Google search engine
நீட் தேர்வு போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்​று மத்​திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ரான போராட்​டத்​தின்​போது, காவல்​துறை​யினர் பெல்​லட் குண்​டு​கள், கண்​ணீர்ப் புகை குண்​டு​களை பயன்​படுத்தி மாணவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக புகார் எழுந்​தது. அத்​து​மீறிய காவல் ​துறை​யினர் மீது நடவடிக்கை எடுக்கக்​கோரி தொடரப்பட்ட வழக்​கு​கள் உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா...
கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று காலையில் டெல்லி சென்​றார். மேகே​தாட்டு அணை திட்​டம், மகதாயி அணை திட்​டம் ஆகிய​வ‌ற்​றுக்கு மத்​திய அரசின் அனுமதி பெறு​வது குறித்து நீர்ப்​பாசன துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி, தலைமை வழக்​கறிஞர் சசிகிரண் ஷெட்​டி, உச்ச நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்​தி​னார். பிறகு காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் இல்​லத்​தில் மேகே​தாட்டு விவ​காரம், காவிரி நீர் பங்​கீட்டு பிரச்சினை, வறட்சி நில​வரம் குறித்து...
பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 9-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண் 306ன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை...
டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர். இதில் தமிழக அரசின் தரப்​பில், “உச்​ச நீ​தி​மன்​றத்​தின் தீர்ப்பின்படி கர்​நாடகா காவிரி​யில் தமிழகத்​திற்கு வழங்க வேண்டிய நீரை மாத​வாரி​யாக வழங்​க​வில்​லை. இதனால் பாசனத்​திற்​காக மேட்​டூர் அணை இன்​னும் திறக்​கப்​பட​வில்​லை. எனவே கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங்க...
பிரதமர் நரேந்​திர மோடி​யின் வீடியோ பேஸ்புக்​கில் இருந்து நீக்​கப்​பட்​டது தொடர்​பாக மெட்டா நிறு​வனத்​துக்கு மத்திய அரசு சம்​மன் அனுப்பி உள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி ஜந்​தர் மந்தரில் இளைஞர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது தொடர்​பாக கடந்த 23-ம் தேதி நள்​ளிர​வில் பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், “வி​னாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா விரை​வில்...
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் இன்று (ஜூலை 27) அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதாவை அறிமுகப்படுத்தினார். மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ம் நாளான இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள்...
“அறவழியில் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அமைதியான போராட்டங்கள் மீது இது மாதிரியான நடவடிக்கை கூடாது.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய சூழலில் அதற்கு உச்ச நீதிமன்றம் இவ்வாறாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட்...
“டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களை தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், மாணவர்கள் மீது அல்ல” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக அப்பட்டமான கொலைவெறியைக் கொண்டுள்ளது. பிஹாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே-47 ரக துப்பாக்கிக் குண்டுகள்...
நீட் தேர்வுக்கு எ​தி​ராகப் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீதான வழக்குகளை திரும்​பப் பெறாவிட்டால் மீண்டும் தொடர் போராட்​டத்​தில் ஈடுபடுவோம் என்​றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மத்​திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்​துள்​ளது. இது தொடர்​பாக சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் அசுதோஷ் ரங்கா நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: வினாத்தாள் கசிவுக்கு எதி​ராகப் போராடிய மாணவர்​கள் மீது வழக்​கு​கள் எது​வும் பதிவு செய்​யப்​ப​டாது என்​றும், நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் திரும்​பப் பெறப்​படும்...
போட்​டித் தேர்​வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃ​போசிஸ் இணை நிறு​வனர் நந்​தன் நிலேகனி தலை​மை​யில் உயர் நிலைக் குழு அமைக்​கப்​பட்டு உள்ளது. இந்த குழு​வில் இஸ்ரோ முன்​னாள் தலை​வர் சோம் நாத், இந்​திய உளவுத் துறை முன்​னாள் இயக்​குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, கல்​வித்​துறை முன்​னாள் செயலர் அனிதா கர்​வால், போக்​கு​வரத்து துறை நிபுணர் அம்​ரித் லால் மீனா ஆகியோர் நியமிக்​கப்​பட்டு உள்​ளனர். பெரும்​பாலான போட்​டித் தேர்​வு​கள்,...