அசாம் மாநிலத்தின் சிவசாகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.















