வினாத்தாள் கசிவு தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,...
நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்களை சிறப்பு விரைவு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் தினேஷ் பிவால், விகாஸ் பிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என ஜூலை 23 அன்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம்,...
“பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
admin - 0
காஷ்மீரில் 1999-ம் ஆண்டு மே மாதம் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கார்கில் போரின் 27-ம் ஆண்டு வெற்றி தின நிகழ்ச்சி லடாக்கின் கார்கில் போர் நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை...
“மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” – ராகுல் காந்தி
admin - 0
“டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் நேற்று அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது.
தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் 48-வது அமர்வில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், யுனெஸ் கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறும் இந்தியாவின் 45-வது இடமாக சாரநாத் பெருமை பெற்றுள்ளது.
முன்னதாக, 2025-26 தேர்வுச் சுற்றுக்காக ‘பழமையான...
சிஜேபி போராட்ட ‘பின்புலச் சதி’யை என்ஐஏ விசாரிக்க கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஐகோர்ட்
admin - 0
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த 20-ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூலை 23) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...
“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி” – மவுனம் கலைத்த பிரதமர் மோடி உறுதி
admin - 0
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கத்தினர் கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியை மேற்கொள்ள முயன்றபோது அதை...
வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்துள்ள சிஜேபி, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதேவேளையில், “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகவும் உறுதியாகவும் உள்ளது.” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி...
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு
admin - 0
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட வழக்கில், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இரு குற்றவாளிகளின் 20 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பில் எந்தவொரு சட்டமீறலும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்ற பிரபல நடிகை கடத்தப்பட்டு ஓடும்...
பசுமைப் பட்டாசின் பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும், சரவெடி தயாரிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து அதிக காற்று மாசுவை ஏற்படுத்தும் பேரியம் என்ற வேதிப்பொருள் இல்லாமல் நாடு முழுவதும் பசுமை பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், பசுமை பட்டாசு...










