கடந்த 2 ஆண்டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் மேற்குவங்கம், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அங்கிருந்து இவர்கள் தென்மாநிலங்களுக்கும் ஊடுருவி வருகின்றனர். இதைத் தடுக்க மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அசாம் மாநில அரசு, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச...
கடந்த 2025ம் ஆண்டு யூடியூபில் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சமய் ரெய்னா மற்றும் பிற நகைச்சுவை கலைஞர்கள் 4 பேர், பார்வையற்றவர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை மிகவும் இழிவாக பேசி கேலி செய்தனர்.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த 5 பேர் மீதும்...
அரசின் பல்வேறு சேவைகளை வழங்கும் UMANG தள பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை பகிர்ந்துள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை UMANG தளம் மூலம் பயனர்கள் பெற முடியும். சுமார் 2,400 சேவைகளை இதன் கீழ் பயனர்கள் பெற முடியும். இதை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் அந்த பயனர்களின் எண்ணற்ற தரவுகள் கசிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் UMANG...
உத்தர பிரதேசத்தின் மகாராஜ் கஞ்ச் மாவட்டம், சோனாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேபாள எல்லையில் மத்திய பாதுகாப்பு படையினர் கடந்த சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நேபாள எல்லைக்குள் நுழைய முயன்ற ஒருவரை மடக்கிப் பிடித்தனர். உ.பி. காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து மகாராஜ்கஞ்ச் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜோர்டான்...
வாட்ஸ்-அப் தகவலை நம்பி கிரிப்டோ கும்பலிடம் ரூ.21 கோடியை இழந்த பட்டய கணக்காளர் – ம.பி போலீஸ் விசாரணை
admin - 0
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது பட்டயக் கணக்காளர் (சிஏ) அசோக் விஜயவர்கியா. இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாட்ஸ்- அப் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது.
திவ்யா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், தான் ஒரு முதலீட்டு ஆலோசகர் எனக் கூறியுள்ளார். அவர் ‘USDT டெதர்’ என்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம்...
குடியுரிமை விவகாரத்தில் நியாயமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்ட 27 நபர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.
அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை வெளியேற்றும் நோக்கில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பாயங்களால் 27 நபர்கள் அந்நிய நாட்டவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். மேலும், இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்றமும் தீர்ப்பாயங்களின் தீர்ப்பை உறுதிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், அந்நிய...
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடந்துள்ள நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தராகண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேதார்நாத் கோயில் நிர்வாகத்தில் விஐபி விருந்தினர்களின் தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவுகளுக்காகக் கோயிலின் பொது நிதியிலிருந்து முறையான ஒப்புதல் பெறாமல் முன்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது நிதி நிர்வாகத்தில் நடந்துள்ள மிகப்பெரிய விதிமீறல் என முதற்கட்ட விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ளது.
இது...
கர்நாடகா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா சஹுகர், தனது மகள் சுமாவுக்குச் சட்டவிரோதமாக போலி சாதிச் சான்றிதழை சமர்ப்பித்து அரசு வேலை பெற்றுத் தந்ததாக கடந்த ஜனவரியில் புகார் எழுந்தது.
சஹூகர் லட்சக் கணக்கில் ஊதியம் பெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் ரூ.40 ஆயிரம் மட்டுமே எனக் குறிப்பிட்டு, கிரீமி லேயர் வரம்பை தளர்த்தி, போலி வருமானச் சான்றிதழை அவரது மகள் சமர்ப்பித்தது...
சிறையிலேயே பாஜக கவுன்சிலர் பதவியேற்கலாம்: மக்கள் தீர்ப்பை நிராகரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
பாஜக கவுன்சிலர் சுகதன் சிறையிலேயே பதவியேற்கலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநராட்சியை பாஜக கைப்பற்றியது. புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது பாஜகவை சேர்ந்த 20 கவுன்சிலர்கள், உள்ளூர் தெய்வங்களின் பெயரில் உறுதிமொழி ஏற்றனர். இது சட்டப்படி செல்லாது, 20 கவுன்சிலர்களும் புதிதாக பதவியேற்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி 19 கவுன்சிலர்கள் சட்டப்பூர்வமாக பதவியேற்றுக்...
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் ஏசி வகுப்பு பயணிகளில் சிலர், தங்களுக்கு வழங்கப்படும் பெட்சீட் மற்றும் துண்டுகளைத் திருடிச் செல்லும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான பெட்சீட், போர்வைகள் மற்றும் துண்டுகள் திருடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் தினமும் இரவில் சுமார் 8...










