Google search engine
பிஹார் தலைநகர் பாட்​னா​வில் தேசிய ஜனநாயக கூட்​டணி எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் இன்று நடக்​கிறது. இதில் அந்த மாநிலத்​தின் புதிய முதல்​வர் தேர்வு செய்​யப்பட உள்​ளார். பிஹாரில் பாஜக, ஐக்​கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்​துஸ்​தான் அவாம் மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக முற்​போக்கு கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார், பிஹார் முதல்​வ​ராக...
கடந்த 2004-2009-ம் ஆண்​டில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐ.மு. கூட்​டணி ஆட்சி செய்​த​போது ரயில்வே அமைச்​ச​ராக லாலு பிர​சாத் யாதவ் இருந்​தார். அப்​போது, நிலத்தை லஞ்​ச​மாகப் பெற்​றுக் கொண்டு ரயில்வே துறை​யில் பலருக்கு வேலை அளித்​த​தாக லாலு பிர​சாத் யாதவ், அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ராகச் சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி லாலு பிர​சாத் யாதவ் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்​ச...
மேற்கு வங்​கத்​தில் ஆட்சி அமைக்​கப் போவது யார் என்​பதை சுமார் 70 தொகு​தி​கள் தீர்​மானிக்​கும் எனக் கருதப்​படு​கிறது. இந்த தொகு​தி​களில் கடந்த தேர்​தல்​களில் பதி​வான வெற்​றி-தோல்வி வாக்கு வித்​தி​யாசத்தை விட, தற்​போது வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டோர் எண்​ணிக்கை அதி​க​மாக இருப்​பது இதற்கு காரண​மாக கூறப்​படு​கிறது. மொத்​தம் 294 உறுப்​பினர்​களை கொண்ட மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் வழக்​கத்​துக்கு...
அமெரிக்​கா​வின் கலிஃ​போர்​னியா மாகாணத்​தில் உள்ள ஒரு நீர்​வீழ்ச்​சி​யில் விழுந்து ஆந்​தி​ராவை சேர்ந்த இளம் பொறி​யாளர் தனது பிறந்​த​நாளன்றே பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளார். ஆந்​திர மாநிலம், விஜயநகரம் மாவட்​டம், பொப்​பிலி பகு​தியை சேர்ந்​தவர் சிங்​கிரெட்டி சாய் ஸ்ரீஹரி​கிருஷ்ணா (26). இவர் அமெரிக்​கா​வின் மிசோரி அருகே செயிண்ட் லூயிஸ் பகு​தி​யில் உள்ள வெஸ்ட் மின்​ஸ்​டர் எனும் இடத்​தில் தனது நண்​பர்​களு​டன் வசித்து வந்​தார். பொறி​யியல் பட்ட மேற்​படிப்பு (எம்​எஸ்) முடித்து அங்​குள்ள ஒரு நிறு​வனத்​தில்...
டெல்லி சட்டப்பேரவையை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மூலம் தகர்ப்போம் என மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். டெல்லி சட்டப் பேரவை அலுவலகம் மற்றும் சபாநாயகர் விஜேந்திர குப்தாவுக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். முழுவதும் இந்தியில் அனுப்பப்பட்ட அந்த இ-மெயிலில் கூறியிருப்பதாவது: பிராமணராக இருக்கும் எஸ்.வி.சேகர் திமுகவில் சேர்ந்துள்ளார். அவரை பாஜக.,வின் பிராமின் ஏஜென்டாக நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். அதனால்தான் டெல்லி சட்டப்பேரவையை நாங்கள் 15 ஆர்டிஎக்ஸ்...
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர். அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய...
மேற்கு வங்​க தலைமை செயலகத்​தில் கால் வைக்க மாட்​டேன் என்று 1993-ல் போட்ட சபதத்தை 2011-ல் முதல்வ​ராக நிறைவேற்​றி​னார் முதல்​வர் மம்தா பானர்​ஜி. கடந்த 1993-ல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்​தார் மம்தா பானர்​ஜி. மக்​களவை எம்.பி.யான அவர் அப்​போதைய பிரதமர் நரசிம்​ம​ராவ் அமைச்​சர​வை​யிலும் இடம்​பெற்​றிருந்​தார். செல்​லும் இடங்களிலும் அவரது பேச்​சுக்கு வரவேற்பு இருந்​தது. கட்​சி​யின் ஃபயர் ​பி​ராண்ட் லீட​ராக அவர் செயல்​பட்டு வந்​தார். இந்​நிலை​யில் 1993ம் ஆண்டு மே மாதம் மேற்கு...
நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்​த​வும், மகளிருக்கு 273 இடங்​களை ஒதுக்​கும் வகை​யில் மொத்த மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்​த​வும் வழி​வகுக்​கும் வரைவு மசோ​தாக்​களுக்கு மத்​திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது. இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்க ஏப்​.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளு​மன்​றக் கூட்​டத்தை மத்​திய அரசு கூட்டி​யுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்​கம்,...
மத்​திய பிரதேசத்​தின் பர்​ஹான்​பூர் மாவட்​டம் போர்​சர் கிராமத்​தில் தரக்​குறை​வான வார்த்​தைகளைப் பேசி​னால் ரூ.500 அபராதம் அல்​லது ஒரு மணி நேரம் கட்​டா​யத் துப்​புர​வுப் பணி என்ற விதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கான முடிவு கிராம பஞ்​சா​யத்​தால் ஒரு​மன​தாக எடுக்​கப்​படுள்​ளது. இந்த விதி​முறை தொடர்​பான சுவரொட்​டிகள் கிராமம் முழு​வதும் ஒட்​டப்​பட்​டுள்​ளன. பொது நடத்​தையை ஒழுங்​குபடுத்​த​வும், தரக்​குறை​வான வார்த்தை பயன்​பாட்​டால் ஏற்​படும் மோதல்​களைக் குறைக்​க​வும் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து கிராமத் துணைத் தலை​வர்...
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டம், பத்நகர் தாலுகா, ஜலாரியா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் பாகீரத் என்ற 2 வயது சிறுவன் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். சிறுவனை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "தண்ணீர் நிரம்பிய ஆழ்துளைக் கிணற்றில் 75 அடி ஆழத்தில்...