவர் மீது அதிருப்தியும் நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பை...
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.17) அதிகாலை 5.36 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.
தேசத்தில் நிலநடுக்கம் உள்ளிட்டவற்றை கண்காணித்து வரும் அரசு நிறுவனமான தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் இதை உறுதி செய்துள்ளது. டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. பூமியில் 5...
அமெரிக்க தயாரிப்பான எப்-35 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையும்போது, அதன் திறன் பல மடங்கு அதிகரிக்கும்.
பிரதமர் மோடி அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு எப்-35 போர் விமானங்கள் விற்கப்படும் என அறிவித்தார். இந்த போர் விமானம் சூப்பர்சோனிக் வேகத்தில் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் பறக்கும் திறன் உடையது. இந்த விமானத்தின் விமானி...
மணிப்பூரில் கையில் துப்பாக்கியுடன் இளைஞர்கள் கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அந்த இளைஞர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில வைரலானது. ஏகே 74 மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம் சீரிஸ் துப்பாக்கிகளை அந்த இளைஞர்கள் வைத்திருந்தனர். மேலும் 'குகி மண்' என்ற தலைப்பில் இந்த வீடியோ...
காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்…புல்வாமா ஹீரோக்களை நாம் கொண்டாடவேண்டாம் என்று பாட்னாவில் இந்து ஷிவ் பவானி சேவா அமைப்பினர் கோஷம் எழுப்பினர்.
நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிஹார் மாநிலம் பாட்னாவிலுள்ள பல்வேறு பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் ஆண்கள், பெண்கள் ஜோடியாக காதலர் தினத்தைக் கொண்டாடினர்.
அப்போது அங்கு வந்த இந்து ஷிவ் பவானி சேவா அமைப்பினர், “காதலர் தினத்தை நாம் கொண்டாட வேண்டாம். பொது இடங்களில்,...
ஒரு தலைபட்சமாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால், ஆத்திரமடைந்த காதலன், காதலர் தினமான நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்.
திருப்பதியை அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், மதனபல்லி அம்மாசெருவு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பியாரம்பல்லி பகுதியை சேர்ந்த பியூட்டி பார்லரில் பணியாற்றும் ஒரு பெண்ணை ஒரு தலைபட்சமாக கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலை அந்த பெண்...
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குகி பழங்குடியினர் வரவேற்பு, மைதேயி அமைப்பு எதிர்ப்பு
admin - 0
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியிருப்பது நம்பிக்கையின் ஒளிக்கீற்று என்று குகி பழங்குடியினர் கூறியுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மைதேயி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே கடந்த 2023-ல் ஏற்பட்ட இனக் கலவரத்துக்கு பிறகு அங்கு இன்னும் இயல்நிலை திரும்பாத சூழலில் முதல்வர் பிரேன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். இதையடுத்து மணிப்பூரில் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர்...
கேரளா கோயில் திருவிழாவின் போது யானைகள் மிரண்டு ஓடியதில் 3 பக்தர்கள் உயிரிழந் தனர். 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடில் மனக்குலங்கரா விஷ்ணு கோயில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் திருவிழா நடைபெற்றது. அதற்காக யானைகள் ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது. அதற்காக 2 யானைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. அன்று மாலை 6 மணிக்கு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அப்போது பட்டாசுகள் வெடித்து மேள,...
பெண் நீதிபதி மீது குற்றவாளி ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலத் தலைநகர், ஹைதராபாத் செர்லோபல்லி மத்திய சிறையில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் இருப்பவர் கரண்சிங் என்கிற சர்தார் சீமகுர்த்தி (22).
இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி, ஹைதராபாத் வெளி வட்டார சுற்றுப்பாதை பகுதியில், காரில் சென்றவர்களை வழிமறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒருவரை கொலை...
வடக்கு – தெற்கு கலாச்சார உறவை உணர்த்தும் கண்காட்சியுடன் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம்
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் வாரா ணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதி வாராணசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாராணசிக்கும் தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்து உள்ள உறவை புதுப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி நடத்த ஏற்பாடு செய்தார். தற்போது காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 இன்று தொடங்குகிறது. பிற்பகல் 3.00...










