பிஹார் தலைநகர் பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பிஹார் முதல்வராக...
கடந்த 2004-2009-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சி செய்தபோது ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு ரயில்வே துறையில் பலருக்கு வேலை அளித்ததாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினருக்கு எதிராகச் சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச...
மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை சுமார் 70 தொகுதிகள் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த தொகுதிகளில் கடந்த தேர்தல்களில் பதிவான வெற்றி-தோல்வி வாக்கு வித்தியாசத்தை விட, தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வழக்கத்துக்கு...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திராவை சேர்ந்த இளம் பொறியாளர் தனது பிறந்தநாளன்றே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்பிலி பகுதியை சேர்ந்தவர் சிங்கிரெட்டி சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா (26). இவர் அமெரிக்காவின் மிசோரி அருகே செயிண்ட் லூயிஸ் பகுதியில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் எனும் இடத்தில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். பொறியியல் பட்ட மேற்படிப்பு (எம்எஸ்) முடித்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில்...
டெல்லி சட்டப்பேரவையை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மூலம் தகர்ப்போம் என மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.
டெல்லி சட்டப் பேரவை அலுவலகம் மற்றும் சபாநாயகர் விஜேந்திர குப்தாவுக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். முழுவதும் இந்தியில் அனுப்பப்பட்ட அந்த இ-மெயிலில் கூறியிருப்பதாவது:
பிராமணராக இருக்கும் எஸ்.வி.சேகர் திமுகவில் சேர்ந்துள்ளார். அவரை பாஜக.,வின் பிராமின் ஏஜென்டாக நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். அதனால்தான் டெல்லி சட்டப்பேரவையை நாங்கள் 15 ஆர்டிஎக்ஸ்...
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.
அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய...
‘மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன்’ – 1993ல் போட்ட சபதத்தை 2011ல் நிறைவேற்றிய மம்தா பானர்ஜி
admin - 0
மேற்கு வங்க தலைமை செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்று 1993-ல் போட்ட சபதத்தை 2011-ல் முதல்வராக நிறைவேற்றினார் முதல்வர் மம்தா பானர்ஜி.
கடந்த 1993-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் மம்தா பானர்ஜி. மக்களவை எம்.பி.யான அவர் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். செல்லும் இடங்களிலும் அவரது பேச்சுக்கு வரவேற்பு இருந்தது. கட்சியின் ஃபயர் பிராண்ட் லீடராக அவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் 1993ம் ஆண்டு மே மாதம் மேற்கு...
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஏப்.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கம்,...
மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாயத் துப்புரவுப் பணி என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு கிராம பஞ்சாயத்தால் ஒருமனதாக எடுக்கப்படுள்ளது.
இந்த விதிமுறை தொடர்பான சுவரொட்டிகள் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. பொது நடத்தையை ஒழுங்குபடுத்தவும், தரக்குறைவான வார்த்தை பயன்பாட்டால் ஏற்படும் மோதல்களைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமத் துணைத் தலைவர்...
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டம், பத்நகர் தாலுகா, ஜலாரியா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் பாகீரத் என்ற 2 வயது சிறுவன் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். சிறுவனை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "தண்ணீர் நிரம்பிய ஆழ்துளைக் கிணற்றில் 75 அடி ஆழத்தில்...










