Google search engine

விளவங்கோடு: காங்கிரஸ் வேட்பாளர் டி டி பிரபின் வெற்றி

விளவங்கோடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டி.டி. பிரவீன் 69,378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் மிக்கேல் குமார் 49,028 வாக்குகளுடனும், பாஜக வேட்பாளர் விஜயதரணி 44,676 வாக்குகளுடனும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...

தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும். நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ, நீண்டகரை - பி, வேம்பனூர் ஆகிய வருவாய் கிராமங்கள் இத்தொகுதியின் கீழ் வரும். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியும் இதில்...

குமரி: வாக்கு எண்ணும் மையத்திற்குள் கடும் சோதனைக்கு பின் அனுமதி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் குமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும்...

இரணியல்: கர்ப்பிணி பெண் திடீர் மரணம் – விசாரணை

கண்டன்விளை பகுதியை சேர்ந்த ஆஸ்கிலின் மினி (29) என்ற 2 மாத கர்ப்பிணி பெண், நேற்று அதிகாலை 3.40 மணியளவில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரை சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் வசிக்கும்...

தக்கலை: வக்கீல் வீடு புகுந்து தாக்கிய நா த க வினர் – கைது

சென்னையில் வக்கீலாக பணிபுரியும் கோழிப்போர் பகுதியை சேர்ந்த நெல்சன் (24) என்பவரை, சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜா பேரோன் உள்ளிட்ட 4 பேர் நேற்று அவரது வீட்டிற்கு வந்து தகராறு செய்து தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு மக்கள் திரண்டதும் கும்பல்...

திருவட்டாறு: கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை ; வாலிபர் கைது

திருவட்டாறு அருகே, ஏசி மெக்கானிக் ராஜேஷ் குமார் (32) என்பவர், ஒரு வீட்டில் ஏசி பழுது பார்க்க சென்றபோது, 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியான சைகை காட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி தனது பாட்டியிடம் கூறியதை அடுத்து, திருவட்டார் காவல் நிலையத்தில் புகார்...

நித்திரவிளை: மீன்பிடி தொழிலாளி மீது தாக்கு – வழக்கு

பூத்துறை, காருண்யபுரம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சைலன் (28), நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்குச் செல்ல ஆட்டோவுக்காக சாலையோரம் காத்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மில்டன் (26) என்பவர் பைக்கில் வந்து ஏன் நிற்கிறாய் எனக் கேட்டு தாக்கியுள்ளார்....

பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை

மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு - சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என எச்சரித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை  பட்டாசு, தீப்பெட்டி போன்ற அபாயகரமான தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் தொழிற்சாலை...

குளச்சல்: கார் மோதி மீன்பிடி தொழிலாளி படுகாயம்

குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த சகாய பிரபின் (34) என்பவர் நேற்று இரவு மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பீச் ரோடு சந்திப்பில் சொகுசு கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர்...

மணவாளக்குறிச்சியில் பைக் மோதி மூதாட்டி படுகாயம்

மணவாளக்குறிச்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்பவர் நேற்று (ஏப்ரல் 29) வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குளச்சல் பூக்குழியைச் சேர்ந்த அன்சாருதீன் (19) ஓட்டிச் சென்ற பைக் மோதி படுகாயமடைந்தார். அவர் முட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி...