கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், கூட்டம் மேலும் அதிகரித்தது.
இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். கோடை காலத்தில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கடந்த மே 1-ம் தேதி முதல்...
அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியா – வியட்நாம் இணைந்து பாடுபடும்: பிரதமர் மோடி அறிவிப்பு
admin - 0
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வருகை தந்துள்ள வியட்நாம் அதிபர் டோ லாம் மற்றும் பிரதமர் மோடி இடையிலான உயர்நிலை குழுப் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உறவுகளைப்...
பாஜகவின் 6-ல் ஒரு மக்களவை எம்.பி. வாக்குத் திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்: ராகுல் காந்தி விமர்சனம்
admin - 0
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் இடங்களைக் கைப்பற்றவும், சில நேரங்களில் ஒட்டுமொத்த அரசுகளையே கவிழ்க்கவும் வாக்குகள் திருடப்படுகின்றன.
மக்களவையில் உள்ள 240 பாஜக எம்.பி.க்களில், தோராயமாக ஒவ்வொரு 6-வது எம்.பி.யும் (6-ல் ஒருவர்) வாக்குத் திருட்டு மூலமே வெற்றி பெற்றுள்ளார். அவர்களைக் கண்டறிவது கடினமல்ல. பாஜக பாணியிலேயே அவர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று அழைக்கலாமா ? ஹரியானாவைப்...
பத்தாயிரம் கி.மீ. வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயாராக உள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-6’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயாராக இருப்பதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக தனது அதிகாரப்பூர்வ...
அசாம் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக இக்கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இதனிடையே, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்துக்கான மத்தியப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் பாஜகவின் மத்தியப் பார்வையாளர்கள் குவாஹாட்டிக்கு வருவார்கள் என்றும், அதன்...
மேற்கு வங்கத்தில் பாஜக அபார வெற்றிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து; பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
admin - 0
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.
பிரிட்டனை சேர்ந்த பிபிசி, ‘‘மோடியின் பாஜக வங்கத்தை வென்றிருக்கிறது’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது. பல்வேறு சவால்கள் நிறைந்த மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது மோடி ஆட்சியின் முக்கிய மைல்கல் என்று பிபிசி...
ஜம்மு- காஷ்மீரில் ‘போதைப் பொருள் இல்லாத ஜம்மு- காஷ்மீர் அபியான்' திட்டத்தின் கீழ், போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காஷ்மீர் மண்டலத்தில் ரூ.12.66 லட்சம் மதிப்பிலான 6...
இந்தியா மற்றும் ஜமைக்கா நாடுகளுக்கு இடையே பல் வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜமைக்கா நாட்டுக்கு 9 நாள் பயணமாகச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் காமினா ஜே.ஸ்மித்தை திங்கள்கிழமை சந்தித்து விரிவாகப் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெய்சங்கர் கூறியதாவது: டிஜிட்டல் பரிமாற்றம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆகிய துறைகளில் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கரீபியன் நாடுகளுக்கான...
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.யானார். இதனால் முதல்வராக பாஜக மூத்த தலைவர் சாம்ராட் சவுத்ரி பிஹாரின் புதிய முதல்வராக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். இந்த சூழலில் பிஹார் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
பாஜகவை சேர்ந்த 12 பேர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த...
வியட்நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிஹார் மாநிலம் கயாவுக்கு அவர் வருகை தந்தார். இதையொட்டி கயா விமான நிலையத்துக்குச் சென்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதல்வர் சாம்ராட் கூறும்போது, “வியட்நாம் அதிபரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலுவாகவும், பிணைப்பாகவும் உள்ள இந்தியா-வியட்நாம் உறவுகளை சந்தேகமின்றி...










