Google search engine
இந்​தியா - அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்பந்தப் பேச்​சு​வார்த்தை 99% நிறைவடைந்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் கூறி​னார். இந்​தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பான பேச்​சு​வார்த்தை பல மாதங்​களாக நடை​பெற்று வருகிறது. இதில் முதல்​கட்​ட​மாக ஒரு இடைக்​கால ஏற்​பா​டாக இரு தரப்​புக்​கும் இடையே தற்​காலிக வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்படுத்தப்படும் என்​றும் பிறகு நிரந்தர வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்​றும் இரு நாடு​களும் அறி​வித்​தன. இந்​நிலை​யில் இந்​தியா...
திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று நடந்த கூட்​டத்தை அந்த கட்​சி​யின் 60 எம்எல்​ஏக்​கள் புறக்​கணித்​தனர். மேற்​கு ​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்த சூழலில் திரிண​மூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்​ஜி, கல்​யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்​பாக கட்சி எம்​எல்​ஏக்​கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்​தார். இதன்​படி கொல்​கத்​தா​வில்...
தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் கடந்த மே 22, 27-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் -ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர்,...
 நீட் மறுதேர்வை கணினி வழி முறையில் நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய சூழலில் தேர்வு முறையை மாற்றுவது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறி நிராகரித்தது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பிஹார், கேரளம்,...
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங் பிரதமர் மோடியைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அதிக ஒத்துழைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களிடம்...
ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று மதியம் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கியது. பிகானேர் பகுதியில் நேற்று மதியம் வீசிய புழுதிப் புயலில், பகல் நேரம் இருள் போல காட்சியளித்தது. மிகப்பெரிய மஞ்சள் புழுதிப் புயல் நகரத்தை நோக்கி முன்னேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த புழுதிப் புயல் காரணமாக பிகானேரின் முக்கிய சாலைகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்கு காட்சித் திறன் கடுமையாக பாதித்தது. மஞ்சள் நிற...
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக டெல்லியைச் சேர்ந்த நயாதி ஹெல்த் கேட் மற்றும் ஆக்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அதன் சேர்மேன் நீரா ராடியா ரூ.1.13 கோடி மதிப்பிலான பேட்டரி பேருந்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கினார். மேலும், ஏஐ கமாண்ட் கண்ட்ரோல் அறையில் உபயோகிக்க 15 ஆப்பிள் நிறுவன ‘டேப்’-களையும் நன்கொடையாக வழங்கினார். திருமலையில் 20 இலவச பேருந்துகள் உள்ளதாகவும், அதில் 14 எலக்ட்ரிக் பேருந்துகள் எனவும் ‘தர்ம...
 ஆந்​தி​ரா​வில் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள நகைகளு​டன் சாலை​யில் கிடந்த பையை கண்​டெடுத்த தொழிலாளி ஒரு​வர் அதை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தார். ஆந்​திர மாநிலத்​தின் மேற்கு கோதாவரி மாவட்​டம், மன்​டபேட்டா கிராமத்​தைச் சேர்ந்த கிருஷ்ணம் ராஜு என்​பவரின் மகள் ஸ்ரீலே​கா, தனது குடும்​பத்​தா​ருடன் ஒரு திருமண நிகழ்ச்​சிக்​காக லக்​கவரம் கிராமத்​துக்கு ஆட்​டோ​வில் சென்​றார். திருமண வீட்​டுக்​குச் சென்ற ஸ்ரீலே​கா, தன்​னிட​மிருந்து ஒரு பையை காணாத​தால் அதிர்ச்சி அடைந்​தார். இதுகுறித்து மன்​டபேட்டா காவல் நிலை​யத்​தில்...
நீட், சிபிஎஸ்இ, எஸ்​எஸ்​சி, கியூட் ஆகிய 4 தேர்​வு​களின் குளறு​படி​யால் ஒரு கோடி பேர் பாதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்சாட்டி உள்​ளார். மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​த​தால் இந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு ஜூன் 21-ம் தேதி மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழு​திய மாணவ, மாண​வியரின் விடைத்​தாள் டிஜிட்​டல்...
வியட்​நாமை தொடர்ந்​து, இந்தோனேசியா​வுக்​கும் இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் (ஒலியை விட அதிவேக​மாகச் செல்​லும்) ஏவுகணைகளை ஏற்றுமதி செய்​வதற்​கான ஒப்​பந்​தம் இறு​திக்​கட்​டத்தை எட்டியுள்ளதாக மத்​திய பாது​காப்​புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரி​வித்​துள்​ளார். சிங்​கப்​பூரில் நடை​பெற்ற ‘ஷாங்​ரி-லா பாது​காப்பு உச்சி மாநாட்டில் பங்​கேற்​ற​போது அவர் இதுகுறித்து கூறுகை​யில், ‘‘வியட்​நாம் நாட்​டுட​னான பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை ஒப்பந்​தம் ஏற்​க​னவே கையெழுத்​தாகி​விட்​டது. எனினும், இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு இன்​னும் பொது​வெளி​யில்...