அசாம் மாநிலத்தின் சிவசாகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக பெண் தலைவர் முனைவர் உதிதா தியாகி, கட்சியின் மகளிர் பிரிவிலும் ‘மகா காளி வாஹினி’யின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், துறவிகள் அமைப்பான ‘ஜுனா அஹாரா’ இவரை மகா மண்டலேஸ்வராக நியமித்துள்ளது. மேலும், ‘யாதி மா பிரத்யங்கிரா கிரி’ என்ற புதிய பெயரையும் உதிதாவுக்கு சூட்டியுள்ளது. ஹரித்வாரின் கன்காலில் உள்ள ஹரிஹர் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜுனா அஹாராவின் மூத்த துறவி ஆச்சார்ய மகா மண்டலேஸ்வர் சுவாமி அவ்தேஷானந்த்...
சிக்கிம் மாநிலத்தில் நீர்மின்சார திட்ட சுரங்கப் பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டம், சமர்துங் பகுதியில் தேசிய நீர்மின்சக்தி கழகம் (என்எச்பிசி) சார்பில் தீஸ்தா நதி மீது 34.5 மீட்டர் உயர அணையுடன் கூடிய மின்னுற்பத்தி நிலையம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணியை படேல் இன்ஜினீயரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் நீர்மின் திட்ட சுரங்கப் பாதைக்குள் கடந்த திங்கட்கிழமை மதியம்...
செயற்கை நுண்ணறிவு மூலம் போலி வங்கி செயலிகளை உருவாக்கிய இளைஞர் குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஹித் வீரேந்திர சிங்க்கை குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர், சைபர் கிரிமினல்களுக்கு உதவும் வகையில் போலியான வங்கி செயலிகளை உருவாக்கியுள்ளார். இதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அப்ளிகேஷன்களை பயன்படுத்தியுள்ளார். ரோஹித், கான்பூரில் 11-ம்...
நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மேலும், இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளை தடுப்பது தேசிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மங்கள் மிலன் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நீட் வினாத்தாள் கசிவு குறித்தும், அதை...
பிரதமர் மோடியின் அரசு இல்லத்தின் முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் நாடளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி சென்றனர். அவர்களைப் போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் ராஜேந்திரா நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மூதாட்டி ஒருவர் வீட்டில் சேகரமான தினசரி குப்பையை அவ்வழியாக வந்த மாநகராட்சிக் குப்பை சேகரிப்பு வாகனத்தில் போட்டார்.
அப்போது தவறுதலாக ஆன்மீக சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் 2 கிலோ வெள்ளிக் குவளை இருந்த பையையும் அதில் போட்டுவிட்டார். இதை குடும்பத்தினர் உணர்வதற்குள் நகரின் குப்பை மாற்றும் நிலையத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, பிறகு அங்கிருந்து திடக்கழிவு மேலாண்மை நிலையத்துக்கு அனுப்பி...
சிக்கிமில் மீத்தேன் வாயு கசிவால் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
admin - 0
சிக்கிம் மாநிலம் சாமர்டங் பகுதியில் ‘டீஸ்டா ஸ்டேஜ் VI’ நீர்மின் திட்டப் பணிகளுக்காக படேல் இன்ஜினியரிங் நிறுவனம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 3:09 மணியளவில், வழக்கம் போல் சுரங்கப்பாதையைத் தோண்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது பாறைகளுக்குள் அடைபட்டிருந்த மீத்தேன் வாயு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த எதிர்பாராத விபத்தில் இதுவரை...
கொல்கத்தாவில் ஒரே நாளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பேரணியும், திரிணமூல் அதிருப்தி அணியினர் கலந்துகொண்ட பேரணியும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.
தேர்தலுக்குப் பின்னர் மம்தா தலைமை மீது அதிருப்தி கொண்ட 58 எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகி...
இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சிஜேபி அமைப்பின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல...










