மேற்குவங்கத்தில் 207 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் கிடைத்துள்ளன.
மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவியது.
ஒரு தொகுதியில் மறுதேர்தல்: கடந்த...
கேரள சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் 140 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும்(எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) கடும் போட்டி இருந்தது.
மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27...
ஐந்து மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத், நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்சத்பாய் கோவிந்த்பாய் பர்மர் வெற்றி பெற்றார். நாகாலாந்து கோரிடாங் தொகுதியில்...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வெளியிட்டுள்ள செய்தியில், ”தமிழ்நாட்டில் விஜய் பெரும்பான்மையான மக்களின் மனதை வென்று, வெற்றிக் கனியை பறித்துள்ளார். கட்சியை தொடங்கிய சிறிது காலத்திலேயே மாபெரும் வெற்றியை ருசித்த விஜய்யை நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், கல்வி அமைச்சருமான லோகேஷ் தனது...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்டையை பாஜக தகர்த்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ல் டிஎம்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக திகழ்ந்த பகுதிகளைத் தகர்த்து, மம்தா பானர்ஜி வரலாற்றுச் சாதனை படைத்தார். எனினும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டிஎம்சிக்கு எதிராக, ‘ஆட்சியாளர் மீதான அதிருப்தி அலை' உருவானது.
மேற்கு வங்கத்தில் சுமார்...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 144 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில்...
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி...
“எங்கள் கண் முன்னே மரணத்தை கண்டோம்” – ம.பி. ஜபல்பூர் படகு விபத்தில் உயிர் தப்பியவர்கள் வாக்குமூலம்
admin - 0
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்குள்ளானதில், பல குடும்பங்கள் தங்களின் உறவினர்களைப் பறிகொடுத்துப் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
மகிழ்ச்சியாக தொடங்கிய அந்த சுற்றுலாப் பயணம், மரணப் போராட்டமாக மாறிய துயரமான தருணங்களை விபத்தில் உயிர் தப்பியவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11-ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின்போது மேலும் இரண்டு...
ரீல்ஸ் எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய உ.பி. இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு: விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் 2 பேர் மீட்பு
admin - 0
உத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக மேல்நிலை தண்ணீர் தொட்டி மீது ஏறி, இறங்க முடியாமல் தவித்த இளைஞர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மீது நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் 5 இளைஞர்கள் ஏறி உள்ளனர். சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்' எடுக்க அந்தத் தண்ணீர் தொட்டியின் மீது ஏறியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின்...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 90+ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் இக்கூட்டணி கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 92 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து...










